Astrology Discussions

11 - ம் பாவத்தில் சனியும் சந்திரனும் இணைந்து நின்றால் அந்த ஜாதகருக்கு பொன், பொருள், பூமி முதலிய அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
கிரக சேர்க்கை என்பது இரண்டு கிரகங்கள் ஒரே கட்டத்தில் இருப்பதாக மட்டும் கணக்கிடக்கூடாது. 1,5,9 என்னும் திரிகோண ஸ்தானங்களையும் சேர்த்தே கணக்கிட வேண்டும். இந்த கணக்கீடுகள் எந்த லக்னம் அல்லது எந்த ராசி என்பது பார்க்கப்பட வேண்டியதில்லை. கிரக சேர்க்கை மட்டுமே கவனிக்கவேண்டும். சூரியன் சந்திரன் ஒன்றாக இருந்தாலும் அல்லது சூரியனுக்கு 5ம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் அல்லது சூரியனுக்கு 9ம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் இது சூரியன் சந்திரன் ஒன்றாக இருப்பதாகத்தான் கருதப்படவேண்டும். உங்களது ஜனன ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணைந்திருந்தாலும் அல்லது சூரியனுக்கு 5ம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் அல்லது சூரியனுக்கு 9ம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் உயர்பதவியில் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு அர்த்தமற்ற பயம் உண்டாகும். சின்னச்சின்ன பொய்கள் பேசுபவராக இருப்பார்கள். மூளை மற்றும் இதய நோய் குறித்த பயம் உடையவராக இருப்பார்கள். அவசர முடிவுகளை எடுத்துவிட்டு ’என்ன நடக்குதுன்னு தெரியலயே’ என்கிற மன நிலைக்கு ஆளாவார்கள். ஜாதகருக்கு ஸ்திரமான புத்தி இருக்காது. சதா மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அவப்பெயருக்கு ஆளாக நேரிடுவதுடன் அரசாங்க தண்டனைக்கும் ஆளாகக் கூடும். கணவன் மனைவி இடையில் பணியின் காரணமாகவோ அல்லது கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ தற்காலிகமான பிரிவு ஏற்படும். சூரியன் லக்னாதிபதியாக இருந்தால், லக்னாதிபதி கெடுபலன் செய்ய மாட்டார் என்ற விதிப்படி மேற்கண்ட அசுப பலன்கள் சுப பலன்களாக மாறும். அதேபோல் சூரியனோ அல்லது சந்திரனோ அங்கு ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலும் கெடுபலன்கள் ஏற்படாது. மற்றுமொரு முக்கியமான விதியையும் குறிப்பிட வேண்டும். அதாவது கேந்திர ஸ்தானாதிபதியும் திரிகோணாதிபதியும் யாரோடு சேர்ந்திருந்தாலும், தான் நல்லது செய்வதுடன் தன்னுடன் இணைந்திருக்கும் கிரகத்தையும் நல்லது செய்யவைக்கும். சூரியன் சந்திரன் நெருங்கிய பாகையில் ஒன்றாக இருப்பது அமாவாசை யோகம் நிகழும். இது வளர்பிறை சந்திரன் சேர்க்கை நல்ல பலனை தரும். ஜாதகர் உடல் மற்றும் மனவலிமையும் கொண்டவராகவும், பல எந்திர கருவிகள் உருவாக்குபவனாகவும், மருத்துவம் அறிந்தவனாகவும், புத்திக்கூர்மை, சிறந்த நிர்வாகியாகவும் இருப்பார்கள். இந்த இரு ஒளிகிரகங்கள் லக்கினத்திற்கு திரிகோண, கேந்திர மற்றும் 2,9,10 ஆகிய இடங்களில் ஒன்று சேர்ந்து இருந்தால் புகழ், செல்வம், மக்களால் பாராட்டும் தலைவராகவும் இருப்பார்கள். அமாவாசை யோகம் ஒருவிதத்தில் நல்லது என்றாலும் சில பாவங்களில் அமரும்பொழுது மாறுபடும். பாரப்பாயின்ன மொன்று பகரக்கேளு பகலவனும் கலை மதியும் கோணமேற சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும் செல்வனுக்கு வேட்டலுண்டு கிரகமுண்டு ஆறப்பா அமடு பயமில்லை யில்லை அர்த்த ராத்திரிதனிலே சப்தம் கேட்பன் கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில் கூற்றுவனார் வருங்குறியை குறிபாய் சொல்லே - புலிப்பாணி சூரியனும், சந்திரனும் இணைந்து இருந்தால் எல்லாவித செல்வங்களும், வீடு, ஆயுள் விருத்தி , கொண்டவராகவும் மற்றும் ஜாதகர் இரவில் சப்தங்களைக் கேட்பானகவும் இருப்பார். இத்தகைய அமைப்பில் உள்ள நபர் அதிகபட்சம் 78 வயது வரை உயிர் வாழ்வார் என சித்தர் கூற்று. சூரியன் சந்திரன் இரண்டு ஒளிகிகங்களில் சந்திரன் இரவு வேளைக்கு அதிபதி என்பதால் வளர்பிறை காலங்களில் சந்திர தரிசனம் செய்ய மனக்குழப்பம் நீங்கும். மனக்குழப்பத்தால் பய உணர்வு மிகுதியாக உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் வெண்ணிற மலர்களால் சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபட வேண்டும். இப்படிபட்ட ஜாதக அமைப்பு உடையவர்கள் ஹனுமனை தொடர்ந்து வழிபட்டால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை உணர்வார்கள்.
