Astrology Discussions

*ஓம் சரவண பவ!* எந்த ஒரு லக்னத்தவருக்கும் முன்றாம் பாவகத்திற்கோ,மூன்றாம் அதிபதிக்கோ,சனி செவ்வாய் தொடர்பு ஏற்பட்டால்,*தொண்டையில்* பாதிப்பை உண்டாக்கும். சுபர்களான புதனோ,குருவோ பார்க்க,சிறு (Astro Sadaiji ) தொந்தரவாலோ,அல்லது *ஆப்ரேசன் மூலமாகவோ* சரியாகும். சந்திரன் லக்ன பாபராகவோ அல்லது தேய்பிறை சந்திரனாகவோ இருந்து செவ்வாய் சனியை பார்த்தால் *தீர்க்க முடியாத சொந்தரவாக* தொண்டை பிரச்சனை இருக்கும். என்றும் ஜோதிடப்பணியில் Astro Sadaiyappa 8122156377
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *புலமையுடன் கூடிய செல்வ யோகம்* ஒரு ஜாதகத்தில் செவ்வாயுடன் நீர் கிரகங்களான சந்திரனோ அல்லது சுக்கிரனோ இணைந்து இருந்தால் அந்த ஜாதகர் திறமைசாலியாகவும் செல்வவளம் பொருந்தியவராகவும் நல்ல புகழ் உடையவராகவும் இருப்பார். மேலும் இவருக்கு மற்றவரிடம் அன்பாக பண்பாக பேசும் இயல்பும் மொழியில் புலமையும் இருக்கும். ஸ்ரீ மஹாகணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
பொதுவாக, ஜோதிட பரிச்சியம் இல்லாத ,நம் மக்கள் மனதில், சுக்கிரதிசை வந்தாலே சூப்பராக இருக்கும் என்று தப்புக் கணக்கு போடுகின்றனர். சுக்கிரன் சிலநேரங்களில், சுளுக்கெடுக்கவும் செய்யும். இது தான் உண்மை. கன்னியா லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் ,மகர, லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் மட்டுமே சுக்கிரன் முழு யோகாதிபதியாக செயல்படும். 30,35 வயதில் இவர்களுக்கு சுக்கிர தசை வந்தால் ,நிச்சயமாக இவர்கள் புண்ணியம் பல செய்து, கொடுத்து வைத்தவர்களே. இந்த இரு லக்னங்களுக்கும் சுக்கிரன் ஆதிபத்திய ரீதியாக ,முழு யோகத்தைத் தர கடமைப்பட்டவர் என்ற அமைப்பில் ,20 வருடங்களும் யோக பலனை ,அள்ளி அள்ளி வாரி வழங்கும். அதுபோல் இருக்கும் தசைகளிலேயே பெரிய தசை சுக்கிர திசைதான் என்பதால், 20 வருடமும் ஏகபோக வாழ்க்கைதான். சுக்கிரனின் காரகத்துவமே சொகுசு வாழ்க்கை என்பதால், சுக்கிர தசை நல்ல ஆதிபத்தியம் பெற்று 30 வயதை ஒட்டி சுக்ரதசை வருபவர்கள் நிச்சயமாக யோகவான்களே. கும்ப லக்னத்திற்கு ,சுக்கிரன், யோகாதிபதியாக வந்தாலும் பாதகாதிபதி என்ற அமைப்பை பெறுவதால், எல்லாம் கிடைத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் பிடுங்கிக் கொள்ளும் அல்லது ஏதாவது ஒருவிதத்தில் குறை இருக்கும். மிதுன லக்கினத்திற்கு பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி என்ற அமைப்பை பெற்றாலும், விரையாதிபதி என்ற மற்றொரு ஆதிபத்திய பலனையும் செய்வார். கொடுத்துக் கெடுக்கும் அல்லது கெடுத்துக் கொடுக்கும் என்ற அமைப்பு. கடக லக்னத்திற்கு சுக்கிரன் 4 ,11-க்குடைய என்ற சுப ஆதிபதிபத்ய அமைப்பை பெற்றாலும், லக்னாதிபதி சந்திரனுக்கு சுக்கிரன் பகைவர் என்பதாலும் ,கடக லக்னத்திற்கு பாதகாதிபதியாவாதாலும் சுக்கிர திசை சூப்பராக கொடுத்து,கெடுத்து சுளுக்கெடுக்கும். மேஷ ,விருச்சிக லக்கினங்களுக்கு 45 லிருந்து 50 மதிப்பெண் பெற்ற மாணவனை போலவும், சிம்ம லக்கினத்தை பொருத்தவரை ஜஸ்ட் பாஸ் என்ற அமைப்பிலும் இருக்கும். தனுசு லக்னத்திற்கும் ,மீன லக்னத்திற்கும் சுக்கிர தசை வந்தால் உரி, உரி என உரித்து உப்புகண்டம் போட்டு விடும். குறிப்பாக மீன லக்னத்திற்கு சுக்கிர தசை எந்த நிலையிலும் வரவே கூடாது. மீன லக்னத்திற்கு சுக்கிர தசைக்கு அடுத்து வரக்கூடிய சூரிய திசையும் 6க்குடைய தசை என்பதால் ,மீன லக்கனத்தில் ,சனியின் நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் ஒருவிதத்தில் பாவப்பட்டவர்களே. பிறந்ததிலிருந்து அவயோக திசைகளாகவே செல்லும். சுக்கிரன், ஜாதகத்தில் பாவ கிரக சேர்க்கை அமைப்புகளை பெற்று , பருவ வயதில் சுக்கிர திசை வந்தால், பெண்களின் சகவாசத்தோடு, சல்லாப அமைப்பையும் சுக்கிரதிசை கொடுத்து,கெடுத்துவிடும். காரணம் .காதல் காமத்தின் காரணகர்த்தாவே சுக்ரன்தான்.
