Astrology Discussions

✳ லக்னத்திற்கு 4,7 ஆகிய கேந்திரங்களில் சுபக் கிரகங்கள் சேர்ந்து நிற்கப் பிறந்த ஜாதகன் பொன் பொருள் மற்றும் கோடி ரூபாய் சம்பாதிக்கும் திறம் பெற்று சிறப்புடன் வாழ்வான். பலவித வாகனம் பெற்று பெருமை அடைவான். * லக்னத்திற்கு 4ம் இடம் சர ராசியாக அமைய அதில் ஒரு கிரகம் நின்றால் அந்த ஜாதகன் அரசனுக்குரிய ஆடம்பர வாழ்க்கை பெற்று யோகவானாக விளங்குவான். பெரியவர்களின் தொடர்பு பெற்று அரசாங்கத்தால் விருது மற்றும் பொருள் பெறுவான். இனிய மனைவி அமைந்து சுக ஜீவனம் செய்வான். * செவ்வாய், சனி, ராகு இவர்கள் ஒரே வீட்டில் கூடி நின்றால் பெண்களால் தன லாபம் உண்டாகும். வீடு கட்டை சுகத்துடன் வாழ்வான். எனினும் தீய தசைகள் நடக்கும் போது இந்த சேர்க்கையினால் சிற்சில துன்பங்களும் உண்டாகும். * பத்தாம் இடத்தில் 3 கிரகங்கள் இருக்கப்பெற்ற ஜாதகன் உலகம் புகழும் சன்னியாசியாக விளங்குவான். இரண்டு கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகன் தபசியாகவும் ஞானியாகவும் யோகியாகவும் இருந்து மக்களுக்கு அருள் புரிவான். * 4ம் வீட்டிற்கு அதிபதியும் சந்திரனுக்கு நான்கிற்குடையோனும் எந்த ராசியில் கூடி நின்றாலும் மேலும் சுக்கிரன் பலம் பெற அந்த ஜாதகன் தேவி பராசக்தியாகிய துர்கையின் மீது பற்று கொண்டு பூஜை செய்து தேவி அனுக்கிரகம் பெறுவான். கொடியவர்களில் சூழ்ச்சிகள் இவனிடம் பலிக்காமல் இவன் வெற்றி கொள்வான். * ஒரு ராசியில் சுபக்கிரகத்துடன் 4 கோள்கள் நிற்க அதற்கு 4லில் இன்னொருவன் இருக்க அந்த ஜாதகன் தீர்க்க ஆயுளுடன் சுகமாக வாழ்வான். குதிரை, யானை பெற்ற அரசனைப் போல அனேகர் புகழ பொன் பொருள் பெற்று சிறப்பான். * 8க்குடையவன் 12க்குடையவன் செவ்வாய் ஆகிய மூவரும் எந்த இடத்தில் கூடி நின்றாலும் அந்த ஜாதகன் அன்னிய தேசம் செல்வான். அதே சமயத்தில் இவர்களை சந்திரன் பார்த்தால் சில காலம் வெளிநாட்டில் அதிக பணம் ஈட்டி பின்னர் சொந்த தேசத்திற்கு வந்து சுகமுடன் வாழ்வான். * சனி, செவ்வாய், ராகு இவர்கள் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தோனுடன் கூடி நின்றால் அந்த ஜாதகன் சிவ பூஜையில் பிரசித்தி பெற்றவனாவான். மேலும் ஐயனார், காளி, வீரபத்திரன் போன்ற தெய்வங்களை வணங்கி தேவதை அருள் பெற்று வசியம் செய்யும் வித்தையும் அறிந்தவனாவான். * குருவும் சனியும் ராகுவும் சரம் மற்றும் உபய ராசிகளில் நின்றால் அந்த ஜாதகன் சொந்த இருப்பிடத்தை விட்டு தேச சஞ்சாரம் செய்வான். அதே சமயத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று இருந்தால் சொந்த ஊரிலேயே பலகாலம் வசிப்பான். * சிம்ம ராசியில் அசுர குருவான சுக்கிரனும் செவ்வாயும் கூடியிருந்தால் அந்த ஜாதகன் வித்தைகளில் தேர்ச்சி பெற்று சிற்ப சாஸ்திரத்தில் வல்லமையும் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடுபவனாகவும் இருந்து அதிக பொருள் சேர்ப்பான். அன்றியும் அவன் விதவைக்கு வாழ்வளிப்பவனாய் விளங்குவான். * குருவுடன் செவ்வாயும் சுக்கிரனும் சேர அந்த ஜாதகன் நிறைந்த தனங்கள் பெற்று அரசாங்க மரியாதையும் புகழும் அடைவான். செவ்வாயும் புதனும் இணைந்தால் அவன் செல்வச் செழிப்பு மிக்க பண்டிதனாக விளங்குவான். ஆனால் செவ்வாய் புதன் இவர்களுடன் சுக்கிரன் செர்ந்து எங்கு இருந்தாலும் அவனுக்கு அங்க குறைபாடு ஏற்படும். * குரு, சந்திரன், புதன் இவர்கள் சேர்ந்து எங்கு இருந்தாலும் நல்ல அழகும் ஆயுளும் பெற்று செல்வந்தனாகத் திகழ்வான். சுக்கிரன், சந்திரன், புதன் ஆகியோர் சேர துஷ்டனாகவும் காமியாகவும் விளங்குவான். * இரண்டாம் இடத்தில் விரய ஸ்தானதிபதி நின்றால் அந்த ஜாதகன் மாட மாளிகை ஆகிய வீடுகள் கட்டி சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதியாக குரு, சந்திரன், புதன், சுக்கிரன் இவர்கள் சுபஸ்தானங்களில் நிற்க பொன், பொருள் சேரும். இவர்கள் தசா, புக்தியில் நற்பலன்கள் தருவார்கள். * சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஓரிடத்தில் நிற்க அவன் தனவானாகவும் மனைவியிடம் அன்பு கொண்டவனாகவும் இருப்பான். சூரியனும் குருவும் சேர அரசாங்க செல்வாக்கு பெற்று ஐஸ்வர்யத்துடன் வாழ்வான். சூரியனும் சுக்கிரனும் சேர நல்ல மனைவி அமையப்பெற்று தாம்பத்தியம் அனுபவிப்பதில் சிறந்து விளங்குவான். சனியுடன் சுக்கிரன் கூடினால் கணவன் பேச்சை கேட்காத மனைவி வாய்ப்பாள். * சந்திரன், செவ்வாய், புதன், சூரியன், குரு ஆகியோர் சேர்ந்து இருந்தால் தீய பலன்களே உண்டாகும். அவன் பிறரையும் கெடுப்பான். மேலும் சூரியன், செவ்வாய், சனி, சுக்கிரன் ஒரே வீட்டில் கூடினாலும் ஜாதகன் வறுமையில் உழன்று பிச்சை எடுத்து உண்ணும் கதிக்கு ஆளாவான். * புதன், குரு இவர்களுடன் சந்திரன், சுக்கிரன் இவர்கள் பலம் பெற்று சேர்ந்து நிற்க அதிக செல்வமும் பூமியும் பொன்னும் பொருளும் பெற்று சுகமுடன் வாழ்வான். மேற்கண்ட கிரகங்களுடன் சனி சேர அங்க குறைவு ஏற்படும். * குரு, சுக்கிரன், சூரியன், புதன் இவர்கள் இணைந்து நின்றவன் அதிக திரவியங்கள் பெற்று சுக போகங்களை அனுபவிப்பான். குரு, சுக்கிரன், சூரியன், செவ்வாய் இவர்கள் சேர அவனும் செல்வாக்கு படைத்த தலைவனாகவும் தீர்க்க தரிசியாகவும் செல்வம் மிகுந்து வாழ்வான். * செவ்வாய்க்கு 4, 7 ஆகிய இடங்களில் சுக்கிரன் நின்றாலோ அல்லது சுக்கிரனுக்கு 5,7,11 ஆகியவற்றில் செவ்வாய் நின்றாலோ அந்த ஜாதகன் பூமியில் சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதி கேந்திர, கோணத்தில் இருக்க வாகன சேர்க்கையும் சொந்தத் தொழில் மூலம் அனைத்து பாக்கியங்கள் அடைதலும் உண்டாகும். விளை நிலங்களும் சேரும். இதனை இவர்களின் தசா, புக்தி காலங்களில் கொடுப்பார்கள். * குரு, சனி, செவ்வாய், புதன் சேர்ந்து நிற்க சந்திரன், சுக்கிரன் இவர்கள் இணையப்பெற்ற ஜாதகன் புவியியல் சாஸ்திரங்கள் அறிந்தவனாக விளங்குவான். * சந்திரன், சுக்கிரன் ஒன்றுசேர குரு, புதன், செவ்வாய் ஒரிடத்தில் நிற்க அந்த ஜாதகன் பாக்கியசாலி ஆவான். அனேக திரவியமும் செல்வாக்கும் அடைவான். பலரை ஆதரித்து எல்லோராலும் புகழப்படுவான். * குரு, புதன், சனி, செவ்வாய், சந்திரன் ஆகியோர் ஒரே இடத்தில் நிற்கப் பிறந்தவன் துன்பங்களை அனுபவித்து கஷ்ட ஜீவனம் செய்வான். 1. சூரியனுக்கு: சந்திரன், செவ்வாய், குரு இம் மூன்றும் நட்புக் கிரகங்கள். சுக்கிரன், சனி, ராகு, கேது இந்த நான்கும் பகைக் கிரகங்கள் புதன் மட்டும் சமக் கிரகம் 2.