1 .7 –ஆம் பாவம் சுபர் பார்வை , சம்பந்தம் இல்லாமல் இருந்தால், நல்ல கணவனைத் தரும் ஆனால் அதிருஷ்டம் இல்லை 2 சனி – புதன் 7 இல் இருந்தால்-- கணவர் அலி தன்மை உடையவர் ,விந்துவில் உயிர் அணுவில் சக்தி இல்லாதவர . 3. 7 – ஆம் பாவம் சர ராசியானால் – கணவர் வீட்டை விட்டு வெளியில்இருக்கும் நிலை உள்ளவர் 4 7 – ஆம் பாவத்தில் சூரியன் இருந்து பாவிகள் பார்த்தாலும் ,கணவரால் கை விடப்படுவார் 5 .-7 ஆம் பாவத்தில் செவ்வாய் இருந்து பாவிகள் பார்வை செய்தாலும் ,சேர்ந்து இருந்தாலும் . இளமையில் விதவையாம் . 6. 7 – ஆம் பாவத்தில் சனி பாவிகள் சம்பந்தம் பெற்றால் கடைசி வரை திருமணம் ஆகாமல் இருப்பர் . 7 . பாவிகள் 7 –ஆம் பாவத்தில் இருந்தால் , சுபர் பார்வை இல்லா விட்டால் இளமையில் விதவை . 8 – 7 – ஆம் பாவத்தில் சுபர் ,பாவர் , சம்பந்தம் பெற மறுமணம் உண்டு 9 – ஆம் பாவம் பலமற்று ,பாவிகள் சம்பந்தம் பெற கணவரால் ஒதுக்கிவைக்க படுவார் . 10 . சுக்கிரனும் , செவ்வாயும் , நவாம்சத்தில், பரிவர்தனை பெற்றால்பல ஆண்கள் தொடர்பு உண்டு . 11. சுக்ரன் +செவ்வாய் + சந்திரன் இணைந்து 7 ஆம் இடத்தில் ராசி , அம்சத்தில் இருப்பது கணவரின் அனுமதியுடன் பல ஆண்களுடன் தொடர்பு ஏற்படும் .இவையெல்லாம் பொதுப் பலன்கள்
சுக்கிரன் 6,8,12 ல் இருந்து, லக்னாதிபதியும் 6,8,12 ம் பாவங்களின் சம்பந்தம் பெற்று, 7- ம் அதிபதி பாவராகவோ நீசம் பெற்றோ இருந்தால் அந்த ஜாதகருக்கு திருமணம் நடப்பது அரிது.