ஓம் சரவண பவ! *ஆண்_பெண்* எந்த குழந்தையாக இருந்தாலும் சூரியனுக்கு திரி கோணத்தில் ராகு இருந்தால் ஒரு வருடங்களுக்கு தந்தைக்கு *விசம் சார்ந்த* பயம் ஏற்படும். Astro Sadaiji சூரியனையோ ராகுவையோ குரு பார்க்க *தோஷ நிவர்த்தி ஏற்படும்*. *ஆண் குழந்தையாகி* சூரியன் குரு,ராகு என மூவரும் ஒருவருக் கொருவர் திரிகோணத்தில் இருக்க இவர்களுக்கு சனி செவ்வாய் தோடர்பு ஏற்பட குழந்தை மற்றும் தந்தை என இருவருக்கும் ஒரு வருடம் வரை *ஆயுள் சார்ந்த* கண்டமும், பயமும் ஏற்படும். *பெண் குழந்தையாகி* சூரியன் சுக்கிரன் ராகு என மூவரும் ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் இருக்க, இவர்களுக்கு சனி செவ்வாய் தோடர்பு ஏற்பட குழந்தை மற்றும் தந்தை என இருவருக்கும் ஒரு வருடம் வரை ஆயுள் சார்ந்த பாதிப்பும் *பயமும் ஏற்படும்.* இதற்கான பரிகாரமாக *நட்சத்திர* கேட்ப விருட்ஷ மூலிகையை வைத்து தாயத்து செய்து அணிந்து கொள்வதும். சிவனுக்கு *ருத்திராபிஷேகம்* செய்து கொள்வதும்.*மிருத்யுஜெய மந்திர* ஜெபம் செய்வதும் சிறந்த பரிகாரமாகும். மேலும் பஞ்சாரம் மந்திரம் ஜெபித்து ராசிக்கான *மூலிகையை* குழந்தையின் தொட்டிலில் கட்டுவதும்,எள் உளுந்து தானியங்களை தானமாக கொடுத்துப்பதும், *லக்ன அதிபதிக்கேற்ப* மூலிகையை *தாயத்தாக செய்து* தந்தையின் படுக்கையில் வைத்து தூங்கி வருவமும், உயிர் காக்கும் பரிகார அமைப்பாகும். *குறிப்பு :* ஒவ்வொரு நட்சத்திரம், ராசி,லக்னத்திற்கு ,கிரகங்கள் என ஒவ்வொரு அமைப்பிற்கும் *விசேஷ மூலிகை* இருக்கிறது என்பதை நினைவில் கொள்க. என்றும் ஜோதிடப்பணியில் Astro Sadaiyappa 8122156377
ஜோதிட சாகரம் *மேஷ லக்கினம்* மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் தசா மற்றும் சூரிய தசா மற்றும் குரு தசா ஆகிய தசா காலங்கள் யோகமாக அமையும். *ரிஷப லக்னம்* ரிஷப லக்னத்திற்கு சுக்கிரன் தசா புதன் தசா காலங்கள் நன்மையானதாகவும் சனி தசா யோகமானதாக அமையும். *மிதுன லக்கினம்* மிதுன லக்னத்திற்கு புதன் தசா சுக்கிர தசா மற்றும் சனி ஆகியவை யோகமானதாக அமையும். *கடக லக்கனம்* கடக லக்கினத்திற்கு சந்திரன் மகாதசா மற்றும் செவ்வாய் மகாதசாவும் குரு தசா ஆகியவை யோகமானதாக அமையும் . *சிம்ம லக்கனம்* சூரியன் மகா தசா குரு மகாதசா மற்றும் செவ்வாய் தசா இந்த காலங்களில் யோகமானதாக அமையும். *கன்னி லக்கனம்* கன்னி லக்னத்திற்கு புதன் தசா காலம் சனி தசா நன்மை தரும் மேலும் சுக்கிர மகாதசா யோகமாக அமையும் . *துலாம் லக்கனம்* துலாம் லக்னத்திற்கு சுக்கிர தசா சனி தசா மற்றும் புதன் தசா யோகமாக அமையும். *விருச்சிக லக்கனம்* விருச்சிக லக்னத்திற்கு குரு தசா செவ்வாய் தசா மற்றும் சந்திரன் தசா யோகம் உள்ளதாக அமையும் . *தனுசு லக்கனம்* தனுசு லக்னத்திற்கு குரு தசா மற்றும் செவ்வாய் தசா நன்மையானதாகவும் சூரிய தசா யோகத்தை தருவதாகவே இருக்கும் . *மகர லக்கனம்* மகர லக்னத்திற்கு சனி தசா சுக்கிர தசா ஆகியவை நன்மை ஆனதாகவும் புதன் தசா யோகம் உள்ளதாகவும் இருக்கும். *கும்ப லக்கனம்* கும்ப லக்கினத்திற்கு சனி முற்றும் புதன் தசா நன்மையானதாகவும் சுக்கிர தசா யோகம் உள்ளதாகவும் அமையும் . *மீன லக்கினம்* மீன லக்கினத்திற்கு குரு தசா மற்றும் சந்திர தசா நன்மை ஆனதாகவும் செவ்வாய் தசா யோகம் ஆனதாகவும் அமையும் .. *சில கவனிக்க வேண்டிய முக்கிய தசா விதிகள்* மேற்கூறிய விஷயங்களில் லக்கினாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியும் மாரக பாதகாதிபதிகளாக வருவதில்லை ஆனால் ரிஷபம் சிம்மம் கும்பம் ஆகிய லக்னங்களுக்கு ஒன்பதாம் அதிபதி பாதகாதிபதியாக வருவதால் அந்த குறிப்பிட்ட கிரகங்கள் இருக்கும் பாவகத்தை பொறுத்து நல்ல மற்றும் தீய விளைவுகளை தசா காலங்களில் தரும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் ...... அதேபோல் என்னதான் லக்னத்திற்கு சுப கிரகங்களின் தசா நடந்தாலும் அந்த கிரகங்கள் மறைவு ஸ்தானங்களில் இல்லாமலும் ராகு கேதுவுடன் கிரகண அமைப்பில் இல்லாமலும் வக்கிரம் மற்றும் அஸ்தங்கம் பெறாமலும் நீசம் அடையாமல் இருந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்து தசா நடத்தினால் நன்மையே .....இதில் லக்னத்திற்கான சுபகிரகங்கள் நித்திய நாம யோகியாகவும் ஆட்சி உச்சம் மூலத்திரிகோணம் பெற்று அல்லது நட்பு வீடுகளில் இருந்து சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் நவாம்ச பலம் புஷ்கர நவாம்சம் போன்ற அமைப்புகளில் இருந்தாலும் இந்த லக்ன சுபர்கள் இளம் வயதில் தசா நடத்தினால் குடும்பம் கல்வி வசதி வாய்ப்புகளில் சிறந்தவராக வலம் வர முடியும்.