சந்திரனுக்கு: சூரியனும் புதனும் நட்புக் கிரகங்கள் ராகுவும், கேதுவும் பகைக் கிரகங்கள்செவ்வாய், குரு, சுக்கிரன், சனி இந்நான்கும் சமக் கிரகங்கள் 3. செவ்வாய்க்கு: சூரியன், சந்திரன், குரு இம் மூன்றும் நட்புக் கிரகங்கள். புதன், ராகு, கேது இம்மூன்றும் பகைக் கிரகங்கள் சுக்கிரனும், சனியும் சம்க் கிரகங்கள் 4. புதனுக்கு: சூரியனும் சுக்கிரனும் நட்புக் கிரகங்கள் சந்திரன் மட்டுமே பகைக் கிரகம்செவ்வாய், குரு, சனி, ராகு, கேது இவ்வைந்தும் சமக் கிரகங்கள் 5. குருவுக்கு: சூரியன், சந்திரன், செவ்வாய் இம் மூன்றும் நட்புக் கிரகங்கள். புதனும், சுக்கிரனும் பகைக் கிரகங்கள் சனி, ராகு, கேது இம்மூன்றும் சமக் கிரகங்கள் 6. சுக்கிரனுக்கு: புதன், சனி, ராகு, கேது இந்த நான்கும் நட்புக் கிரகங்கள் சூரியனும், சந்திரனும் பகைக்கிரகங்கள் செவ்வாயும், குருவும் சமக் கிரகங்கள் 7. சனிக்கு: புதன், சுக்கிரன், ராகு, கேது இந்நான்கும் நட்புக் கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும் பகைக் கிரகங்கள் குரு மட்டும் சமக் கிரகம் 8. இராகுவுக்கும், கேதுவுக்கும்: சுக்கிரனும், சனியும் நட்புக் கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும் பகைக் கிரகங்கள் புதனும், குருவும் சமக் கிரகங்கள் * லக்னத்திற்கு 4,7 ஆகிய கேந்திரங்களில் சுபக் கிரகங்கள் சேர்ந்து நிற்கப் பிறந்த ஜாதகன் பொன் பொருள் மற்றும் கோடி ரூபாய் சம்பாதிக்கும் திறம் பெற்று சிறப்புடன் வாழ்வான். பலவித வாகனம் பெற்று பெருமை அடைவான். * லக்னத்திற்கு 4ம் இடம் சர ராசியாக அமைய அதில் ஒரு கிரகம் நின்றால் அந்த ஜாதகன் அரசனுக்குரிய ஆடம்பர வாழ்க்கை பெற்று யோகவானாக விளங்குவான். பெரியவர்களின் தொடர்பு பெற்று அரசாங்கத்தால் விருது மற்றும் பொருள் பெறுவான். இனிய மனைவி அமைந்து சுக ஜீவனம் செய்வான். * செவ்வாய், சனி, ராகு இவர்கள் ஒரே வீட்டில் கூடி நின்றால் பெண்களால் தன லாபம் உண்டாகும். வீடு கட்டை சுகத்துடன் வாழ்வான். எனினும் தீய தசைகள் நடக்கும் போது இந்த சேர்க்கையினால் சிற்சில துன்பங்களும் உண்டாகும். * பத்தாம் இடத்தில் 3 கிரகங்கள் இருக்கப்பெற்ற ஜாதகன் உலகம் புகழும் சன்னியாசியாக விளங்குவான். இரண்டு கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகன் தபசியாகவும் ஞானியாகவும் யோகியாகவும் இருந்து மக்களுக்கு அருள் புரிவான். * 4ம் வீட்டிற்கு அதிபதியும் சந்திரனுக்கு நான்கிற்குடையோனும் எந்த ராசியில் கூடி நின்றாலும் மேலும் சுக்கிரன் பலம் பெற அந்த ஜாதகன் தேவி பராசக்தியாகிய துர்கையின் மீது பற்று கொண்டு பூஜை செய்து தேவி அனுக்கிரகம் பெறுவான். கொடியவர்களில் சூழ்ச்சிகள் இவனிடம் பலிக்காமல் இவன் வெற்றி கொள்வான். * ஒரு ராசியில் சுபக்கிரகத்துடன் 4 கோள்கள் நிற்க அதற்கு 4லில் இன்னொருவன் இருக்க அந்த ஜாதகன் தீர்க்க ஆயுளுடன் சுகமாக வாழ்வான். குதிரை, யானை பெற்ற அரசனைப் போல அனேகர் புகழ பொன் பொருள் பெற்று சிறப்பான். * 8க்குடையவன் 12க்குடையவன் செவ்வாய் ஆகிய மூவரும் எந்த இடத்தில் கூடி நின்றாலும் அந்த ஜாதகன் அன்னிய தேசம் செல்வான். அதே சமயத்தில் இவர்களை சந்திரன் பார்த்தால் சில காலம் வெளிநாட்டில் அதிக பணம் ஈட்டி பின்னர் சொந்த தேசத்திற்கு வந்து சுகமுடன் வாழ்வான். * சனி, செவ்வாய், ராகு இவர்கள் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தோனுடன் கூடி நின்றால் அந்த ஜாதகன் சிவ பூஜையில் பிரசித்தி பெற்றவனாவான். மேலும் ஐயனார், காளி, வீரபத்திரன் போன்ற தெய்வங்களை வணங்கி தேவதை அருள் பெற்று வசியம் செய்யும் வித்தையும் அறிந்தவனாவான். * குருவும் சனியும் ராகுவும் சரம் மற்றும் உபய ராசிகளில் நின்றால் அந்த ஜாதகன் சொந்த இருப்பிடத்தை விட்டு தேச சஞ்சாரம் செய்வான். அதே சமயத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று இருந்தால் சொந்த ஊரிலேயே பலகாலம் வசிப்பான். * சிம்ம ராசியில் அசுர குருவான சுக்கிரனும் செவ்வாயும் கூடியிருந்தால் அந்த ஜாதகன் வித்தைகளில் தேர்ச்சி பெற்று சிற்ப சாஸ்திரத்தில் வல்லமையும் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடுபவனாகவும் இருந்து அதிக பொருள் சேர்ப்பான். அன்றியும் அவன் விதவைக்கு வாழ்வளிப்பவனாய் விளங்குவான். * குருவுடன் செவ்வாயும் சுக்கிரனும் சேர அந்த ஜாதகன் நிறைந்த தனங்கள் பெற்று அரசாங்க மரியாதையும் புகழும் அடைவான். செவ்வாயும் புதனும் இணைந்தால் அவன் செல்வச் செழிப்பு மிக்க பண்டிதனாக விளங்குவான். ஆனால் செவ்வாய் புதன் இவர்களுடன் சுக்கிரன் செர்ந்து எங்கு இருந்தாலும் அவனுக்கு அங்க குறைபாடு ஏற்படும். * குரு, சந்திரன், புதன் இவர்கள் சேர்ந்து எங்கு இருந்தாலும் நல்ல அழகும் ஆயுளும் பெற்று செல்வந்தனாகத் திகழ்வான். சுக்கிரன், சந்திரன், புதன் ஆகியோர் சேர துஷ்டனாகவும் காமியாகவும் விளங்குவான். * இரண்டாம் இடத்தில் விரய ஸ்தானதிபதி நின்றால் அந்த ஜாதகன் மாட மாளிகை ஆகிய வீடுகள் கட்டி சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதியாக குரு, சந்திரன், புதன், சுக்கிரன் இவர்கள் சுபஸ்தானங்களில் நிற்க பொன், பொருள் சேரும். இவர்கள் தசா, புக்தியில் நற்பலன்கள் தருவார்கள். * சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஓரிடத்தில் நிற்க அவன் தனவானாகவும் மனைவியிடம் அன்பு கொண்டவனாகவும் இருப்பான். சூரியனும் குருவும் சேர அரசாங்க செல்வாக்கு பெற்று ஐஸ்வர்யத்துடன் வாழ்வான். சூரியனும் சுக்கிரனும் சேர நல்ல மனைவி அமையப்பெற்று தாம்பத்தியம் அனுபவிப்பதில் சிறந்து விளங்குவான். சனியுடன் சுக்கிரன் கூடினால் கணவன் பேச்சை கேட்காத மனைவி வாய்ப்பாள். * சந்திரன், செவ்வாய், புதன், சூரியன், குரு ஆகியோர் சேர்ந்து இருந்தால் தீய பலன்களே உண்டாகும். அவன் பிறரையும் கெடுப்பான். மேலும் சூரியன், செவ்வாய், சனி, சுக்கிரன் ஒரே வீட்டில் கூடினாலும் ஜாதகன் வறுமையில் உழன்று பிச்சை எடுத்து உண்ணும் கதிக்கு ஆளாவான். * புதன், குரு இவர்களுடன் சந்திரன், சுக்கிரன் இவர்கள் பலம் பெற்று சேர்ந்து நிற்க அதிக செல்வமும் பூமியும் பொன்னும் பொருளும் பெற்று சுகமுடன் வாழ்வான். மேற்கண்ட கிரகங்களுடன் சனி சேர அங்க குறைவு ஏற்படும். * குரு, சுக்கிரன், சூரியன், புதன் இவர்கள் இணைந்து நின்றவன் அதிக திரவியங்கள் பெற்று சுக போகங்களை அனுபவிப்பான். குரு, சுக்கிரன், சூரியன், செவ்வாய் இவர்கள் சேர அவனும் செல்வாக்கு படைத்த தலைவனாகவும் தீர்க்க தரிசியாகவும் செல்வம் மிகுந்து வாழ்வான். * செவ்வாய்க்கு 4, 7 ஆகிய இடங்களில் சுக்கிரன் நின்றாலோ அல்லது சுக்கிரனுக்கு 5,7,11 ஆகியவற்றில் செவ்வாய் நின்றாலோ அந்த ஜாதகன் பூமியில் சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதி கேந்திர, கோணத்தில் இருக்க வாகன சேர்க்கையும் சொந்தத் தொழில் மூலம் அனைத்து பாக்கியங்கள் அடைதலும் உண்டாகும். விளை நிலங்களும் சேரும். இதனை இவர்களின் தசா, புக்தி காலங்களில் கொடுப்பார்கள். * குரு, சனி, செவ்வாய், புதன் சேர்ந்து நிற்க சந்திரன், சுக்கிரன் இவர்கள் இணையப்பெற்ற ஜாதகன் புவியியல் சாஸ்திரங்கள் அறிந்தவனாக விளங்குவான். * சந்திரன், சுக்கிரன் ஒன்றுசேர குரு, புதன், செவ்வாய் ஒரிடத்தில் நிற்க அந்த ஜாதகன் பாக்கியசாலி ஆவான். அனேக திரவியமும் செல்வாக்கும் அடைவான். பலரை ஆதரித்து எல்லோராலும் புகழப்படுவான். * குரு, புதன், சனி, செவ்வாய், சந்திரன் ஆகியோர் ஒரே இடத்தில் நிற்கப் பிறந்தவன் துன்பங்களை அனுபவித்து கஷ்ட ஜீவனம் செய்வான். குறிப்பிட்ட இடங்களில் கிரகங்கள் நிற்கப் பலன்கள் பாக்கிய ஸ்தானாதிபதி அந்த ஸ்தானத்திற்கு திரிகோணங்களான 1, 5, 9 ல் இருக்க அமைந்த ஜாதகனுக்கு பொருள் சேர்க்கையும் நிலம், தோப்பு மற்றும் அரண்மனை போன்ற வீடு இவை அமைந்து மகிழ்வுடன் வாழ்வான். தான தருமம்மற்றும் கோயில் பணிகள் செய்து பேரும் புகழும் அடைவான். அதே சமயத்தில் லக்னாதிபதி 6, 8, 12 ல் மறைய தனவிரயமும் பூர்வீக சொத்துக்கள் நஷ்டமும் உண்டாகும். குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் 5ல் நிற்க அமையப் பெற்ற ஜாதகன் இவ்வுலகில் சிறப்புடன் வாழ்வான். யோகங்கள் உண்டு. குரு 5ல் தனித்து நிற்க புத்திர பாக்கியம் குறைவு. சந்திரன் 5ல் தனித்திருக்க பெண் குழந்தைகள் உண்டு. மேற்சொன்ன மூவரும் 2, 11ம் இடங்களில் இருந்தால் அந்த ஜாதகன் உத்தமனாகவும் கீர்த்திமானாகவும் விளங்குவான். பல வாகனங்களும் சேரும். பல வித்தைகளில் சிறந்து விளங்குவான். புதையலும் தனமும் கிட்டும். சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 