1. சூரியன் செய்யும் பாதகங்கள் ; சூரியனுக்கு பலம் குறைவாக இருந்தால் அக்னி ரோகம் ,ஜுரம் ,தீபனம் ,கஷயம் ,அதிசாரம் ,முதலிய வியாதிகளையும் ,ராஜாவின் சேவகர்களால் . துன்பம் உண்டுபண்ணும் .ராஜா என்பது தற்காலத்தில் அரசாங்க பகை , என்றும் கொள்ளலாம் . 2 .சந்திரன் செய்யும் பாதகங்கள் ; ஜலதோஷம் , பாண்டுதோசம் ,போன்ற வியாதிகளையும் ,பெண்கள் மூலமாக வரக்கூடிய வியாதிகளையும் ,காளி தேவியாலும் ,ராட்சசர்கள் மூலமாயும் ,சுவாஸினி கணங்கள் மூலம் மானோ வியாதி செய்கிறது. 3 .செவ்வாய் செய்யும் பாதகங்கள் ; பெருத்தபீஜம் ,கபம் ,ஏவல் ,அக்னி ,கொப்பளம் ,ரணங்கள் ,தரித்ரம் ,முதலிய வியாதிகளையும் , ,வீர சைவ கண பைரவர் மூலம் துன்பம் உண்டு பண்ணுவான் . 4 புதன் செய்யும் பாதகங்கள் ஆசனத்தில் வியாதி , வயற்றில் வியாதி ,குஷ்டரோகம் ,மந்தாகினி ரோகம் சூல வியாதி , கிரகணி ரோகம் , முதலியன, விஷ்ணு பக்தர்களான தாசர்களின் சாபம் மூலமாகவும் ,புதன் துக்கத்தை செய்வார் 5 .குரு செய்யும் பாதகங்கள் ; ஆசாரியன் , தேவன் , குரு , பிராமணர் ,முதலியவர்கள்] மூலம் சாபம் தோஷங்களும் ,குன்ம வியாதி மூலம் குரு துக்கத்தை செய்வார் . 6. சுக்கிரன் செய்யும் பாதகங்கள் ; பெண் மூலம் ஏற்படும் நோய்களும் ,ராட்சசர்கள்மூலமும் , இஷ்ட பெண் மூலமும் சுக்கிரன் துக்கத்தை செய்வார் .. 7. சனி செய்யும் பாதகங்கள் ; தரித்திர தோசம் , நிஜ கர்மம் ,பைசாசம் ,திருடர்கள் ,சகல் வியாதி மூலம் சனி துக்கத்தை செய்வார் .. . 8 . ராகு செய்யும் பாதகங்கள் ; அபஸ்மாரம் ,நரம்பு , சிலந்தி ,துஷ்ட கிரகங்கள் மூலம் வியாதியும் ,புழுக்கள் ,மூலம் வியாதியும் ,பிரேத , பூத , அருசி , குஷ்டரோகம் , முதலிய வியாதிகளும் ராகு உண்டு பண்ணுவார் . 9 .கேது செய்யும் பாதகங்கள் ; நமைச்சல் ,அம்மை , சத்ருக்கள் , கர்மரோகம் , மூலமாகவும் ,ஆசாரம் குறைவான நீச ஜாதிகளாலும், கேது துக்கத்தை செய்வார் .. கிரக பாதகங்கள் நீங்க பரிகாரங்கள் ; எந்த கிரகத்தின் கோபத்தில் வியாதிகள் உண்டாகுமோ அந்த கிரகத்திற்குதர்ப்பண , ஹோமம் ,தானதி , பூஜைகள் செய்தால் , அவர்கள் வியாதிகள் நீங்கி ,நல்ல சௌபாக்கியம் அடைவார்கள் என்பது உறுதி . மேலும் அந்தந்த கிரகத்தின் ரத்னம் ,தான்யம் ,ஆடை ,மலர் ,கிரக திருதலங்கள் தரிசனம் மூலமாகவும் ,அதிதேவதையை வணங்குவதன் மூலமாவும் ,உலோகம் , சமித்து , பயன் படுத்தி நிவராணம் பெறலாம் .
அசுவனி- கேது -கோமாதாவுடன் கூடிய சிவன் பரணி- சுக்கிரன் - சக்தியுடன் கூடிய சிவன் கார்த்திகை - சூரியன் -சிவன் தனியாக ரோகிணி - சந்திரன் -பிறை சூடியப் பெருமான் மிருகசீரிஷம் - செவ்வாய்- முருகனுடைய சிவன் திருவாதிரை - ராகு -நாகம் அபிஷேகம் செய்யும் சிவன் புனர்பூசம் - குரு -விநாயகர், முருகனுடன் உள்ள சிவன் பூசம். ... சனி - நஞ்சுண்டும் சிவன் - ஆயில்யம். ... புதன் - விஷ்னுவுடன் உள்ள சிவன் மகம். ... கேது - விநாயகரை மடியில் வைத்த சிவன் பூரம். ... சுக்கிரன் - அர்த்தநாரீஸ்வரர் உத்ரம். ... சூரியன் - நடராஜ பெருமான்-தில்லையம்பதி ஹஸ்தம். ... சந்திரன் - தியாண கோல சிவன் சித்திரை -செவ்வாய்- பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன் சுவாதி- ராகு- சகஸ்ரலிங்கம் விசாகம் -குரு -காமதேனு மற்று,ம் பார்வதியுடன் உள்ள சிவன் அனுஷம் - சனி-ராமர் வழிபட்ட சிவன் - கேட்டை -புதன் -நந்தியுடன் உள்ள சிவன் மூலம் - கேது -சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன் பூராடம் - சுக்கிரன் -சிவ சக்தி கணபதி உத்திராடம்- சூரியன் -ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன் திருவோணம்சந்திரன் -சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன் அவிட்டம் - செவ்வாய் - மணக்கோலத்துடன் உள்ள சிவன் சதயம் - ராகு -ரிஷபம் மிது சத்தியுடன் உள்ள சிவன் பூராட்டாதி -குரு -விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன் உத்திராட்டாதி - சனி -கயிலாய மலையில் காட்சி தரும் சிவன் ரேவதி- புதன் - குடும்பத்துடன் உள்ள சிவன் !!
