மனிதன் ஆரம்பம் ஆவதும் பெண்ண்னு க்குள்ளே ‘
அவன் ஆவி அடங்குவதும் மண்ணு க்குள்ளே
ஆரரய்ந்து பார் மனக்கன் னுகுலே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குகுள்ளே ‘
அருமையான பாடல் வரிகள் ஒரு ஜாதகத்தில் இலக்கினதுக்கு 12 ஆம் பாவத்தில் அயன ,சுக ,போகமும், இந்த உயிர் எப்படி , எங்கு , உயிர் , செல்லும் , மறு பிறவி உண்டா , இல்லையா என்பதையும் ,இந்த ஜாதகருடைய விரயங்கள் ,சுபமா ,அல்லது அசுபமா ,என்பதை இன்னும் பல்வேறு காரகத்துவங்கள் அடங்கி உள்ளன. .
ஊடல் உணர்தல் புணர்தல் இவை
காமம் கூடியார் பெற்ற பயன்
திருவள்ளுவர் குறள் 1009 படி ஊடல் ,உணர்வு ,பெறுதல் ,பின் கூடி மகிழ்தல் , ஆகியவை தலைவனுக்கும் , தலைவிக்குக்கும் ,இன்பம் தரும் செயல்கள் ஆகும் ..
மீன ராசியில் பூரட்டாதி 4, பாதங்களும் உத்திரட்டாதி 1-2-3-4- பாதங்களும் , ரேவதி 1-2-3-4- பாதங்களும் உள்ளன .மேலும் மீனா ராசி என்பது காள ப்ருஷ தத்துவப்படி பாகை ௦ மேஷம் தொடங்கி மீனம்330 TO 360 பாகை வரை உள்ள 12 வது ராசியாகும்
இனி 12 ஆம் ராசி மீன ராசியின் குணங்கள் ;.
மீனம் உபய நீர் ராசி , பெண்ண ராசி , ,ஜீவன் ராசி ,இரட்டை ராசி ,புண்ணிய நதிகள் , நடுத்தர உயரம் ,அழகான முகம் , பொறுமை ,புத்திக் கூர்மை ,சுறுசுறுப்பு , தற்புகழ்ச்சியில் விருப்பம் , ஈரல் வியாதி, பித்த சுபாவம் சிறந்த எழுத்தாளர் ,பேச்சாளர் , ஜோதிடத்தில் நல அறிவு ஆகிய குணங்கள் கொண்டவர்
இனி 12 ஆம் பாவமாகியிய மீன ராசியின் கரரகத்துவங்கள்,
அரசாங்க பதவி , மறைமுகப் பகைவர்கள் ,அவர்களால் ஏற்படும் தொல்லைகள் ,உள் நாடு , வெளி நாடு , கடல் கடந்த பயணம் ,தூக்கம் இல்லாமை ,தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் இடம் ஆகும்
இனி 12 ஆம் பாவம் எந்த ராசி & எந்த லக்னம் ஆனாலும் பொதுப் பலன்கள்
* முதலில் தந்தையின் ஸ்தானமாகிய 9 – க்கு 4 ஆம் 12 ஆம் ஆகும் இதன் மூலம் தந்தையின் சுகம் வீடு ,வண்டி, வீடு ,வாகனம் ,தாயார் நிலை கற்பு ,ஓழுக்கம் ,மனைவியின் தொழில் ,வருமானம் முதலியவைகளை 12 ஆம் பாவம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
* தாயின் 4 ஆம் பாவத்திற்கு 9- ஆம் பாவம் 12 – ஆகும் , இதன் தாயின் பாக்கியம் , கடவுள் நம்பிக்கை , தொழில் செய்து ,பணம் சம்பாதிப்பரா , அல்லது வீடடு தலைவியா முதலியவைகளை 12 ஆம் பாவம் மூலம் தெரிந்து கொள்ளலாம் .
* இனி மூத்த சகோதர , சகோதரி ஸ்தானமாகிய 11 – க்கு 2 - ஆம் பாவம் ஆகும் இதன் மூலம் கண் ,தனம் ,குடும்பம் , நிலைகளை வாக்கு ,குடும்ப தெரிந்து கொள்ளலாம் .
* இனி இளைய சகோதர , சகோதரி ஸ்தானமாகிய 3 –க்கு-10- ஆம் 12- ஆம் இடம் ஆகும் , இதன் மூலம் வருமானம் ,தொழில் ,ஜீவன் ,கர்மா ,மனைவியின் ,சுகம் , வீடு ,கற்பு , நிலைகளை தெரிந்து கொள்ளலாம் .
* இனி தாய் மாமன் ஸ்தானம் ஆகிய 5 ஆம் 8 – ஆம் இடம் 12 ஆகும் ,இதன் மூலம் ஆயுள் ,விபத்து , கண்டம் திடீர் இராஜயோகம் , தாய் மாமனின் மனைவியின் படிப்பு , கண் ,குடும்ப நிலை தனம் , தெரிந்து கொள்ளலாம் ஏன் எனில் 5 –க்கு 7 –ஆம் 11 –என்பது அத்தை க்கு 2- ஆம் பாவம் 12 – ஆகும்
* இனி இறுதியாக மனைவிககு வரும் நோய் ,கடன் செய்வினை கோளாறுகள் உழைப்பு நிலைகளை தெரிந்து கொள்ளலாம் . ஏன் எனில் 7 –க்கு -6 – ஆம் இடம் 12 ஆகும் .
மரணத்திற்கு பின் உயிர் சென்று அடையும் இடங்கள் ;
* 12 க்கு உடையவன் குரு,சுக்கிரன் ,என்றால் – தான் வணங்கும் தேவதை யின் உலகம் – சூரி – இராஜயோகம் , சந் – பிதுர் லோகம் , செவ்வாய் – வீர சொர்க்கம் ,12 – புதன் – பரி பூரணமாக சுதந்திரம்தான் பெற்று எங்கு நினைததாளும் செல்லும் , சனி ,ராகு ,கேது இருந்தால் எமனூர் என்னும் ‘பிரம்மலோகம் ‘ செல்லும் வானு உலகில் ‘மறவியூர் ‘என்னும் விண்ணுலகம் செல்வர்
புல் தரையில் சயனிக்க ;
* 12 க்கு உடையவன் 6 அல்லது 8 – இல் அமர ராகு 12 இல் இருந்து சுபர் பார்வை செய்யாவிடில் மெலும் புல் தரை சயனம் ஆகும் .
தேடிய பொருளை புதைத்து வைப்பான் ;
* 12 ஆம் வீட்டுக்கு உடையவன் பாவிகளுடன் சேர்ந்து,சுபர் வீட்டில் இருந்தாலும் ,கூடினாலும் , பார்த்தாலும் ,12 க்கு உடையவர் 12 இல் அமர பொருள் அதிகம் தேடி , ஒருவருக்கும் கொடுக்காமல் புதைத்து வைப்பான்.
பொருளை வைத்த இடம் தெரியாமல் விழித்தல் ;
* 12 இல் செவ்வாய் தனித்து நிற்க அல்லது 12 ஆம் வீட்டை பார்க்க ,தேடி புதைத்து வைத்த பொருளை ,வைத்த இடம் தெரியாமல்மறந்து இழப்பான் என்பதாம்