4ல் இருந்தால் யோகங்கள் அதிகம் உண்டாகும். வாகனங்கள் சேரும். பூமி லாபம் பெறுவான். சுக போகங்களை அனுபவிப்பான். அதே சமயத்தில் பாவக்கிரகமான சனி 10ம் இடத்தில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு பிரபல யோகம் உண்டாகும். சந்திரனுக்கு 6, 7, 8 ஆகிய இடங்களில் சுபக் கிரகங்கள் நிற்கப் பிறந்த ஜாதகன் சிறந்த பலன்களும் நலமான வாழ்வும் அடைவான். மந்திர சக்தியும் பெறுவான். அரசாங்க நன்மைகளும் உண்டாகும். இருப்பினும் லக்னாதிபதி வலுப்பெறாவிட்டால் மேற்கண்ட யோகங்கள் உண்டாகாது. சூரியன், சனி, பாக்கியாதிபதி இவர்கள் 6ம் இடத்தில் நிற்க அந்த ஜாதகனுக்கு திரவியம் அதிகம் உண்டு. மற்ற இடங்களில் இருந்தாலும் நகைச்சுவை, நடிப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்குவான் என்பதாகும். குருவுடன் புதன் சேர நல்ல பாக்கியங்கள் அடைந்து உத்தமனாவான். சுக்கிரனுடன் புதன் சேர்ந்தால் பெரியோர்கள் நட்பு பெற்றவனாகவும், சிறந்த பாடகனாகவும் விளங்குவான். சனியோடு புதன் சேர பெரிய தனவானாவன். மேலும் எதிரி பயமோ விஷ பயமோ இல்லாமல் அதிக பொருள் சேர்ப்பான். இவர்கள் சேர்க்கை சுப ஸ்தானங்களில் இருக்க நன்மை பயக்கும். சனி, செவ்வாய், சந்திரன், புதன் இவர்கள் சேர ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் உண்டு. எனினும் சோம்பேறியாகவும்,வருமானம் இல்லாதவனாகவும் அலைச்சல் அடைவான். சொந்த வீடு இருக்காது. இவர்களை குரு பார்க்க மேற்கண்ட துயரங்கள் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். சூரியன், புதன் இவர்கள் சேர்ந்து 1,4,8 ஆகிய இடங்களில் நிற்க குருவும் 10ம் அதிபதியும் நோக்க அந்த ஜாதகன் பெரும் செல்வம் அடைந்து புகழடைவான். பூமி, வாகனம் அமைந்து ஏவலாட்கள் பணி செய்வர். 5, 6 க்குடைய கிரகங்கள் 3 ல் நிற்க அவர்களைப் பாவர் நோக்க அந்த ஜாதகனுக்கு பிள்ளைகள் இருக்காது. ஆனால் குரு பகவான் பார்வை பெற குழந்தைகள் உண்டாகும். சூரியன், சனி, பாக்கியாதிபதி இவர்கள் 6ம் இடத்தில் நிற்க அந்த ஜாதகனுக்கு திரவியம் அதிகம் உண்டு. மற்ற இடங்களில் இருந்தாலும் நகைச்சுவை, நடிப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்குவான் என்பதாகும். சனியோடு புதன் சேர பெரிய தனவானாவன். மேலும் எதிரி பயமோ விஷ பயமோ இல்லாமல் அதிக பொருள் சேர்ப்பான். இவர்கள் சேர்க்கை சுப ஸ்தானங்களில் இருக்க நன்மை பயக்கும். சனி, செவ்வாய், சந்திரன், புதன் இவர்கள் சேர ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் உண்டு. எனினும் சோம்பேறியாகவும்,வருமானம் இல்லாதவனாகவும் அலைச்சல் அடைவான். சொந்த வீடு இருக்காது. இவர்களை குரு பார்க்க மேற்கண்ட துயரங்கள் நீங்கி நற்பலன்கள் உண்டாகும்.
வணக்கம் நண்பர்களே! ஹிந்து தமிழ் நாளிதழில் சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன் அவர்களால் வெளியிடப்பட்ட 27 நட்சத்திரங்கள் பற்றிய A to Z தகவல்கள் என்ற தொடர் பதிவினை நகல் எடுத்து பதிவிட்டு வருகின்றேன். நன்றி:ஹிந்து தமிழ் நாளிதழ்&ஜோதிடர் ஜெயம் சரவணன். உங்கள் நட்சத்திரங்களின் வடிவங்களை பயன்படுத்தினால் எதிலும் வெற்றி; எப்போதும் வெற்றி! நட்சத்திர தகவல்களில் இதுவரை பல தரப்பட்ட விஷயங்களை பகிர்ந்துள்ளேன். குறிப்பாக தாராபலம் என்னும் உங்களுடைய நட்சத்திரத்திற்கு நன்மைகள் தரக்கூடிய நட்சத்திரங்கள், தீமைகளை தரக்கூடிய நட்சத்திரங்கள் என முழுமையான பட்டியலையும் படித்திருப்பீர்கள். இன்னும் பல தகவல்களை இந்த அத்தியாயத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வடிவங்கள் அதாவது உருவங்கள் இருக்கின்றன. இதை ஒவ்வொரு நட்சத்திர விளக்கத்திலும் ஏற்கனவே பார்த்துள்ளோம்! ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். முதலில் நட்சத்திரங்களுக்கான வடிவங்களை பார்ப்போம்.. அஸ்வினி - குதிரை முகம் பரணி - முக்கோணம், அடுப்பு கார்த்திகை - கத்தி, குறிப்பாக சவரக்கத்தி, நெருப்பு ஜ்வாலை ரோகிணி - தேர், வண்டி மிருகசீரிடம் - மான் தலை, தேங்காயின் மூன்று கண் திருவாதிரை - மனித தலை, வைரம்,கண்ணீர் துளி புனர்பூசம் - வில் பூசம் - அம்புக்கூடு, அம்பாரம், பசுவின் மடி ஆயில்யம் - சர்ப்பம், அம்மிக்கல் மகம் - பல்லக்கு, நுகத்தடி பூரம் - கட்டில் - சதுர வடிவம் உத்திரம் - கட்டில் கால் அஸ்தம் - உள்ளங்கை சித்திரை - முத்து, புலியின் கண் சுவாதி - தேன்கூடு, தீபம் விசாகம் - முறம், குயவர் சக்கரம் அனுஷம் - குடை, தாமரை கேட்டை - ஈட்டி, குண்டலம் மூலம் - அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் துதிக்கை பூராடம் - கட்டில் வடிவம் உத்திராடம் - கட்டில் வடிவம் திருவோணம் - மூன்று பாதச்சுவடுகள், முழக்கோல் அவிட்டம் - மிருதங்கம், உடுக்கை சதயம் - பூங்கொத்து பூரட்டாதி - கட்டில்கால் உத்திரட்டாதி - கட்டில்கால் ரேவதி - மீன், படகு இந்த நட்சத்திர வடிவங்களை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம். உங்கள் நட்சத்திரத்திற்கான வடிவத்தையும் உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர வடிவத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும். அதுவே உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தையும், எளிதான வெற்றியையும், சமூகத்தில் செல்வாக்கையும், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையையும் தரும். ஒருசில எளிமையான உதாரணங்களைப் பார்க்கலாம். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பிறந்தது ரோகிணி நட்சத்திரம். இந்த ரோகிணி நட்சத்திரத்தின் வடிவம் தேர், கிருஷ்ணர் தன் அவதாரத்தின் நோக்கத்தை முடித்து வைத்தது தேரோட்டியாக இருந்து தேர் செலுத்தி பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடி தந்தார், இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் ரோகிணியில் பிறந்த கண்ணன் தேரோட்டியாக இருந்ததற்கு காரணம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஸ்ரீராமபிரான் பிறந்தது புனர்பூச நட்சத்திரம். புனர்பூசம் உருவம் வில் என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். வில்லேந்தி ராவணனை வென்றது முதல், பட்டாபிஷேகத்தில் கூட வில்லோடு தான் அவர் காட்சியளித்தார். ஜென்ம நட்சத்திரத்தின் உருவத்தை அவர் கை விடவே இல்லை. இதுவும் ஒரு சிறந்த உதாரணம். வாமன அவதாரத்தில் வாமனர் மூன்றடி மண் கேட்டு மகாபலி சக்கரவர்த்தியுடன் நடத்திய தசாவதார காட்சிகள் நாம் அறிந்ததே! அந்த வாமனர் பிறந்தது திருவோண நட்சத்திரம். அந்த திருவோணம் நட்சத்திரத்தின் உருவம் மூன்று பாதச்சுவடுகள். இதுவும் ஒரு எளிய உதாரணம்! அனுமன் பிறந்தது மூல நட்சத்திரம். அனுமனின் ஆயுதமாக கையில் வைத்திருந்தது அங்குசம் என்னும் மூல நட்சத்திரத்தின் வடிவத்தைத்தான். இப்படி ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் முழு விளக்கத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். புரிந்துகொள்ளமுடியும். உணர்ந்து தெளியமுடியும். எனவே, உங்கள் நட்சத்திரத்திற்கு தரப்பட்டிருக்கும் வடிவத்தை நீங்கள் பயன்படுத்தினால் வெற்றி மேல் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். இந்த நட்சத்திரப் பட்டியலில் உத்திரம், பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம் இந்த நான்கு நட்சத்திரங்களுக்கும் கட்டில் வடிவம் என்றும், பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி கட்டில் கால் என்றும் இருக்கிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். கட்டிலில் படுத்து உறங்கினால் போதுமா என்ற கேள்வி எழும். உண்மைதான். கட்டிலில் படுத்து உறங்குவது மட்டும் போதாதுதான். அதேசமயம், எந்த ஒரு திருமணத்திற்கும் அன்பளிப்பாக கட்டிலை பரிசாகக் கொடுப்பது நல்ல பலன்களைத் தரும். கட்டில் கால்களை எப்படி பயன்படுத்துவது? இதுவும் ஒரு நியாயமான கேள்வியே! நீங்கள் உட்காரப் பயன்படுத்தும் நாற்காலிகள், ரோலிங் சேர் அல்லது சொகுசு நாற்காலிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் நான்கு கால்களைக் கொண்ட நாற்காலிகளைப் பயன்படுத்துவது நல்ல பலன்களைத் தரும். அஸ்வினி நட்சத்திரக்காரர்கள், குதிரை படத்தை தங்கள் கண்களில் படும்படி மாட்டி வைப்பதும், அல்லது குதிரை உருவ பொம்மைகளை பயன்படுத்துவதும் நல்ல பலன்களைத் தரும். பரணி நட்சத்திரக்காரர்கள் முக்கோண வடிவத்தில் உள்ள எந்தப் பொருளையும் உபயோகப் படுத்தலாம். அல்லது மண்ணால் செய்யப்பட்ட அடுப்பை வீட்டில் வைத்து உபயோகப்படுத்தலாம். கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் தீ ஜுவாலை போன்ற வடிவத்தைப் பயன்படுத்தலாம். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தேர் படங்களை கண்ணில் படும்படியாக வைத்துக் கொள்ளலாம். அல்லது தேர் பொம்மைகளை பயன்படுத்தலாம். மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் மான் படங்கள் மற்றும் மான் வடிவச் சிலைகளை, பொம்மைகளைப் பயன்படுத்தலாம். திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் மனித ஓவியங்கள், நடராஜர் படங்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம். புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வில் அம்பு வடிவங்களை, படங்களை பயன்படுத்தலாம். பூசம் நட்சத்திரக்காரர்கள் பசுவின் படத்தை வைத்துக் கொள்ளலாம். ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் சர்ப்ப வழிபாடு செய்யலாம், மற்றும் சமையல் அறையில் சிறிய அம்மிகளைப் பயன்படுத்தலாம். மகம் நட்சத்திரக்காரர்கள் பல்லக்கு உருவம் கொண்ட படங்களை பயன்படுத்தலாம். பூரம் நட்சத்திரக்காரர்கள் மணைப் பலகை போன்றவற்றை பயன்படுத்தலாம். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் மணைப் பலகை பயன்படுத்தலாம்.மேலும் திருமண தம்பதியினருக்கு மெத்தை பரிசளிக்கலாம். அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு செலவே இல்லாத வழி...! காலையில் கண் விழித்ததும் தங்கள் உள்ளங்கையை பார்த்து வந்தாலே போதும். சித்திரை நட்சத்திரக்காரர்கள் முத்து மாலையைப் பயன்படுத்தலாம். புலியின் படங்களைப் பயன்படுத்தலாம். சுவாதி நட்சத்திரக்காரர்கள் தினமும் தீபம் ஏற்றி அந்த தீபத்தை சில நிமிடங்கள் உற்று நோக்கி தரிசித்தாலே போதுமானது. விசாகம் நட்சத்திரக்காரர்கள் முறம் பயன்படுத்துவதும், குயவர் சக்கரம் போன்ற சக்கர வடிவங்களை வீட்டில் வைத்துக் கொள்வதும் நல்ல பலன்களைத் தரும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் குடைகளை பயன்படுத்துவதும் தாமரை மலர்களை வீட்டில் வைத்துக் கொள்வதும் நல்ல பலன்களைத் தரும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் குடைகளை பயன்படுத்துவதும், ஈட்டி வேல் போன்ற வடிவங்களை வைத்துக் கொள்வதும் நல்ல பலன்களைத் தரும். மூலம் நட்சத்திரகாரர்கள் விநாயகர் மற்றும் அனுமன் வழிபாடு செய்தாலே போதும். பூராடம் - உத்திராடம் - இந்த இரண்டு நட்சத்திரக்காரர்களும் திருமண பரிசாக கட்டில்களை பரிசளிப்பதும் கட்டில்களை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் வில் அம்பு கூடிய படங்களை பயன்படுத்துவதும் அந்த உருவங்களை வைத்துக்கொள்வதும் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் பாதச்சுவடுகளை படமாக வைத்துக் கொள்வதும் நல்ல பலன்களைத் தரும். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் கொலுவில் பயன்படுத்தும் சிறிய அளவிலான மிருதங்கம் பொம்மைகளை வைத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும். சதயம் நட்சத்திரக்காரர்கள் பூங்கொத்து வைத்துக்கொள்வது நல்ல பலன்களை தரும். இங்கே பூங்கொத்து என்பது மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு ஐந்து ஆறு மலர்களை ஒன்றாக சேர்த்து வைத்துக் கொண்டாலே போதும். பூரட்டாதி - உத்திரட்டாதி - இந்த இரண்டு நட்சத்திரக்காரர்களும் தாங்கள் உட்காரும் நாற்காலிகளை மர நாற்காலிகளாக அதாவது, நான்கு கால்களைக் கொண்ட நாற்காலிகளாக பயன்படுத்துவது நல்ல பலன்களைத் தரும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் வீட்டில் மீன் தொட்டி வைத்து மீன்களை வளர்ப்பது, படகு ஓவியங்களை வைத்துக் கொள்வதும் நல்ல பலன்களைத் தரும். அன்பார்ந்த வாசகர்களே, உங்கள் நட்சத்திர உருவங்களை பயன்படுத்துவதும், உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரத்தின் வடிவங்களையும் சேர்த்து பயன்படுத்துவதும் மிகப்பெரிய வெற்றிகளை உங்களுக்கு நிச்சயமாக தரும் என்பது ஜோதிட சாஸ்திர விதி. அடுத்த பதிவில் மேலும் தகவல்களுடன் சந்திக்கிறேன்.
🔥ராசி லக்னத்திற்கு எட்டாம் பாவத்தில் சனி இருந்தால், 8ம் இடத்தில் சனி இருப்பின் அவருக்கு நீண்ட ஆயுள் இருக்கும் என்றாலும் பொருளாதர ரீதியான பிரச்னை, ஏழை குடும்பத்தில் திருமணம், எதிரிகளால் பிரச்னையும், கண்டமும், கண்களில் பாதிப்பு,, 🔥நீண்ட ஆயுள் என்பதும்கூட இந்த காலத்தில் ஒருவித சாபம் என்றே கூறலாம் . 🔥8 ல் இருக்கும் சனி தன்னுடைய மூன்றாம் பார்வையால் 10-ம் வீட்டை பார்ப்பார் .தொழில் செய்வதில் அல்லது தொழில் ஆரம்பிக்கும் பொழுது ஜாதகருக்கு தயக்கமும் சுணக்கம் ஏற்படும் பத்தாம் பாவகம் கர்ம ஸ்தானம், சனி எட்டாம் வீட்டிலிருந்து தசா நடத்தும் பொழுது,ஜாதகர் ஏதேனும் ஒரு கர்ம காரியங்களில் கலந்து கொள்ள வேண்டி இருக்கும் .. 🔥சனி எட்டில் வக்ரம் பெற்று இருக்கும்பொழுது, அல்லது பரிவர்த்தனை அடைந்திருந்தாலும் வேறு ஏதேனும் ஒரு சுபர் தொடர்பு பெற்று இருக்கும் பொழுதும் தசாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் கூட ,அதன்மூலம் வருமானத்திற்கான வழி ஏற்படுத்திக் கொடுப்பார் . 🔥பழைய பொருள் காகிதம் குப்பைகள் கழிவுகள் இதன் மூலம் வருமானம், பழைய (Scraps)பொருட்களின் உதிரிபாகங்கள் அதன் மூலம் பெரிய அளவில் லாபம் 🔥பொதுவாக எட்டில் சனி இருந்து தசா நடக்கும் பொழுது, உறவினர்கள் நட்பு வட்டாரங்கள் போன்றவற்றின் மூலம் அசிங்கம் அவமானம் முதலானவற்றை உருவாக்கி அதன் மூலம் ஒரு தெளிவை கொடுப்பார், , 🔥3,7,10 ஆகிய பார்வைகளில், ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பம் அமைவதில் தாமதம் அல்லது குடும்பம் அமைந்தால் அதில் சிக்கல்களை உருவாக்கும் .., 10 - ம் பார்வையாக ஐந்தாம் பாவகத்துடன் தொடர்பு கொள்வதால், புத்திரப்பேறு தாமதத்தை உருவாக்குவார் அல்லது புத்திரர்களால் மன சஞ்சலத்தை கொடுக்கும் . 🍁ஆயுள்காரகன் சனி ராசி லக்னத்திற்கு எட்டாம் பாவகத்தில் தசா நடத்தும் பொழுதும் எட்டில் சனி இருந்தாலும் வாழ்க்கை ஜாதகருக்கு போராட்டமாகவே இருக்கும் நீண்ட ஆயுளும் ஒரு போராட்டமே ,, 🍁இவர்கள் வாழ்வின் சம்பாதிக்கும் வருமானத்தின் ஒரு பகுதி எப்பொழுதும், சனியின் காரகத்துவ பொருள்களாக வாங்கி தானம் தருதல் இவர்களுடைய வாழ்வியல் பரிகாரமாகும் .. இஸ்திரி பெட்டி, காலணிகள் ,நல்லெண்ணெய், தயிர் சாதம் ,ஊனமுற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு தேவையைப் பூர்த்தி செய்தல் போன்றவை .