சனி செவ்வாய் 2ல் இருந்து சந்திரன் 8ல் இருந்தால் அந்த ஜாதகருக்கு மனநிலை பாதிக்கப் படும்.
4 - ம் அதிபதியும் 10 - ம் அதிபதியும் இணைந்திருக்க செவ்வாய் ஆட்சி/உச்சமானால் அந்த ஜாதகர் பல மனைகள்/வீடுகள் வாங்குவார்.
6 - ம் இடத்தில் சனி செவ்வாய் இருக்க அவர்களை சூரியன் அல்லது ராகு பார்க்க லக்னாதிபதியும் பலமிழந்து இருந்தால் அந்த ஜாதகருக்கு தீராத நோயினால் மரணம் உண்டாகும்.
👉 சதய நட்சத்திரத்தின் இராசி : கும்பம் 👉 சதய நட்சத்திரத்தின் அதிபதி : ராகு 👉 சதய நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி *👍🏼பொதுவான குணங்கள் :* 👉 புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள். 👉 எளிதில் மற்றவர்களை கவரக்கூடியவர்கள். 👉 மகிழ்ச்சியான மனநிலையை உடையவர்கள். 👉 வன் சொற்களை விரும்பாதவர்கள். 👉 சினம் கொள்ளும் குணம் கொண்டவர்கள். 👉 நெருங்கியவர்களுக்கு இனியவர்கள். 👉 ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்கள். 👉 தலைவர்களுக்கு பிடித்தவர்கள். 👉 நீராடுவதில் நாட்டம் உடையவர்கள். 👉 வாதாடுவதில் வல்லவர்கள். 👉 வசீகரமான தோற்றம் உடையவர்கள். 👉 பரந்த சிந்தனையுடன் திட்டமிடுபவர்கள். 👉 காரியத்தில் வல்லவர்கள். 👉 நன்கு சிந்தித்து பின்பு செயல்படுவார்கள். *💫சதயம் முதல் பாதம் 1️⃣:* இவர்களிடம் சதய நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். 🌟 நன்னடத்தை உடையவர்கள். 🌟 திடமான மனதை கொண்டவர்கள். 🌟 விரும்பியதை செய்யக்கூடியவர்கள். 🌟 கால்நடைகளால் இலாபம் அடையக்கூடியவர்கள். *💫சதயம் இரண்டாம் பாதம் 2️⃣:* இவர்களிடம் சதய நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். 🌟 உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். 🌟 பழிவாங்கும் குணம் கொண்டவர்கள். 🌟 இறை நம்பிக்கை உடையவர்கள். *💫சதயம் மூன்றாம் பாதம் 3️⃣:* இவர்களிடம் சதய நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். 🌟 காரிய சித்தி உள்ளவர்கள். 🌟 பசி தாங்காதவர்கள். 🌟 நற்குணங்களை உடையவர்கள். 🌟 எதையும் விரும்பாதவர்கள். 🌟 சேவை மனப்பான்மை உடையவர்கள். 🌟 கல்வியில் சிறந்தவர்கள். *💫சதயம் நான்காம் பாதம் 4️⃣:* இவர்களிடம் சதய நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். 🌟 எண்ணியதை சாதிக்கக்கூடியவர்கள். 🌟 நல்ல குணங்களை உடையவர்கள். 🌟 சௌபாக்கியம் நிறைந்தவர்கள். 🌟 கீர்த்தி உடையவர்கள். 🌟 பொறுமையாக செயல்படக்கூடியவர்கள்.