இது சுப யோகம் இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடன் பெயர் புகழ் பெற்று சிறப்பாக நல் வாழ்க்கை வாழ்வார்கள் அன்பு பாசம் ஈகை தர்ம குணம் உடையவர்கள் நல்ல பக்திமான் ஆன்மீக ஈடுபாடு உண்டு ஆன்மிக பெரியவர்கள் ஞானிகள் மகான் போற்றி அவர்கள் வழியை பின்பற்றுவார்கள் தெய்வீக காரியம் ஈடுபடுவார்கள் கோயில் குளங்கள் தீர்த்த யாத்திரை மேற்கொள்வதில் அதிக விருப்பம் கொண்டவர்கள் அடிக்கடி சுற்றுப் பயணம் செல்வார்கள் தன்னுடன் குடும்பத்தினர் நண்பர்கள் உற்றார் உறவினரின் நலனை பேணி காப்பார் விரும்பி நல்ல உதவிகள் செய்வார் சமூகத்தில் நன்மதிப்பு கொண்டவர் கௌரவமாக மற்றும் புகழுடன் வாழ்வார்கள்
(1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-) தானியங்கள் வைத்தால் = 5 % (-) (2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-) (3)மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-) (4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-) (5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-) (6)யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-) (7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-) (8)ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-) (9)தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-) (10)சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-) (11)கர்பஸ்திரிகளுக்கு = 78% (-) (12)ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும் = 70% (-) (13)கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-) (14)அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-) (15)நோயளிகளுக்கு = 93% (-) (16)மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-) (17)திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல். இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும். சரி இனி ஆன்மிக ரீதியாக பார்ப்போம்:- (1)கோயில் மயில்களுக்கு (2)கோயில் காகத்திற்கு (3)கோயில் சேவல்களுக்கு (4)கோயில் யானைகளுக்கு (5)கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு (6)கோயில் பூசாரி (8)விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு (9)கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல் (10)அன்னதானத்திற்கு உதவுதல் (11)கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல் (12)கோயில் விளக்கிற்கு எண்ணெய் கொடுத்தல் (13)கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு (14)இறைவனுக்கு பூ மாலை (15)முன்னோர்கள் வழிபாடு (16)மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி (17)ஏழை மாணவர்கள் படிக்க (18)தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல், மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தையும் உணர்ந்து செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம். இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோப படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ள, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ, பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ, இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்காலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது 6 மடங்கு கர்மாக்களை அனுபவித்தே தீர வேணும் இதற்கு கர்மா கழித்தல் இல்லை. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே. கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை. அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வபோது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்கள் நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின் பற்றி உலகமே ஆனந்தமாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்தலே மேன்மை.
பெயரை கண்டம் என்று பயமுறுத்துகிறது அதிலும் அதிகண்டம் எனவே அடிக்கடி விபத்துக்கள் கண்டங்கள் ஏற்படும் இந்த யோகம் துன்பம் தொல்லை கஷ்டம் அடிக்கடி அனுபவிப்பார் மற்றவருக்கு தொல்லைகளையும் பிரச்சினைகளையும் துன்பங்களையும் இவர்கள் ஏற்படுத்துவார் பிறரை துன்புறுத்தி அதில் மகிழ்ச்சி அடைவார்கள் " யான் பெற்ற துன்பம் பெறுக" இவ்வையகம் என்ற குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் பேராசை முன்போ முன்கோபம் முரட்டுத்தனம் அலட்சியம் போன்ற குணங்கள் இருக்கும் எந்த ஒரு செயலிலும் எண்ணத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை இருக்காது சொல்லப்போனால் ஒரு மேம்போக்காக இருக்கக்கூடிய நபராக இவர்கள் இருப்பார்கள் ஆகவே இந்த யோகம் கொண்டவர்கள் பழகும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் (சுபம்)
இது சுபமான யோகம் இதன் பொருள் இனிமையான சுகம் என்பதே ஆகும் திருமணமாகி முதலிரவுக்கு "சோபனம்" என்று குறிப்பிடுவதுண்டு இதில் பிறந்தவர்கள் சுகமான இனிமையான வாழ்க்கையை விரும்புவார்கள் திருமண உறவில் தாம்பத்தியத்தில் கல்வியாக நிபுணராக காமசுகம் விருப்பம் கொண்டவராக இருப்பார் இவர்கள் குறிக்கோளை வாழ்க்கை வாழ்வதற்கே எண்ணம் கொண்டவன் மகிழ்ச்சியான வாழ்க்கையை விரும்புவார்கள் கஷ்டத்தை வெறுப்பார்கள் சுற்றும் நட்பும் உறவினர்கள் அதிகமாக நேசிப்பார் செல்வாக்கு உடையவர்கள் சொல்வாக்கும் உண்டு காம லீலைகள் தனித்துவம் கொண்டவராக இருப்பார் இவர்கள் அனைவரிடத்திலும் எளிமையாக பழகுவார்கள் நகைச்சுவை பேச்சு உண்டு நல்லவர்கள் (சுபம்)
ஓம் கஜத் வஜாய வித்மஹே!!!!!!! சுக ஹஸ்தாய தீமஹி !!!!தன்னோ புதஹ் ப்ரசோதயாத்!!!!! இந்த மந்திரத்தை குறைந்தது ஐந்து முறை உச்சரிக்க முடிந்தால் 108 முறை உச்சரித்தால் ஜோதிடம் புலமை மற்றும் வாக்கு பலிதம் ஏற்படும்
கவேதாம்ஸ சக்கரத்தில் லக்னத்தில் சுபர்கள் இருந்தால்,அரசு அரசியல் செல்வாக்கும், செல்வந் தரிடமும்,உயர் அதிகாரிகளிடமும் அன்பும் ஆதரவும் கிடைக்கும் அத்துடன் ஞானிகளின் தொடர்பும், சித்தர்கள்,ஜீவ சமாதி ஆராய்ச்சியும் ஏற்படும். பாபர்கள் அமந்தால் வீண் விவாதங் களும், அரச தண்டனையும், அரசு வேலைக்கு பணம் கொடுத்து ஏமாறு வதும், நம்பிக்கை துரோகமும், பதவி ழப்பும் ஏற்படும். கவேதாம்ஸ லக்னத்தில் சுபர்கள் இருந்து சுபரால் பார்க்கப்பட்டால் தன் சுய முயற்சியால் கவுர அந்தஸ்து பெற்று அரசு மரியாதை பெற்று சிறப்பிக்கப்படுவார்கள். குறிப்பு : காவேதாம்ஸ என்பது ஒரு ராசியை நாற்பது பங்காக பிரிப்பது ஆகும்.