இவர்கள் மக்களிடம் நன்கு பழகுவார்கள் ==சமுக சட்ட திட்டங்களை மதித்து நடப்பார்கள் ==பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து குடும்ப பழக்கம்களை காப்பவனும் அரசு பதவி , ஊர் தலைமை பதவியில் இருப்பார்கள் = தாய் , தந்தை , மனைவி , மக்கள் , சொந்தம் , பந்தம் , அரவனைத்து செல்வர்கள் == பரந்த வட்டமானமுகம்,அழகிய கண்களை உடையவன் பெண்களால் அதிகம் விரும்பும் மனிதனாக இருப்பான் = மலைப்பகுதியில் வசிக்க விரும்புவார்கள்= செய்ய கூடாத காரியங்களை செய்து விட்டுபின்னால் கோபித்து கொள்வார் == பழகுவதற்கு இனிமையாகவும் சில நேரங்களில் முரட்டு தனமும் கொண்டவர்கள் = வயிறு ,பற்கள் , மனம் , பாதிப்பு உண்டு == அற்ப புத்ர விருத்தி உள்ளவன்
எழாமிடம் சுத்தமாக உள்ளது என சில ஜோதிடர்கள் கூறுவதுண்டு, அதனை ஜாதக கட்டத்தில் உள்ள எழாம் பாவம் , கிரகங்கள் இல்லாமல் இருப்பது தான் சுத்தம் என ஜோதிடர் கூறுகிறார் என பலர் நினைத்துக்கொண்டு உள்ளனர் அதற்கான அர்த்தம் , 7 ஆம் பாவம் என்பது மனிதனின் திருமண வாழ்வை தீர்மானிப்பது ஆகும் . அந்த திருமண வாழ்வை குறிக்கும் கிரகங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பதையே சுத்த களஷத்திரம் அல்லது சுத்த ஜாதகம் என சொல்லுவார்கள் இவ்வாறு ஒவ்வொரு பாவத்திற்க்கும் சுத்த பாவம் என குறிப்பிடுவது உண்டு
❤❤ விரைய சனி / 12ல் சனி ⚜️⚜️ செயல்திறன் குறைந்து காணப்படுவர். ஒரு செயலைச் செய்ய சொன்னாள் அதை நான் ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சோம்பேறித்தனமாக இருப்பார் ⚜️⚜️ எதிலும் தயக்கம். இதை நான் மட்டும் ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம் ⚜️⚜️ தன்னம்பிக்கை குறைவு. அதாவது எந்த விஷயமாக இருந்தாலும் தன்னை சார்ந்த நபர்கள் அந்த விஷயத்தை பார்த்துக்கொள்வார்கள் என்று எண்ணம். உதாரணமாக பெண்ணிற்கு 12ல் சனி என்ற கணவனுக்கு தான் ஏகப்பட்ட பிரச்சினைகள் அதிகம். த ன் மனைவியை பாதுகாப்பதே ஒரு வேலையாக இருக்கும். ⚜️⚜️ முன்னேற்றத்திற்கு பணம் ஒரு தடையாக இருக்கும். தனது மூன்றாம் பார்வையாக இரண்டாம் இடத்தைப் பார்த்து தன ஸ்தானத்தை வலிமை இழக்கச் செய்வார். 7-ஆம் பார்வையாக 6-ஆம் இடத்தைப் பார்த்து உத்தியோகத்தில் நஷ்டத்தை ஏற்படுத்துவார். பத்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்த்து தங்கையின் முன்னேற்றத்தையும் பாழ் படுத்துவார். ⚜️⚜️ மறதி அதிகம். காரணம் யோசனையின்றி செயல்படுவதுதான். எதை செய்கிறோம் என்று தெளிவாக தெரியாது. ⚜️⚜️ தனக்கு தேவையற்ற கோபத்தால் குடும்பத்திற்கு அவமானங்களும் தேவையற்ற நஷ்டங்களும் இழப்புகளும் ஏற்படும். ⚜️⚜️ ஊரார் மத்தியில் அவமானம் ஏற்படும் ஒரு சம்பவம் நடக்கும் ⚜️⚜️ மற்றவர்களால் இவர்களுக்கு அடிக்கடி தொல்லைகள் இடைஞ்சல்கள் ஏற்படும். காரணம் அழகாக இருப்பதும் மற்றும் அதிக பணம் சேர்த்து செலவு செய்யாமல் இருப்பதம் ⚜️⚜️ சோம்பேறிதனம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் உறங்கி விடுவது. இதனால் குடும்பத்தில் மற்றவர்களிடம் அனேகமாக அவர் பெயர்தான் வாங்குகிறார்கள். ⚜️⚜️ இல்லற வாழ்க்கை திருப்திகரமாக இருக்காது. துணையிடம் அன்பும் அறனும் இருக்கும் அதேசமயம் சற்று பெரிய இடைவெளி இருக்கும் ⚜️⚜️ மெதுவான அன்னநடை போட்டு நடப்பீர்கள். நடை வசீகரத்துடன் இருக்கும் ⚜️⚜️ வெளியாட்களிடம் இருந்து அல்லது எதிரிகளிடமிருந்து தொல்லைகள் ஏற்படும். நாளும் அதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது ⚜️⚜️ சிலர் பெண்களுக்கு தொல்லை தருபவர்களாக இருப்பார்கள் ⚜️⚜️ இன்னும் சிலர் சொந்த ஊரை விட்டு தொழில் நிமித்தமாக வெளியூர் வெளிமாநிலம் வெளிநாடு என செல்வார்கள். ⚜️⚜️ அரசாங்கத்தால் பகை ஏற்படும். உதாரணமாக ரேஷன் பொருட்களை கூட வாங்க போகமாட்டார்கள். அங்கு ரேஷன் கடை காரர் திட்டிக்கொண்டே இருப்பார். 🍁🍁 ஓய்வு நேரம் அதிகமாக இருப்பதால் பல விசயங்கள் செயல்படுத்த ஏதுவாக இருக்கும் 🍁🍁 குழந்தை பெறுவதில் தாமதம் ஏற்படும் 🍁🍁 நட்பு வட்டாரம் மற்றும் சகோதர சகோதரிகளிடம் பாசம் மிகுந்த காணப்படுவீர்கள். 🍁🍁 அனைவரிடமும் எளிமையாக வசப்படுவார்கள். காரணம் உங்கள் எதார்த்த குணம் தான். 🍁🍁 தனது சொந்த ஊரையும் தனது சொந்தங்களையும் நினைத்துக்கொண்டே வருத்தப்பட்டு கொண்டே இருப்பீர்கள். காரணம் அந்த அளவிற்கு பாசம் மிகுந்தவர்கள் 🍁🍁 தாய்மாமன் பெரிய அளவில் கண்டுகொள்ளாததால் உங்களின் துணையே அரணாக அமைவார் 🍁🍁 தந்தைக்கு பெரிய பொருளாதார முன்னேற்றம் இருந்தாலும் மனதளவில் பிரச்சினைக்கு உள்ளவராக இருப்பார் 🍁🍁 சிலர் தனது துணைக்கு துரோகம் செய்வார்கள். அதாவது அன்னியர்களின் தீய சகவாசம் இருக்கும் 🍁🍁 திருமணம் முடிந்த பிறகு சிலரின் குடும்பத்தில் அசுப விரயங்கள் ஏற்படும். உதாரணமாக தற்கொலை விபத்து உட்பட. 🍁🍁 சிலருக்கு சொந்தத்தில் திருமணம் முடிவதால் சில நேரங்களில் அவமானமும் ஏற்படும் அதே சமயம் சொந்தங்களால் உண்மையான ஆதாயம் ஏற்படும் 🍁🍁 உங்கள் துணையிடம் தாங்கள் எதிர்பார்க்கும் உண்மையான ஆசைகள் எதுவும் நிறைவேறாது இருக்கும் இதில் 12ஆம் இடம் சனியை பார்க்கும் கிரகங்கள் இணையும் கிரகங்கள் வர்கோத்தமம் வக்கிரம் என பலன்கள் மாறுபட வாய்ப்பு உள்ளது. இவை யாவும் ஆய்வு செய்ததில் பொது பலன்களே ஆகும். இந்த பலன்கள் அனைத்தும் உறுதிப்படுத்த தசா புத்தியை தீர்மானமாகும்.
27 நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரமான பரணி நட்சத்திரம் அமைந்துள்ளது நெருப்பு ராசியான மேஷ ராசி ஆகும்.இதன் அதிதேவதை காளி தேவி,நட்சத்திராதிபதி சுக்ரன்,நட்சத்திர வடிவம் யோனி,நட்சத்திர விருட்சம் நெல்லி மரம் ஆகும். அசுவினி நட்சத்திரத்தைப் போலவே பரணி நட்சத்திரமும் மேஷ ராசியில் முழு நட்சத்திரமாக அமைவதால் இதற்கும் பூர்வ புண்ணியம் என்ற ஐந்தாமிடம் என்பது சிம்ம ராசியாகவே வரும்.எனவே இவர்களும் தங்கள் இறைவழிபாடு மற்றும் பரிகாரங்களை தங்கள் ஊரில் உள்ள சிவாலயங்களில் செய்வது சிறப்பானது.பரணி நட்சத்திரத்தில் பிறந்த மனிதர்கள் இயன்ற வரையில் காளி தேவியை வழிபடுதல்,நவக்கிரகங்களில் சுக்கிரனை வழிபடுதல் மற்றும் அவரவர் பிறந்த ஊரில் இருக்கும் சிவாலயங்களில் நெல்லி மரம் நடுதல், ஆலயத்தின் மடப்பள்ளியில் அடுப்பு எரிக்க உதவும் பொருட்களை உபயமளித்தல் இவற்றை தங்கள் வாழ்வில் எப்போதும் முதன்மை வழிபாடுகளாக,பரிகாரங்களாக செய்தல் நன்று. பரணி நட்சத்திரத்திற்கு 1-5-9 என்ற திரிகோண பரம்பரை ராசிகளில் முழுமையாக அமையும் நட்சத்திரங்கள் அசுவினி,மகம், மூலம் ஆகும்.இந்த நட்சத்திரங்கள் பரணி நட்சத்திரத்திற்கு அதி நட்பு என்ற பரம மைத்ர தாரா பலன் தரும் நட்சத்திரங்கள் ஆகும். எனவே பரணியில் பிறந்தவர்கள் அசுவினி நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று மூலதெய்வத்தின் மீது நாயன்மார்கள் பாடிய பாடல்களை பாடுவதன் மூலமும்,கருவறையின் வெளிப்புற பிரகாரத்தில் அதன் நேர் பின்னால் அமர்ந்து மூலதெய்வத்தின் நாமத்தை ஜெபம் செய்வதன் மூலமும் தங்கள் சுய பலத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். மகம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று மூலதெய்வத்திற்கு தலையில் பரிவட்டம் துண்டு கட்டி வழிபடுவதன் மூலமும்,கருவறையின் சுற்றுப்பிரகாரத்தில் இருக்கும் பலிபீட பூஜைக்குத் தேவையான அரிசி,பூ இவற்றை தானமளிப்பதன் மூலமும்,நவக்கிரகத்தில் இருக்கும் சுக்ர பகவானுக்கு வெண்பட்டு அணிவித்து வெண்தாமரை மலர் சாற்றி வழிபட்டு வருவதன் மூலமும் தங்கள் பூர்வபுண்ணிய பலனை தடையின்றி அடையலாம்.