ஜாதகத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை உள்ளவர்கள், உறங்கும் போது தன் கைகளை கன்னத்தில் முட்டுகொடுத்து தூங்குவார்கள். கைகளை புதனும், கன்னம் மற்றும் முகத்தை சுக்கிரனும் குறிக்கிறார்கள்.
7- ஆம் வீடடு அதிபதியின் நட்ச்சத்திர அதிபதி 7 – ஆம் பாவத்தின் நட்ச்சத்திர அதிபதி 7 –ஆம் அதிபதி ,7 –ஆம் பாவம் , இவைகளை பார்க்கும் கிரகங்களின் நட்ச்சத்திர அதிபதி மூலம் தெரிந்து கொள்ள முடியும் . மனைவியின் இருக்கும் தூரம் 7 ஆம் வீடடு அதிபதி ,சுக்ரன் இருவரின் பாகையை கூட்டிவரும் ராசிக்குரிய நவாம்சம் சரமானால் அதிக தூரம் , ஸ்திரம் ஆனால் அருகில் 20 K.M உபயம் ஆனால் 50 K.M தூரத்தில் அமையும் .. மனைவியின் குடும்பம் மனைவி உயர் குடும்பமா (அ) நடுத்தர குடும்பமா 7 ஆம் வீடடு அதிபதி பலம் பெற்றால் நல்ல பணக்கார வீடடு பெண் மனைவி ஆவாள் . 7 –ஆம் வீடடு வீடடு அதிபதி பலவீனம் ஆனால் வசதி குறைவாக உள்ள வீடடு பெண் தான் அமைவாள் . மனைவி வந்ததும் ,அதிருஷ்டம் வருமா ஒருவரின் ஜாதகத்தில் கீழ்க்கண்ட பாவங்கள் மனைவியின் ராசியாக அமையும் ஆனால் திருமணம் ஆன பின் யோகம் . 7ஆம் அதிபதி இருக்கும் இடம் , அது நவாம்சத்தில் இருக்கும் இடம் 7 ஆம் அதிபதியின் உச்ச ராசி, சுக்ரன் இருக்கும் 7 வீடு,சந்திரன் அஷ்ட வர்க்கத்தில் அதிக பிந்துக்கள் உள்ள ராசி, சர்வாஷ்ட வர்க்கத்தில் அதிக பிந்துக்கள் உள்ள ராசி
10 ம் அதிபதியும் 11 ம் அதிபதியும் பரிவர்த்தனையாகி லக்னாதிபதி அல்லது தன ஸ்தானாதிபதியின் கேந்திரத்தில் சூரியன், புதன் இருந்தால் அந்த ஜாதகன் குடிசையில் பிறந்தாலும் கோடீஸ்வரன் ஆகி விடுவான்.
எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் 🎈நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். 🎈 அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம். 🎈நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம். 🌙பரிகார பூஜைகள் செய்யலாம்.வீட்டில் முக்கிய பூஜைகளைச் செய்யலாம், மந்த்ரஉபதேசம் பெறலாம்,மந்த்ர பாராயணம் செய்யலாம்,கோவில்களில் முக்கிய பூஜைகளைச் செய்யலாம், வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் கட்டாயமாக உண்டாகிறது. 🌙நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்: 🌙அஸ்வினி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 🌙பரணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 🌙கிருத்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 🌙ரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 🌙மிருகசீரிஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 🌙திருவாதிரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 🌙புனர்பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 🌙பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 🌙ஆயில்யம் : நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம். 🌙மகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 🌙பூரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 🌙உத்திரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 🌙அஸ்தம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயிணீல்யம், பூரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்
6ம் வீடு முதல் 12ம் வீடு வரை தொடர்ந்து இடைவிடாது ராகு கேதுவை தவிர மற்ற கிரஹங்கள் அமைவது
5ம் வீடு முதல் 11ம் வீடு வரை தொடர்ந்து இடைவிடாது ராகு கேதுவை தவிர மற்ற கிரஹங்கள் அமைவது
4ம் வீடு முதல் 10ம் வீடு வரை தொடர்ந்து இடைவிடாது ராகு கேதுவை தவிர மற்ற கிரஹங்கள் அமைவது
ம் வீடு முதல் 9ம் வீடு வரை தொடர்ந்து இடைவிடாது ராகு கேதுவை தவிர மற்ற கிரஹங்கள் அமைவது
Top