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *ராஜயோகம்* ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோணங்களில் புதன், குரு இருந்து புதனை குரு பார்த்தால் ராஜயோகம். இவர்கள் உபய ராசிகளில் இருப்பது மேலும் சிறப்பு. - மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *தனலாபம்/தனமின்மை* ஒரு ஜாதகத்தில் லாபாதிபதி பாக்கியாதிபதி எங்கு இணைந்து இருந்தாலும் அந்த பாவ பலன் உடனே கிடைக்கும். எந்த ஒரு அதிபதிக்கும் 2 ம் அதிபதி சஷ்டாஷ்டகத்தில் இருந்தால் அந்தக் காரக உறவிற்கு பணம் இல்லை. *நன்றி: தங்கப்பாண்டியன் ஐயா* - மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ லக்னதிற்கு 8 ல் சந்திரனும் புதனும் சேர்ந்து நின்றால் அந்த ஜாதகரின் ஆரோக்கியம் கெடும். சொத்துக்களில் பிரச்சினை ஏற்படும். - மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *லக்ன சுபர்* 5 ம் அதிபதி நின்ற வீட்டிற்கு 10 ம் வீட்டில் எந்த கிரகம் நின்றாலும் அந்த ஜாதகருக்கு சுப பலன்களையே செய்யும். - மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *தனலாபம்/தனமின்மை* ஒரு ஜாதகத்தில் லாபாதிபதி பாக்கியாதிபதி எங்கு இணைந்து இருந்தாலும் அந்த பாவ பலன் உடனே கிடைக்கும். எந்த ஒரு அதிபதிக்கும் 2 ம் அதிபதி சஷ்டாஷ்டகத்தில் இருந்தால் அந்தக் காரக உறவிற்கு பணம் இல்லை. *நன்றி: தங்கப்பாண்டியன் ஐயா* - மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *தீர்க்காயுள்* 10 ம் அதிபதி கெடாமல் இருந்தாலும், சூரியன் லக்னத்திலிருந்து 10,11,3,6 ஆகிய இடங்களில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு தீர்க்காயுள். - மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
மேசம்- ஆடோடு மோதேல்- மேஷ ராசிக்காரர்களுடன் மோதலில் ஈடுபடாதீர் ரிஷபம்-மாடோடு எதிரிடேல் -ரிஷபராசிக்காரர்களுடன் எதிர் நின்று சண்டை போடாதீர்கள் மிதுனம்-ரெட்டையன் வார்த்தை வெட்டிக்காடு வரை - மிதுன ராசிக்காரர்கள் வார்த்தை சுடுகாடுவரை கொண்டு செல்லும் கடகம்-நண்டானுக்கு இடங்கொடேல் - கடகராசிக்காரர்களுக்கு இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்கி விடுவார்கள். சிம்மம்-சிம்மத்தாருடம் சினம் கொள்ளாதே -சிம்ம ராசிக்காரர்களிடம் உன் கோபத்தை செலுத்தாதே கன்னி மகனை கைவிடேல் - கன்னி ராசிக்காரர்களை கைவிட்டு விடாதே. துலாம் -கோலோன் ஓயான்- துலாராசிக்காரன் தனக்குரிய பங்கு கிடைக்கும்வரை ஓயமாட்டான் விருச்சிகம்-தேளோன் தோள்கொடுப்பான்- விருச்சிக ராசிக்காரர்கள் நண்பர்களுக்கு தோள் கொடுப்பவர்கள் தனுசு-வில்லோன் வல்லோன்- தனுசு ராசிக்காரர்கள் வல்லவர்கள் அவர்களை சொல்லால் மட்டுமே வளைக்க முடியும். மகரத்தார் நகரத்தை ஆள்வார்- மகர ராசிக்காரர்கள் நகரத்தை ஆளுமை செய்பவர்கள். கும்பத்தான் குறைகளைவான் -கும்ப ராசிக்காரர்கள் குறைகளை களைபவர்கள். மீனோன் மேனோன்- மீன ராசிக்காரர்கள் மேன்மையான குணங்களை உடையவர்கள்.
*காலசர்ப்ப தோஷம்* *என்றால் என்ன?தோஷம் மற்றும் பரிகாரம்* *காலம் எங்கே வந்தது? அதில் சர்ப்பம் எங்கே வந்தது?* *போன்ற உபரிக்* *கேள்விகள் கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்* *முற்பிறவியில் அதிக புண்ணியம்* *செய்திருந்தால்,* *இந்த பிறவியில் நற்செல்வம்* *அதிகாரம் புகழ்,* *அந்தஸ்து,* *நற்புத்திரர்,வீடு,* *வாகன வசதிகள் அமையும்* முற்பிறவியில் அதிகபாவம் செய்திருந்தால் இப்பிறவியில் போராட்டம், சரியான தருணத்தில் உதவி கிடைக்காமை, ஏழ்மை, வறுமை என வாழ்க்கை உழலும். யாராக இருந்தாலும் பாவமே செய்யாமலிருக்க முடியாது. அதில் விலங்குகள், பறவைகள் இவற்றைத் துன்புறுத்தியிருந்தாலோ, கொன்றிருந்தாலோ அது மிகப்பெரியபாவமாகும். அதிலும், நாகங்களைக் கொன்றிருந்தால் அதுவே கொடும்பாவமாகக் கருதப்படுகிறது. இது பற்றி கருடபுராணம், விதுரநீதி, அர்த்தசாஸ்திரம், சுக்கிரநீதி போன்ற புராணகால தர்மநூல்கள் நிறைய விளக்கம் கொடுத்துள்ளன. சிவனின் கழுத்தை அலங்கரிக்கும் பாம்பு/நாகம் விடும் சாபம் நமது ஏழு தலைமுறைக்கும், நமது அடுத்தடுத்த பிறவிக்கும் பெரும்பாதிப்பை தரும். அனுபவத்தில் தாத்தா,மகன்,பேரன், கொள்ளுப்பேரன் என வாழையடி வாழையாக காலசர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஜாதகங்களை நிறைய்ய பார்த்துவருகிறோம். இப்படிப்பட்ட தோஷங்கள் எப்படி ஏற்படுகின்றன? இரண்டு பாம்புகள் உறவில் இணைந்திருக்கும் போது - காதல் வயப்பட்டிருக்கும் பொழுது அவற்றைக் கொன்றால் அது மிகக் கொடூரமான குற்றமாகும். பாம்பை அடித்துக் கொல்ல முயலும் பொழுது அவை மனிதனான தங்களை ஒன்றும் செய்ய மாட்டோம், எங்களை உறவில் இணைந்திருக்க விட்டு விடுங்கள் என்பதைப் போல