குழந்தை பாக்கியம் குல தெய்வ அல்லது இஷ்ட தெய்வ அருள் மற்றும் மந்திர சித்தி கிடைக்கும். மூலம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று ஆலயத்தில் இருக்கும் உற்சவ தெய்வங்கள் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலமும்,ஆலயத்தில் நாதஸ்வரம் இசைக்கும் பணியாளருக்கு இயன்ற பொருளுதவி செய்வதாலும்,ஆலயத்தின் வெளிப்புற துப்புரவு பணிக்குத் தேவையான துடைப்பங்களை உபயம் செய்வதன் மூலமும்,துப்புரவு பணியாளர்களுக்கு பொருளுதவி செய்வதன் மூலமும் உயர்கல்வியில் மேன்மையும், குருவருளும்,அரசு மற்றும் அரசியல் ஆதாயமும், தந்தை வழியில் நன்மையும் உண்டாகும். கார்த்திகை,உத்ரம்,உத்ராடம் இந்த நட்சத்திரங்கள் பரணி நட்சத்திரத்திற்கு சம்பத்து என்ற செல்வத்தாரா பலன் தரும் நட்சத்திரங்களாக வருவதாலும் இவற்றின் பெரும் பகுதி மேஷ ராசிக்கு 2-6-10 என்ற ராசிகளில் இடம் பெறுவதாலும் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காத்திகை நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று சிறப்பு ஹோமங்கள் செய்வதாலும்,ஹோமங்களுக்குத் தேவையான அத்தி சமித்து கொடுப்பதாலும்,ஆலயத்தின் மடப்பள்ளிக்குத் தேவையான சிற்றகப்பை,வெட்டு கத்தி,அரிவாள் போன்ற பொருட்களை உபயம் அளிப்பதாலும்,குடும்பத்தில் ஒற்றுமையும், சிறப்பான தனவரவும் ஏற்படும். உத்ரம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று ஆலயத்தின் கட்டிட சீரமைப்புக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக்கொடுப்பதாலும், ஆலயத்தின் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலார்களுக்கு இயன்ற பொருள் உதவி செய்வதன் மூலமும்,நவக்கிரகத்தில் சூரியனுக்கு தாமரைப்பூ மாலை அணிவித்து நெய் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலமும்,தங்கள் கடன், நோய்,வழக்கு,தடைகளிலிருந்து விரைவில் விடுபடலாம். உத்ராடம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று ஆலயத்தின் முதன்மை அர்ச்சகருக்கு வெற்றிலை பாக்கு,பழம்,தேங்காய்,துண்டு இவற்றை தக்ஷிணை அளித்து அவரிடம் ஆசிபெறுவதன் மூலமும்,ஆலயத்தில் இருக்கும் விநாயகர் சன்னிதியில் பஞ்சாமிர்த அபிஷேகம், செய்து பஞ்சகூட்டு எண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலமும், ஆலயத்தின் மடப்பள்ளிக்கு முறம் தானம் செய்தல்,சமையல் பணியாளர்களுக்கு கை விசிறி உபயம் செய்தல், மடப்பள்ளியில் புகை,உஷ்ணம் வெளியேற்ற உதவும் மின் விசிறிகள் அமைத்துக்கொடுத்தல் இவறின் மூலம் தங்கள் தொழில்,வியாபாரம், உத்தியோகம் இவற்றில் சிறப்பான முன்னேற்றம் அடையலாம், பரணி நட்சத்திரத்திற்கு ஷேமத்தாரை என்ற சுகம் தரும் நட்சத்திரங்கள் மிருகஷீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகும் இவை இடம் பெறும் ராசிகளின் சரிபாதி பாகம் மேஷ ராசிக்கு 3-7-11 என்ற ராசிகளில் அமைவதாலும் இதேப்போல் பரணி நட்சத்திரத்திற்கு சாதகத்தாரை என்ற எளிதில் வெற்றிதரும் நட்சத்திரங்களான புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி என்ற இந்த நட்சத்திரங்களும் இதே 3-7-11 என்ற துணை ராசிகளில் அமைவதாலும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகஷீரிட நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று மூல தெய்வத்திற்கு இளநீர் அபிஷேகம் செய்வதாலும், தேங்காயில் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், ஆலயத்தின் மடப்பள்ளிக்கு சமையலுக்குத் தேவையான தேங்காய் தானம் அளிப்பதாலும் தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான எல்லா முயற்ச்சிகளிலும்,போட்டி தேர்வுகளிலும் எளிதில் வெற்றியடையலாம். சித்திரை நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று மூல தெய்வத்திற்கு நெய் அபிஷேகம் செய்வித்து, வில்வ இலை அர்ச்சனையும் செய்து,மூலவர் சன்னிதியில் உருண்டையான பழங்களையும், நிறை நாழியில் பச்சரிசியும் படைத்து வழிபடுவதாலும்,ஆலயத்தில் அச்சதைக்குத் தேவையான பச்சரிசியை உபயம் செய்வதாலும்,கோலமாவு,விபூதி இவற்றை உபயம் செய்வதாலும்,மடப்பள்ளிக்குத் தேவையான தானியங்களையும்,தேங்காய் துருவியையும் உபயம் அளித்து வருவதாலும் திருமணத்தடைகள் விலகும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்,நல்ல தொழில் கூட்டாளிகள் அமைவார்கள். அவிட்டம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று சிவலிங்கத்திற்கு கலசம் மூலம் வில்வ ஜலதாரை விழ ஏற்பாடு செய்வதாலும்,ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் மரங்களுக்கு குடத்தில் தண்ணீர் பிடித்து ஊற்றுவதாலும்,ஆலயத்தின் மடப்பள்ளிக்கு குடம்,பானை,குவளை,கோப்பை,வாளி,ஆட்டுக்கல் போன்ற பொருட்களை உபயம் அளிப்பதாலும்,ஆலயத்தில் பாணி,தவில்,முரசு,மிருதங்கம் இசைக்கும் பணியாளருக்கு பொருளுதவி செய்வதாலும் வாழ்வில் எண்ணியது எல்லாம் எண்ணியபடி நிறைவேறும். புனர்பூசம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று மூலவருக்கு நைவேத்யம் செய்ய மூங்கில் அரிசி உபயம் செய்வதாலும்,அங்கு பிரகாரத்தில் உள்ள ஸ்ரீராமர் சன்னிதியில் நெய்தீபம் ஏற்றி,சீதாரமருக்கும் லட்சுமண பெருமாளுக்கும் மலர் மாலை சாற்றி வழிபட்டடு வருவதாலும் குடும்பத்தில் சகோதர ஒற்றுமையும், அலுவலகத்தில் சிறப்பான நிர்வாகத்திறமையும்,உடன் பணி செய்பவர்களின் ஆதரவும்,நட்பும் சிறப்பாக அமையும். விசாகம் நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று மூலவர் சன்னிதி வாசலில் அமைந்துள்ள சரவிளக்குகளில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற உபயம் செய்வதாலும்,ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு கைவிசிறி,முறம் இவற்றை தானம் செய்வதாலும்,ஆலயத்தில் இருக்கும் பசுமடத்தில் மின் விசிறிகள் உபயம் செய்வதாலும்,ஆலயத்தின் தலை வாசலை சுத்தம் செய்து கோலமிடும் பெண் பணியாளருக்கு வேண்டிய பொருளுதவிகள் செய்வதாலும்,இல்லற வாழ்வில் நன்மைகள் சேரும்,திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமண வாய்ப்புகள் வீட்டு வாசல் தேடி வரும். பூரட்டாதி நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று உண்டியலில் இயன்ற காசு,பணம் சேர்த்தலும், ஆலயத்தில் வரவு செலவு கணக்கு அலுவலகத்திற்குத் தேவையான நோட்டு,எழுதுகோல்கள்,மேடைகள் போன்ற பொருட்களை உபயம் அளிப்பதாலும்,அங்கு பணியில் இருக்கும் காரிய அலுவலருக்கு தாம்பூலம்,தக்ஷிணை அளிப்பதாலும் வாழ்வில் பொருளாதர சேமிப்பு அதிகரிக்கும்,திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்தேறும். பரணி நட்சத்திரத்திற்கு நட்பு என்ற தாரா பலன் கொண்ட ஆயில்யம்,கேட்டை,ரேவதி என்ற இந்த நட்சத்திரங்கள் மேஷ ராசிக்கு 4-8-12 ராசிகளில் இடம் பெறுவதால்,பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்ய நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று மூலவருக்கு பூணூல்,மேல் துண்டு இவற்றை அணிவித்து வழிபடுவதாலும்,ஆலயத்தின் விளக்குகளுக்குத் தேவையான பஞ்சுத்திரிகளை உபயம் அளிப்பதாலும்,வீடு,நிலம்,வாகனம்,கல்வி இவை தொடர்பாக சிறப்பான நன்மை,மேன்மைகள் உண்டாகும். கேட்டை நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று அங்குள்ள காவல் தெய்வங்களுக்கு இரவு கால பூஜையின் போது அகல்விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டுவருவதாலும்,ஆலயத்தின் காவல் பணியில் இருப்பவர்களுக்கு இயன்ற பொருளுதவி செய்வதன் மூலமும்,காவல் தெய்வங்களுக்குரிய கத்தி,ஈட்டி,வேல்,போன்ற பொருட்களை உபயம் அளிப்பதாலும் எதிர்பாரத ஆபத்துகள்,கண்டங்களிலிருந்தும்,அவமானங்களிலிருந்தும்,நாள்பட்ட நோய்களிலிருந்தும், தங்களை காத்துக்கொள்ளலாம். ரேவதி நட்சத்திர நாளில் தங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று ஆலயத்தின் குளம்,கிணறு இவற்றில் வாழும் மீன்களுக்கு அவல்/சோறு/பொரிகளை உணவாக அளிப்பதன் மூலமும்,ஆலயத்தின் காலணிகளை பாதுகாக்கும் இடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இயன்ற பொருளுதவிகள் செய்வதன் மூலமும்,குடும்பத்தில் வீண் செலவுகள் குறையும்,வெளி மாநில,அல்லது வெளி நாட்டுத்தொடர்பு வேலை,வியாபாரங்களில் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படும் இப்படி பரணியில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தின் தாரா பலன் அறிந்து நட்சத்திரங்களுக்குரிய வழிபாடுகள்,பரிகாரங்களை செய்வதன் மூலம்,தங்கள் வாழ்வில் நன்மைகளை அடையாலாம்.
விபத்து தாரை நட்சத்திரங்கள் ------------------------ அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு 3-12-21 வது நட்சத்திரங்கள் விபத்து தாரை நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களை முக்கிய காரியமாக செல்லும்போதோ அல்லது பயணம் செல்லும்போதோ உடன் அழைத்து செல்லக்கூடாது. அவர்களை அழைத்து சென்றால் எதிர் பாராத பிரச்சினைகள் வரும்.
ஜோதிட தகவல்: திதிகளில் *சஷ்டி* திதி ஆறாவது திதியாகும். ஜோதிடத்தில் 6-ஆம் இடம் என்பது கடன், வம்பு, வழக்கு, நோய், எதிரி குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். சஷ்டி திதியில் எந்த ஒரு வழக்கு, யுத்தம், எதிரியை முறியடிக்க திட்டமிட, கடன் அடைக்க அதிலும் அந்தத் திதியில் செவ்வாய் ஓரையில் இதை பயன்படுத்தினால் கட்டாயம் கடன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். எதிரியை வெல்ல இந்த திதி மிக பயனுள்ளதாக இருக்கும் முதன் முதலாக மருந்து உண்ண சஷ்டி திதி மிக உன்னதமான அமைப்பாகும். அதிலும் செவ்வாய்க்கிழமையில் வருகிற சஷ்டி திதி மிக சக்தி வாய்ந்த தாகும். அதைப்போல் புதிய வேலைக்கு முயற்சி செய்ய பொருளாதாரத்தில் வெற்றியடைய சஷ்டி திதி நன்மை அளிக்கும். ஜாதகம், எண் கணிதம், திருமண பொருத்தம், பிறந்த குறிப்பு, அதிர்ஷ்ட பெயர், ஜாதகம் எழுத, கீழ்கண்ட நம்பரை தொடர்பு கொள்ளவும் ஸ்ரீனிவாசன், தேனி. 90 95 40 41 16.
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *கடன் சுமை குறைய* சனிக்கிழமை நாட்களில் பிரதோஷ காலத்தில் சர லக்னத்தில் கடன் தொகையில் ஒரு பகுதியை திருப்பி செலுத்தினால் கடன் தொகை முழுவதும் விரைவில் தீர்ந்து விடும். - *காலப்ரகாசிகை* - ஸ்ரீ மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *காம குறைபாடு* *ஆமே சுக்கிரன் ஏழாதி ஆறாம் அதிபனும் கூடித்தாமே மூவரொரு வீட்டில்* *தங்கில் போகந்தா னில்லை.* - ஜாதக அலங்காரம் 6,7 ம் அதிபதிகள் சுக்கிரனுடன் சேர்ந்து இருந்தால் அவனுக்குப் போக உணர்வு/காம உணர்வு குறைவாக இருக்கும். - ஸ்ரீ மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
*ஓம் சரவண பவ!!* ஒரு திசை எந்த *பகுதியில்* பலன் தரும் என்பதை சொல்லும் ஜோதிட விதி. 1. லக்னம்,சூரியன்,சந்திரன் இவர்களில் யாருக்கு அதிக பலம் உள்ளதோ அவர்களுக்கு கேந்திரத்தில் (1,4,7,10) இருந்து ஒரு கிரக தசை நடந்தினால், தசை *ஆரம்பத்திலியே* பலன் தரும்.பணபர (2,5,8,11) ஸ்தானங்களில் ஒரு கிரகம் இருந்து, தசை நடத்தினால் *மத்திய* பகுதியில் பலன் தரும். ஆபோக்லிய (3,6,9,12) ஸ்தானத்தில் இருந்து ஒரு கிரகம் தசை நடத்தினால் தசையின் *முடிவு* பகுதியில் பலன் தரும். 2. லக்னத்திற்கு கேந்திரத்தில் நிற்கும் கிரகம், தசை *ஆரம்பத்தில்* பலன் கொடுக்கும்.சூரியனுக்கு கேந்திரத்தில் ஒரு கிரகம் இருந்து தசை நடத்தினால் *மத்திமத்தில்* பலன் கொடுக்கும், சந்திரனுக்கு கேந்திரத்தில் ஒரு கிரகம் இருந்து தசை நடத்தால் *கடைசி* பகுதியில் பலன் கொடுக்கும். 3. கேந்திரத்தில் நின்ற கிரகம் உச்சம் ஆட்சி பெற்றால் தசை *ஆரம்பத்திலும், கடைசியிலும்* பலன் தரும்..நட்பு, சமம் பெற்றால் *மத்திய* பகுதியில் பலன் தரும். பகை நீசம் பெற்றால் *கடைசி* பகுதியில் பலன் தரும். என்றும் ஜோதிடப்பணியில் Astro Sadaiyappa 8122156377
உ 7708310982 ஶ்ரீ ஸ்ரீ கணேஷ் ஜோதிடர் .. நிரந்தர கடன்... நோய்.. வழக்கு... குரு+கேது.. பெரும் பணம்.. சாா்ந்த கடன்.. குழந்தைகளுக்காக.. வாங்கிய கடன் நோய்.. வழக்கு... சனி+கேது.. தொழில் சாா்ந்த கடன் வறுமை சாா்ந்த கடன் சித்தப்பாவுக்காக வாங்கிய கடன் நோய்.. வழக்கு... சுக்ரன்+கேது.. வாழ்க்கைத்துணை.. அத்தை முறைக்காக வாங்கிய கடன்.. காமத்துக்காக வாங்கிய கடன் வீடு சாா்ந்த.. சொகுசு பயணம்.. சொகுசு பொருள், ஆடம்பர வாழ்க்கை.. வாசனை திரவியங்கள் சாா்ந்த கடன்.. நோய்.. வழக்கு... சூரியன்+கேது.. அரசு சாா்ந்த விசயத்தில் கடன் தந்தை.. கோவில் சாா்ந்த கடன் நோய்.. வழக்கு... சந்திரன்+கேது.. தாய்.. மனம்.. பயணம் சாா்ந்த கடன்.. நோய்.. வழக்கு.. செவ்வாய்+கேது.... சகோதரன்.. மனை.. மருத்துவம், விபத்து.. இயந்திரம், மின்சாரம் சாா்ந்த கடன்.. நோய்.. வழக்கு... புதன்+ கேது.. படிப்புக்காக.. ஒன்றுக்கு மேற்பட்ட காதலுக்காக.. இளமையாக வாழ.. தகவல்தொழில்நுட்பம் சாா்ந்த வகையில்" கடன், நோய்.. வழக்கு.... நன்றி.. ஶ்ரீ கணேஷ் ஜோதிடர்....
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *ஆண்மை குறைவு* ஆணின் ஜென்ம லக்னம் கன்னியாகி புதன் 6 ம் இடத்திலோ அல்லது 6 ம் அதிபதியுடனோ சேர்ந்து இருந்தால் ஆண் போல தோற்றம் இருந்தாலும் ஆண்மை அற்றவனாக இருப்பான். - ஸ்ரீ மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *அரசு ஆதாயம்* கேது பகவான் 1,5,9,11 ல் இருந்தால் அந்த ஜாதகருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசின் மூலம் லாபமும் ஆதாயமும் கிடைக்கும். மேலும் பொன்,பொருள் , பூமி லாபம், பதவிகளும் கிட்டும். - ஸ்ரீ மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
கடக ராசி காரர்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும்,,,,,, புல்லாங்குழல் ஏந்திய கிருஸ்ணர்க்கு தன் கையால் பசும்பால் அபிசேகம்,, திங்கள் கிழமை செய்ய வேண்டும்,, ஒரு குட்டி கிருஷ்ணர் விக்ரகம் வாங்கி வைத்து கொள்ளலாம்,,,,, (((((குறிப்பு:::கிருஷ்ணர் விக்கிரகம் வீட்டில் இருந்தால் அசைவம் கூடாது,, அது போக கடக ராசியில் தான் குரு பகவான் உச்சம்,,, யானை ஒருபோதும் அசைவம் சாப்பிடாது,,,,,)))))) மற்றும் எந்த லக்கினம் எனினும் 5இல் குரு நின்றால்,,, குருவாயூரப்பன் கோவில் சென்று வருவது மிக மிக உத்தமம்,,, மற்றும் குரு ராகு சேர்க்கை பெற்று இருப்பவர்களும் குருவாயூர் சென்று தரிசனம் செய்வது நன்று,,, ஓம் நமசிவாய சதிஷ் குமார்
தர்மகர்மாதிபதி யோகம்:- ஒன்பது பத்தாம் அதிபதிகள் லக்கனத்திற்கோ, சந்திரனுக்கோ, ஒன்பதாம் வீட்டிற்கோ ,பத்தாம் வீட்டிற்கோ ஒன்பதாம் பத்தாம் அதிபதிகள் தொடர்பு,சம்மந்தம் தர்மகர்மாதிபதி யோகம் கிட்டும் . மேற்கூறிய வர்களுக்கு ஒன்பதாம் பத்தாம் அதிபதிகள் சேர்ந்து இருந்தாலோ, ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டாலோ , இருவரும் பரிவர்த்தனை பெற்றாலும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருந்தாலும், தங்கள் வீடுகளில் ஆட்சியாக இருந்தாலும் தர்ம கர்மாபதி யோகம் கிட்டும். குருவும் சனியும் தர்மகர்மாதிபதிகளாகி இணைந்தாலும் சில லக்ன ராசிகளுக்கு இவ்வித யோகம் கிட்டும். சேர்ந்து இருப்பதைக் காட்டிலும் தனித் தனியாக 9,10ம் வீடுகளில் ஆட்சி பெற்று இருப்பது சிறப்பு. தர்மகர்மாதிபதி யோகம் என்றால் செல்வம் செல்வாக்கு செம்பொன் செந்நெல் விளையும் பூமி பெருமைப்படுத்தும் புதல்வர்கள் உயர்பதவிகள் பட்டங்கள் ஆள் அடிமை ஆரோக்கியம் தீர்க்காயுள் போன்றவைகள் கிட்டும் இதில் அளவீடுகள் சில பல கிரக நிலைகளைப் பொறுத்து மாறுபடும்.