தங்களது வாலால் தரையில் அடித்துச் உறுதி செய்யும். அப்படி உறுதி தந்த பின்னும் அவற்றில் இரண்டையோ அல்லது ஒன்றையோ அடித்துக் கொன்றால் அது அந்த கொல்லும் மனிதனை பழித்துவிட்டு உயிர் விடும். இந்தகைய பழிப்பு என்பது, பாம்பு மட்டும் விடுவதில்லை. பிற உயிர் இனங்கள் உறவில் இணைந்திருக்கும் பொழுது கல்லால் அடிப்பது, கம்பால் அடிப்பது போன்ற செய்கையில் ஈடுபடுபவர்கள் அனைவருமே இத்தகைய பழிப்புக்கு உள்ளாகின்றனர். இத்தகைய கீழ்தரமான குற்றம் செய்தவர்கள் மறுபிறவி மனிதனாகவே மீண்டும் எடுத்தால் அவர்களின் லக்னத்தில் ராகு அல்லது கேது தனித்திருக்கப் பிறக்கின்றனர். அதாவது ராகு என்கிற காலனுக்கும் கேது என்கிற பாம்பிற்கும் இடையில், இராசி கட்டத்தில் பிற 7 கோள்களும் சிக்கிக்கொள்ளும். கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இருபாம்புக்களுக்கு இடையே மற்ற ஏழு கோள்களும் அடைபட்டு இருப்பதாகும். கால சர்ப்ப தோஷம் ஏற்படுவதால் விளைவு? கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்களின் ஜாதக கட்டத்தில் பிற ஏழு கோள்களும் ராகு கேது என்கிற பாம்புகளுக்கிடையில் சிக்கிக் கொள்வதால், அந்த கோள்களால் கிடைக்கும் நன்மை அனைத்தும் நச்சு கொண்டு வீனாகும். இத்தகைய தோஷம் உடையவர்கள் திருமண தடையால் வயது மூப்படைந்து வாழ்வை வீனடிப்பர். 5 ல் ராகு ஜாதகம் உடையவர்கள் 5 ல் ராகு இருந்தால் அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்காது. ஆண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும். அந்த ஆண் குழந்தைகள் நோய் நொடி தாக்குதலினால் அல்லல் படுவார்கள். *5ல் கேது ஜாதகம் உடையவர்கள்* ஆண் பெண் என இரு பாலிலும் குழந்தைகள் பிறக்கும். ஆனால் எல்லாம் நோஞ்சானாக இருக்கும். மேலும் அந்த குழந்தைகள் பெற்றோரை வெறுக்கும். *கால சர்ப்ப தோஷம் பன்னிரெண்டு வகைப்படும்.* இது ஜாதகத்தில் ராகு மற்றும் கேது அமைந்திருக்கும் வீடுகளை பொருத்து அமைகிறது. *1.அனந்த கால சர்ப்ப தோஷம்.* ராகு முதல் வீட்டிலும், கேது ஏழாம் வீட்டிலும் இருக்க மற்ற கோள்கள் இவர்களுக்கிடையே அமைவதே அனந்த கால சர்ப்ப தோஷம். விபரீத கால சர்ப்ப தோஷம் எனவும் அழைக்கப்படுகிறது. இத்தகைய ஜாதக அமைப்பு உடையவர்கள் பல இடையூறு, வாழ்வில் தொல்லைகள், துன்பங்களை அனுபவித்த பிறகு, தங்கள் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னுக்கு வருவர். எனினும் திருமணம் நடந்தேருவதில் சில இடையூறுகள் உண்டாகும். *2. சங்க சூட சர்ப்ப தோஷம்* ராகு 9-ம் வீட்டிலும், கேது 3-ம் வீட்டிலும் இருக்கும் ஜாதக அமைப்புடையோர் பொய் பேசுபவர்களாக வாழ்வார்கள். முன் கோபம் கொண்டவர்களாக இருப்பதால், வாழ்வில் பல துன்பங்களை அனுபவிப்பர். வாழ்க்கை முழுதும் ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக இருக்கும். *3. கடக சர்ப்ப தோஷம்* ராகு 10-ல் இருக்க, கேது 4-ல் இருந்தால் சட்ட சிக்கல்கள் வரும். அரசால் தண்டிக்கப் படுவார்கள். 10-ல் இருக்கும் ராகு இருட்டு தொடர்பான தொழிலைக் கொடுக்கும். புகைப்படம், எக்ஸ்ரே போன்ற தொழில் கிடைக்கும். ராகுவுக்கு இடம் கொடுத்த ராசி இறைவன் கெட்டால், சட்டத்திற்குப் புறம்பான வேலைகளைச் செய்யத் தூண்டுவார். அரசிற்கு எதிரானவர்களாக வாழ்வில் மன அமைதி இன்றி வாழ்வர். *4. குளிகை சர்ப்ப தோஷம்* ராகு 2-ம் வீட்டிலும் கேது 8-ம் வீட்டிலும் இருந்தால் உடல் நலம் வாழ் நாள் முழுதும் பாதிப்படைந்து இருக்கும். இழப்புகள், விபத்துகள் ஆகியவற்றில் சிக்கி மன அமைதி இளப்பர். பொருளாதார பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். ராகுவுக்கு இடம் கொடுத்த ராசி இறைவன் பலம் பெற்றிருந்தால் வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும். *5. வாசுகி சர்ப்ப தோஷம்* ராகு 3-ம் வீட்டிலும் கேது 9-ம் வீட்டிலும் இருந்தால் இந்தத் தோஷம் ஏற்படும். தொழிலில் பிரச்னை ஏற்படும். வயதில் இளையவர்களால் என்றும் தொல்லையும் துன்பமும் வரும். *6. சங்கல்ப சர்ப்ப தோஷம்* ராகு 4-ல் கேது 10-ல் இருந்தால் வேலை வாய்ப்புகள் இருக்காது. வேலை கிடைத்து பனியில் இருந்தாலும் அது நிலைக்காது. தொழில் செய்ய முயன்றால் அதில் நொடிப்பு தான் ஏற்படும். *7. பத்ம சர்ப்ப தோஷம்* ராகு 5-ம் வீடு, கேது 11-ம் வீட்டில் இருந்தால் குழந்தைகள் செல்வம் இருக்காது. அறிவியல் முறைகளில் முயன்றாலும் பிறப்பதில் சிக்கல்கள் ஏற்படும். நிலவும் கெட்டால் பேய் பிசாசு மற்றும் ஆவிகளின் தொலை ஏற்படும். நண்பர்களால் ஏமாற்றம் ஏற்படும். நோய் நொடிகளால் வாழ்வு முழுதும் துன்புருவர். *8. மகா பத்ம சர்ப்ப தோஷம்* ராகு 6-ல் கேது 12-ல் இருந்தால் நோய் நொடிகளால் வாழ்வு முழுதும் துன்புருவர்.. வாழ்வு இடையூறுகள் நிறைந்ததாக இருக்கும். 