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *சற்புத்திர பாக்கியம்* லக்னாதிபதியும் புத்திர ஸ்தானாதிபதியும் ஒரு ராசியில் இருந்தாலும் (அ) ஒருவரை ஒருவர் பார்த்தாலும் ராசி அதிபதியும் புத்திர ஸ்தானாதிபதியும் சேர்ந்திருந்தாலும் (அ) ஒருவரை ஒருவர் பார்த்தாலும் அந்த ஜாதகருக்கு சற்புத்திர பாக்கியம் உண்டு. - ஸ்ரீ மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
*🔯பிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம், அதற்குறிய ஆன்மீக பரிகாரகுறிப்புகளும்.* *🔯புதிய தகவல்கள்.👇* ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளின் மூலம் பலன் சொல்ல முடியும். அந்தக் கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. *🔯ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் :* ஞாயிறன்று பிறந்தவர்கள் கடின வேலைகளை எளிதாக முடிக்கும் திறமை பெற்றவர்கள். இரக்க குணத்துடன் மற்றவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். இயல்பான தலைமை பண்புகளுடன், அதிகாரம் செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். யாரையும் ஏமாற்ற விரும்பாமல், நேர் வழிகளில் முயற்சிகளை அமைத்துக்கொள்வார்கள். ஒரு விஷயத்தை தன்னால் செய்ய முடியும் அல்லது முடியாது என்பதை சொல்லிவிடுவார்கள். அவ்வப்போது உணர்வுகளால் தூண்டப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிடுவதால், குழப்பமான மனநிலை இவர்களுக்கு வந்து செல்லும். பல நேரங்களில் மவுனமாக இருந்து விடுவது இவர்களது வழக்கம். ஆன்மிக குறிப்புகள் : ஞாயிறன்று அதிகாலையில் ‘ஆதித்ய ஹ்ருதயம்’ பாராயணம் செய்வது ஆரோக்கியமான வாழ்வை உண்டாக்கும். ஈன்ற தந்தை மற்றும் ஆன்றோர்களின் ஆசிகளை அவ்வப்போது பெற்று வரவேண்டும். தெய்வ வழிபாட்டில் கோதுமை பண்ட நைவேத்தியம் சிறப்பு. ஆடைகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களை தவிர்ப்பதோடு, இளம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணியலாம். கிழக்கு திசையானது பலவிதங்களில் பயன் தருவதாக இருக்கும். அரசு துறையில் காரிய வெற்றி பெற விரும்புபவர்கள் சூரிய ஹோரை காலத்தில் தமது முயற்சி களை செய்தால் வெற்றி கிடைக்கும். *🔯திங்கட்கிழமை பிறந்தவர்கள் :* வேடிக்கையான பேச்சோடு, பல விஷயங்கள் அறிந்தவர்களாகவும், சாந்தம், சகிப்புத் தன்மை, பெரியவர் களிடம் மரியாதை, கடவுள் பக்தி போன்ற குணங்களும் உடையவர்கள். ஞாபக சக்தியும், நடக்கும் விஷயத்தை முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும், கற்பனை சக்தியும் உடையவர்கள். மென்மையான குணங்கள் இருப்பதால் எதிரிகளையும் நண்பர்களாக நினைப்பார்கள். சலனமுள்ள எண்ண ஓட்டம் காரணமாக திடமான முடிவுகள் எடுப்பதில் தடுமாறுவார்கள். ஒவ்வொரு காரியத்தையும் ஆலோசனை செய்வதில் கால தாமதம் உண்டாக்கி கொள்வார்கள். எதிர்ப்புகளை துணிச்சலாக எதிர்கொள்வார்கள். சுயநலம் இல்லாததால் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்திப்பார்கள். பழைய விஷயங்களை அடிக்கடி நினைத்துக்கொண்டு கவலை அடைவார்கள். ஆன்மிக குறிப்புகள் : திங்கட்கிழமை அதிகாலையில் பெற்ற தாயை வணங்கி, ஆசிகளை பெற்றுக்கொண்டு, வெள்ளை நிற பூக்களால் அம்பாள் வழிபாடு செய்வதோடு கற்கண்டு கலந்த நைவேத்தியமும் படைப்பது சிறப்பு. சந்தன நிறம், ஐவரி நிறம், வெள்ளை ஆகிய நிறத்தில் ஆடைகள் அணிவது சிறப்பை தரும். பெண்பாலரிடம் சண்டை சச்சரவுகள் இல்லாது பார்த்துகொள்வது முக்கியம். கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். *🔯செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் :* நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதோடு, அறிவு பெற்றவர்களாகவும், கலை ரசிகர்களாகவும், விநோத பிரியர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் கருத்தை அப்படியே அங்கீகரிக்காமல் தமக்கென ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள். வெகுளியாகவும், கபடம் இல்லாமல் எல்லா விஷயங்களையும் நண்பர்களிடம் மனம் திறந்து சொல்வார்கள். அன்புக்கு உரியவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் துணிச்சலாக உதவி செய்வார்கள். செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களுக்கு அவர்கள் சொல்வதும், செய்வதும் சரி என்ற மனப்போக்கு உடையவர்கள். அதனால் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர் களுக்கு கெட்டவராகவும் நடக்கும் இயல்பு கொண்டவர்கள். அதனால் பலரது வெறுப்பை சம்பாதித்துக்கொள்வார்கள். உணர்ச்சி வயப்படுபவர்களாக இருப்பதால், அன்போ, வெறுப்போ அதீதமாக காட்டக்கூடியவர்கள். ஆன்மிக குறிப்புகள் : செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அரளிப்பூ மாலை கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால், வாழ்வு வளம்பெறும். அன்று மாலை ஸ்ரீபைரவருக்கு துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு. உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வது முக்கியம். சிவப்பும், மஞ்சளும் இருக்கும்படி ஆடைகளை அணிவது அதிர்ஷ்ட அலைவீச்சை உண்டாக்கி வெற்றிகளை தரும். நிதானம்தான் இவர்களுக்கு எப்போதும் வெற்றி தரக்கூடியது. *🔯புதன்கிழமை பிறந்தவர்கள் :* அறிவின் கூர்மையோடு, பல திறமைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். ரகசியங்களை வாழ்நாள் முழுவதும் காப்பதோடு, மற்றவர் உணர்வுகளை புரிந்து செயல்படுவார்கள். இளமையான தோற்றத்துடன் இனிமையாக பேசும் திறமை பிறர் ரசிக்கும்படி இருக்கும். அறிவாற்றல் காரணமாக எந்த பிரச்சினைகளிலும் சிக்குவதில்லை. வேலைகளை பொறுப்போடு கச்சிதமாக செய்து முடிப்பார்கள். மற்றவர்களது கருத்துக்களை சார்ந்து தமது செயல்களை வரையறுத்துக்கொள்ளும் மனநிலை கொண்டவர்கள். அதனால், பலரிடமும் ஒரு விஷயம் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியில் சொல்லமாட்டார்கள். மற்றவர்கள் பார்வையில் இவர்கள் காரியவாதிகளாக தென்படுவது இவர்களது குறையாக இருக்கும். ஆன்மிக குறிப்புகள் : புதன்கிழமை அதிகாலை துளசி, கல்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு, மகாவிஷ்ணுவை வழிபடுவதோடு, பாசிப்பயறு சுண்டல் நைவேத்தியத்துடன், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதும் சிறப்பு. தாய் மாமன் அல்லது ஒன்று விட்ட மாமன் ஆகிய உறவுகளிடம் புதனன்று ஆசிகள் பெறுவது நல்லது. பச்சை மற்றும் இளநீலம் கலந்த நிறங்கள் ஆடையில் இருக்குமாறு தேர்ந்தெடுத்து அணிவது பல நன்மைகளை உண்டாக்கும். வியாபார துறையில் இருப்பவர்கள் மரகத கல்லை அணிவது அல்லது வீடுகளில் வைத்து பூஜை செய்வதன் மூலம் வெற்றி உண்டாகும். *🔯வியாழக்கிழமை பிறந்தவர்கள் :* இவர்கள் குரு ஆதிக்கம் உள்ளவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளும் கொண்டு, பேச்சிலும் எழுத்திலும் ஆற்றல் மிக்கவர்கள். தெரிந்த வித்தைகளை முழு மனதுடன் பிறருக்கு கற்று கொடுப்பவர்கள். நல்லவர்களிடம் சுமுகமாக பழகுவதோடு, அத்து மீறுபவர்களை கண்டிக்கும் தைரியசாலிகள். தன்னை சார்ந்தவர்களை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். சுயநலம் பாராமல் உதவி செய்யக் கூடிய குணத்துடன், உண்மை, நீதி, நியாயம் ஆகியவற்றை வாழ்வில் கடைப்பிடிப்பார்கள். முன்கோபம் உடையவர்களாக இருப்பதால் வார்த்தைகள் கடுமையாக இருக்கும். பின்னர், கோபம் தணிந்து அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள் தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பினால் பல துன்பங்களை அடைவது இவருக்கு வழக்கம். பிறருடைய செயல்கள் பற்றிய மாற்று கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். ஆன்மிக குறிப்புகள் : வியாழக்கிழமை அன்று சூரிய உதயத்திற்கு முன்னர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்து, அவருக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொண்டை கடலை சுண்டல் நைவேத்தியம் செய்வதும் விசேஷமானது. வியாழனன்று ஆசிரியர்களை வணங்கி ஆசிகள் பெறுவது அவசியம். தங்க நிறம் ஆடைகளில் பிரதானமாக இருப்பது இவர்களுக்கு சாதகமான சூழல்களை ஏற்படுத்தும். வியாழக்கிழமை பூச நட்சத்திரம் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை செய்வது பல நன்மைகளை தரும். *🔯வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் :* சுக்ரன் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் கலைகளில் நாட்டத்துடனும், எதிர் பாலினத்தவரை கவரும் இயல்புடனும் இருப்பார்கள். பேச்சால் மற்றவர்களை தன் வயப் படுத்தி வேலைகளை செய்து முடிப்பார்கள். குடும்ப உறவுகள் இவருக்கு உறுதுணையாக இருக்கும். சுகவாசிகளாக இருப்பார்கள். பொறுமைசாலியாக தென்பட்டாலும், சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. சிந்தனை மற்றும் செயல் ஆகியவற்றில் நிதானமாக இருந்தாலும், அசட்டு தைரியம் இருக்கும். மற்றவரின் மனதை புண்படுத்தக்கூடிய அளவிற்கு கேலியும், கிண்டலும் கலந்து பேசி விடுவார்கள். எந்த காரியத்திலும் லாப நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்து செயல்படும் இயல்பு உடையவர்கள். ஆன்மிக குறிப்புகள் : வெள்ளிக்கிழமை அதிகாலையில் மல்லிகைப் பூக்கள் கொண்டு ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்து அம்பிகையை வழிபடலாம். பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்வது விசேஷம். முக்கியமான விஷயங்களுக்கு, வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிந்து சென்றால் வெற்றி நிச்சயமாகும். வெள்ளியன்று வரக்கூடிய சுக்ர ஹோரை காலமானது இவர்களுக்கு ஆன்மிக வெற்றிகளை தரக்கூடியது. *🔯சனிக்கிழமை பிறந்தவர்கள்* பொறுமையுடனும், நீதி நேர்மையுடனும் தமது வேலைகளை முடித்து விட்டுத்தான் மற்றவை பற்றி எண்ணுவார்கள். பெரியோர்களிடம் மிகுந்த பக்தி கொண்டவர்களாக இருப்பதோடு, தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருப்பார்கள். பிறருடைய கஷ்டங்களை இவர்களால் தாங்க முடியாது. தன்னை ஒருவர் ஏமாற்றி விட்டாலும், தமது பாதையில் தொடர்ந்து நடப்பவர்கள். சனி ஆதிக்கம் காரணமாக ஆழ்ந்த சிந்தனை செய்து கொண்டிருப்பதால், முகத்தில் எப்பொழுதும் கவலை குடிகொண்டிருக்கும். எதையும் கூர்ந்து ஆராய்ந்து பார்த்து, அதன் சாதகமான பலனை அறிந்த பின்னரே காரியத்தில் ஈடுபடுவார்கள். நினைத்ததை சாதிக்கும் பிடிவாத குணம் உடையவர்கள். ஆன்மிக குறிப்புகள் : சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து நீல சங்குப்பூ, வில்வம் சாற்றி சிவபெருமானை வழிபடுவது நல்லது. ஆலய மூலஸ்தானத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றுவது சிறப்பு. பூஜைக்கு பிறகு காகத்துக்கு எள் கலந்த நெய் சாதம் வைப்பதோடு உடல் ஊனமுற்றவர்களுக்கு தானம் அளிப்பதும் முக்கியம். கடன் தரக்கூடிய தொழிலில் இருப்பவர்கள் அதிக வட்டி வாங்கினால் கர்ம வினையின் பாதிப்புகள் வந்து சேர்ந்து விடும் காரணத்தால், வட்டி விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆடைகளில் நீலம் சார்ந்த வண்ணங்களை பயன்படுத்துவது பல நன்மைகளை தரும்.🙏🌹ஹனுமன் ஆர் கே சாமி🌹🙏
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *சற்புத்திர பாக்கியம்* லக்னாதிபதியும் புத்திர ஸ்தானாதிபதியும் ஒரு ராசியில் இருந்தாலும் (அ) ஒருவரை ஒருவர் பார்த்தாலும் ராசி அதிபதியும் புத்திர ஸ்தானாதிபதியும் சேர்ந்திருந்தாலும் (அ) ஒருவரை ஒருவர் பார்த்தாலும் அந்த ஜாதகருக்கு சற்புத்திர பாக்கியம் உண்டு. - ஸ்ரீ மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
Top