6-ம் இடத்து கோளை பொறுத்து நோய் நீங்குவதும், எதிரிகளை வெற்றி கொள்ளுதலும் நடக்கும். *9. தக்ஷக சர்ப்ப தோஷம்* கேது லக்னத்தில் ராகு 7-ல் இருந்தால் முன் சிந்தனை அற்றவர்களாக இருப்பர். கிடைக்கும் செல்வம் முழுவதையும், மது, மாது ஆகியவற்றில் இழப்பார். திருமண வாழ்வில் சிக்கல்களால் மன அமைதி இன்றி வாழ்வர். *10. கார் கோடக சர்ப்ப தோஷம்* ராகு 8-ல், கேது 2-ல் இருந்தால் கார் கோடக சர்ப்ப தோஷத்தை உண்டாக்கும். அதாவது தந்தை வழி சொத்துக்கள் கிடைக்காது. உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவரும் பகையாளியாக இருப்பர். *11. விஷ் தார சர்ப்ப தோஷம்* ராகு 11-ல் கேது 5-ல் இருந்தால் குழந்கைளால் துன்பம் உண்டாகும். குடும்பத்துடன் வாழமால் அடிக்கடி பயணம் செய்வார். வாழ்க்கையின் பிற்பகுதி, அதாவது 50 வயதை தாண்டியபின் வாழ்வு நன்றாக இருக்கும். *12. சேஷ நாக சர்ப்ப தோஷம்* *ராகு 12-ல், கேது 6-ல்* இருந்தால் உடல் நோய் நொடிகளால் அல்லல் படும். *வழக்குகளில் சிக்கல் உண்டாகும்.* எதிரிகள் தொல்லை இருக்கும். *ஒரு ஜாதகத்தில் ராகு & கேது இருக்கும்* இடங்களுக்குள் உள்ள ஏழு ராசிகளுக்குள் மற்ற ஏழு கிரகங்களும் இருந்து மீதி ஐந்து ராசிகள் காலியாக இருக்கும் நிலைதான் கால சர்ப்ப தோஷம் ஆகும்! *இதில் லக்கினம் உள்ளே இருந்தாலும் அல்லது அந்த ஏழு கட்டங்களைத்* தாண்டி வெளியே இருந்தாலும் அது அந்த தோஷத்தில் அடக்கம்! *ராகுவில் ஆரம்பித்துக் கேதுவில் முடியும்* நிலைக்கு சவ்ய காலசர்ப்ப தோஷம் என்றும், கேதுவில் ஆரம்பித்து ராகுவில் முடியும் நிலைக்கு அபசவ்ய காலசர்ப்ப தோஷம் என்றும் பெயர்கள் உண்டு. பலன்களும் மாறுபடும். *சாயா கிரகங்களான* ராகுவைத் தலைப் பகுதியாகவும், கேதுவை வால் பகுதியாகவும் ஜோதிடம் சிறப்பித்துக் கூறுகிறது. *அந்த அமைப்புள்ள ஜாதகர்களின்* வாழ்க்கையின் ஒரு பகுதி - அந்த தோசத்திற்கு உரிய பலன்களை அவர்கள் அனுபவிக்கும் காலம் துன்பமானதாகும். சோகமானதாகும். *அனுபவித்தவர்களுக்கு, அல்லது அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு* *மட்டுமே அது தெரியும்*. *லக்கினத்தில் துவங்கி முதல் ஏழு* வீடுகளுக்குள் இந்த தோஷம் உள்ளவர் களுக்கு அவர்கள் வாழ்க்கையின் முதல் பகுதியும், ஏழாம் வீட்டில் துவங்கி லக்கினத்தில் முடிபர்வகளுக்கு அவர்கள் வாழ்க்கையின் இரண்டாவது பகுதியும் மோசமானதாக இருக்கும். *இந்த மோசமான என்ற சொல்லுக்குள்* எல்லாவிதத் துன்பங்களும் அடக்கம்! *இந்த தோஷம் உள்ளவனின் ஜாதகத்தில்*, வேறு நல்ல யோகங்கள் எதுவும் இல்லை என்றால், அவன் வேலையின்றித்திரிவான், திருமணவாழ்க்கை இருக்காது *பல தீய பழக்கங்களுக்கு ஆளாகி*, பலராலும் ஒதுக்கப்படும் நிலையில் வாழ்வான். *ஆகவே இந்த தோஷம் உள்ளவர்கள்,* பயந்துவிடாமல், ஜாதகத்தில் வேறு என்னென்ன யோகம் இருக்கிறது என்று பார்த்து ஆறுதல் கொள்ளவும். *இறைவன் கருணை மிக்கவன்*. தன் மீது நம்பிக்கையும், பற்றும் கொண்ட வனை அவர் ஒரு போதும் கை விடுவதில்லை! *அதை மனதில் கொள்க!* *சரி, இந்தத் தோஷம்* எத்தனை ஆண்டுகளுக்கு? *இதில் இரண்டுவிதக் கருத்துக்கள் உண்டு. 33* ஆண்டுகள் வரை இந்தத் தோஷம் உண்டு என்பார்கள். *சிலர் அஷ்டகவர்க்கத்தில்* லக்கினத்தில் எத்தனை பரல்கள் இருக்கிறதோ அத்தனை ஆண்டுகள்வரை உண்டு என்பார்கள். *உதாரணத்திற்கு* ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்தில் 28 பரல் கள் என்றால், அவருக்கு 28 ஆண்டுகள் வரை இந்தத் தோஷம். உண்டு. *பிறகு தோஷம்* விலகியவுடன் அதுவே யோகமாக மாறி ஜாதகரை உயர் விற்குக் கொண்டு போகும்.* *இந்தியாவின் ஜாதகத்தில் லக்கினத்தில் 44 பரல்கள்.* *நாம் சுதந்திரம்* *அடைந்த 1947ஆம்* *ஆண்டு கூட்டல்* *அந்த 44 = 1991ஆம் ஆண்டுவரை* *நம் நாட்டை தோஷம் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது.* *அதற்குப் பிறகு* *தான் நாம் அசுர வேகத்தில் பல* *துறைகளிலும் முன்னேறிக்* *கொண்டிருக்* *கின்றோம்.* *இந்த அஷ்டகவர்க்கக் கணக்கு பலருக்கும் சரியாக* *இருந்திருக்கிறது. நீங்களும் அதையே பின்பற்றலாம்!* *பொதுப் பலன்கள்* *1இந்த தோஷம்* லக்கினத்திலிருந்து (அதாவது லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு) துவங்கினால், குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கும்.ஏற்படும். தீராத பிணிகள் (chronic health problems) ஏற்படும்! *2இந்த தோஷம்* இரண்டாம் வீட்டிலிருந்து (அதாவது லக்கினத்திற்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு) துவங்கினால், குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கும்.ஏற்படும். அதோடு பணப் பிரச்சினைகள் ஏற்படும்! *3இந்த தோஷம்* மூன்றாம் வீட்டிலிருந்து துவங்கினால், உடன்பிறப்புக்களுடன் சிக்கல்கள் இருக்கும்.விரோத மனப்பான்மை ஏற்படுத்தும். *4இந்த தோஷம்* நான்காம் வீட்டிலிருந்து துவங்கினால், தாயாருடன் கருத்து வேற்றுமையை உண்டாக்கும். தாயாரின் அன்பு கிடைக்காமல் போய்விடும். வீடு, வாகனங்களை வைத்துப் பலவிதமான பிரச்சினைகள் உண்டாகும். *5இந்த தோஷம் ஐந்தாம்* வீட்டிலிருந்து துவங்கினால், பெற்ற குழந்தைகளை வைத்துப் பிரச்சினைகள் ஏற்படும். *6.இந்த தோஷம் ஆறாம்* வீட்டிலிருந்து துவங்கினால், நோய்கள், கடன்கள் விரோதிகள் என்று பிரச்சினைகள் வந்து குடி கொண்டுவிடும் *7.இந்த தோஷம் ஏழாம்* வீட்டிலிருந்து துவங்கினால், செய்யும் தொழிலில், வியாபாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்காது. பதிலுக்குப் பிரச்சினைகள் மட்டும் இருக்கும். *8.இந்த தோஷம் எட்டாம்* வீட்டிலிருந்து துவங்கினால், மனைவியுடன் சரளமான வாழ்க்கை இருக்காது. சிக்கல்கள் இருக்கும்.அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுப் பல பிரச்சினைகள் உண்டாகும். *9இந்த தோஷம்* ஒன்பதாம் வீட்டிலிருந்து துவங்கினால், தந்தையுடன் பிரச்சினைகள் ஏற்படும். மிகவும் துரதிர்ஷ்டமான பலன்கள் ஏற்படும் (இது பாக்கிய ஸ்தானமல்லவா? அதனால் துரதிர்ஷ்டம் ஏற்பட்டால் என்ன பாக்கியம் கிடைக்கும்?) *10.இந்த தோஷம்* பத்தாம் வீட்டில் துவங்கினால், செய்யும் தொழிலில், வியாபாரத்தில் அல்லது வேலையில் நிலையான போக்கு இருக்காது. அவஸ்தையாக இருக்கும்.நிம்மதி இருக்காது. *11.இந்த தோஷம்* பதினொன்றில் துவங்கினால், நிதி நிர்வாகம், முதலீடுகள் பங்கு வணிகம் என்று எந்த நிதி நிலைப்பாட்டிலும் நாம் நினைத்தது நடக்காது. மாறாக நடந்து நம்மைப் புரட்டிப்போடும். *12இந்த தோஷம்* பன்னிரெண்டாம் வீட்டில் இருந்து துவங்கினால், திகைக்க வைக்கும் செலவுகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். பணத் தட்டுப்பாடு உண்டாகும். மொத்தத்தில் செலவும், விரையங்களும் சேர்ந்து மனிதனை (ஜாதகனை) ஒரு வழி பண்ணிவிடும்! *சில விவரங்கள்:* *1கால சர்ப்ப தோஷ* ஜாதகனுக்கு, அவனுடைய ஜாதகத்தில் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும், அந்த தோஷம் முடியும் காலம்வரை அந்த உச்ச கிரகங்களின் பலனை அவன் அடைய முடியாது. *2லக்கினத்தில் ராகு* இருக்க, வேறு நல்ல கிரகங்களின் பார்வையின்றி லக்கினத்திலிருந்து (அதாவது அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு) கால சர்ப்ப தோஷம் துவங்கினால், ஜாதகருக்குத் திருமண வாழ்வில் கடுமையான ஏமாற்றங்களும், சோதனைகளும் உண்டாகும். *3நான்காம் வீடு அசுபர்* வீடாக இருந்து, அங்கிருந்து இந்த தோஷம் துவங்கினால், ஜாதகருக்குக் கல்வியில் தடை ஏற்படும். அதுவே சுபர் வீடாக இருந்தால் உயர் கல்வி கிடைக்கும். *4.ஐந்தாம் வீட்டை* வைத்து இந்த தோஷம் துவங்கினால், ஜாதகருக்கு புத்திர தோஷம் ஏற்படும். குழந்தைகள் பிறப்பது தாமதப்படும். அல்லது வேறு தீய அமைப்புக்களை வைத்துக் குழந்தைகள் இல்லாது போய்விடும். *5.ஆறாம் வீட்டை* வைத்து இந்த தோஷம் துவங்கினால், அங்கே ராகு இருந்து நல்ல கிரகங்கலின் பார்வை இல்லையென்றால், சிறைவாசம், உடல்நிலை பாதிப்பு போன்றவைகள் உண்டாகும். *6.ராகு அல்லது கேது* தாங்கள் இருக்கும் வீட்டில் அமரும் கிரகத்துடன் கூட்டணி போட்டுப் பலன்களைக் கொடுப்பார்கள். அதனால் அவர்களுடன் சேரும் கிரகம் தீயதாக இருந்தால் தீயபலன்கள் இரட்டிப்பாகும். நல்ல கிரகமாக இருந்தால் - உதாரணத்திற்குக் குருவாக இருந்தால் ராகுவும் அவருடன் சேர்ந்து நல்ல பலன்களை வழங்க ஆரம்பித்து விடுவார். அதற்கு ஒரு ஸ்டைலான பெயரும் உண்டு. அதாவது ராகுவும் குருவும் சேர்ந்தால் அதற்குச் "சண்டாளயோகம்" என்று பெயர்! *7.ராகு-சனி' அல்லது* ராகு - செவ்வாய்' அல்லது ராகு - சூரியன் என்று இரண்டு கிரகக் கூட்டணி ஏழாம் வீட்டில் இருந்தால் கடுமையான களத்திர தோஷம். எத்தனை தாரம் என்றாலும் ஒன்று கூட நிலைப்பதில்லை! *8.கால சார்ப்ப தோஷம்* cum யோகம், ஒரு ஏழையைக் கோடீஸ்வரனாகவும் செய்யும், அதெ போல பெரிய கோடீஸ்வரனை ஒன்றும் இல்லாதவனாக தெருவில் கொண்டு வந்து நிறுத்தவும் செய்யும். அது அவரவர்கள் ஜாதகப் பலன். அல்லது எல்லோரும் சொல்வதை போல வாங்கி வந்த வரம்! அந்த ராகு கேதுவின் ஏழு கட்ட பிடிப்பிற்குள் லக்கினம் மாட்டாமல் வெளியே இருந்தாலும் அல்லது லக்கினம் மாட்டிக் கொண்டு சந்திர ராசி (சந்திரன்) மாட்டாமல் வெளியே இருந்தாலும் தோஷம் உண்டு. ஆனால் 80% சதவிகிதப் பலன்கள் மட்டுமே இருக்கும். அதாவது ஏற்படும் துன்பங்களில் 20% கன்செஷன் உண்டு. சிலர் கால சர்ப்ப தோஷம் இல்லாவிட்டாலும், இருப்பதைப் போன்ற அளவிற்குத் துன்பப்படுவார்கள். அதற்குக் காரணம், அந்த ஏழுகட்ட அமைப்பு இல்லாவிடினும், அவர்களுடைய ஜாதகத்தில் முக்கியமான கிரகங்கள் எல்லாம், ராகு அல்லது கேதுவின் நட்சத்திர சாரத்தில் (திருவாதிரை, சுவாதி, சதயம் - அஸ்வினி, மகம், மூலம் )இருக்கும். *அதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும்.* *கால சர்ப்ப தோஷம்* உள்ள சிலருக்கு, அந்த தோஷ காலம் முடிந்த பிறகே திருமணம் நடைபெறும். அதுபோல கால சர்ப்ப தோஷத்துடன் பிறக்கும் குழந்தைகள் உள்ள பெற்றோர்களும், கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் என்று இந்த தோஷத்தில் பிடிபட்ட பலரும் சிறுவயதில் பல தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அந்த தோஷம் நிவர்த்தியான பிறகு உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே தங்கள் சொந்த முயற்சியால்தான் அந்த நிலையை எட்டியிருப்பார்கள். இந்த தோஷத்தில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டு மீண்டு, பிறகு ஒரு உன்னத நிலையை எட்டி, பிறகு சிறிது காலத்திற்குப் பிறகு, படு பாதாளத்தில் விழுந்து விடும் நிலையும் சிலருக்கு ஏற்படுவது உண்டு. அது அவர்களின் தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள வில்லங்கமான கிரக அமைப்புக்களால் ஏற்படுவதாகும். *கால சர்ப்ப தோஷம்* உள்ளவர்களுக்கு, ராகு அல்லது கேதுவின் திசைகள் வந்தால், நற்பலன்கள் உண்டாகும். அதே நேரத்தில் அந்த திசை முடியும் போது போர்டிங் பாஸ் கொடுத்து அவர்கள் ஜாதகனை மேலே அனுப்பியும் வைத்து விடுவார்கள். ஆனால் அவ்வாறு வரும் திசைகளில் துன்பமான பலன்களையே ஒருவர் அனுபவித்தால், அவரை அவர்கள் உயிரோடு விட்டு விட்டு அடுத்து வரும் திசைகளில் நற்பலன்களை அனுபவி என்று சொல்லிக் கைகுலுக்கி விட்டுப் போய்விடுவார்கள். *கால சர்ப்ப தோஷம்* உள்ள ஆண், அதேபோல கால சர்ப்ப தோஷம் உள்ள பெண்ணை மணம் செய்து கொள்வது நல்லது.பல பிரச்சினைகளை இருவரும் தவிர்க்கலாம். *கால சர்ப்ப தோஷத்திற்கான பரிகாரங்கள்:* *ராகுவின் நட்சத்திரங்களான* திருவாதிரை, சுவாதி, சதயம், போன்ற நட்சத்திரங்கள், வரும் நாட்களில் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகஸ்வரம் என்னும் ராகு பகவான் குடிகொண்டிருக்கும் திருக்கோவிலுக்குச் சென்று ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டு வருவது முதல் பரிகாரம் ஆகும். அதனால் தடைகள் அகலும். துன்பங்கள் குறையும். *கேதுவை வழிபடக்* காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி திருக்கோவி லுக்குச் சென்று வழிபட வேண்டும். அன்று அவருடைய (கேதுவினுடைய) நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஒன்றாக இருந்தால் நல்லது. திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காளஹஸ்தி என்கின்ற திருத்தலமும், இதற்கு உகந்ததாகும். அதுபோல ராமேஸ்வரமும் தோஷ பரிகாரத்திற்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும். *கால சர்ப்ப தோஷம்* பாதிப்புகளில் இருந்து விடுபட சர்ப்ப தோஷம் உடையவர்கள், குல கடவுள் வழிபாடுகளை மேற்கொள்வது பாதிப்பில் இருந்து விடுபட வழி வகுக்கும். *குறிஞ்சியின் இறைவனும்,* தமிழர்களின் குல கடவுளுமான முருகனின் 6 படை வீடுகளுக்கும் சென்று தமிழ் முறைப்படி வழிபாடுகள் செய்து வழிபட்டால் பாதிப்புகளில் இருந்து முற்றிலும் விடுபடலாம். *முருகனை வணங்கும் பொழுது தமிழ் தவிர்த்த பிற மொழிகளை* *காதில் வாங்காமல் வணங்கினால் சிறப்பிலும் சிறப்பாக அமையும்*
1. ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீபீணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே காணலாம். 2. ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அதிகார நந்தி வாகனம், விக்கிரகம், உற்சவர் ஆகிய மூன்று சிறப்புகளையும் பெற்று இருப்பது வேறு கோவில்களில் இல்லாத சிறப்பு. அதிலும் இந்த நந்தி வாகனம் முழுவதும் பொன்னாலானது. 3. பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டின் பொழுது நந்தி தேவர், சுவாமிக்குப் புறங்காட்டாமல் சுவாமிக்குப் பின்புறமாக சுவாமியை முன்னோக்கியவாறு செல்வது இங்கு மரபு. 4. கோவிலின் முதல் பிரகாரத்தில் 144 விக்கிரகங்களும் இரண்டாம் பிரகாரத்தில் 17 விக்கிரகங்களும் பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கோவிலில் உள்ள 381 விக்கிரகங்களுக்கும் நாள் தோறும் பூஜை நடத்தப்படுகிறது. 5. வெள்ளிக்கிழமை இரவு மலைவளர்க் காதலி அம்மன் கொலு முடிந்து தங்கப் பல்லக்கில் மூன்றாம் பிரகாரத்தில் பவனி வரும் பொழுது மேல் கோபுர வாசலுக்கு அருகில் உள்ள மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் சிலைக்கு பரிவட்டம் சூட்டும் முறை இன்றும் இருந்து வருகிறது. 6. தாய்லாந்து மன்னர் முடி சூட்டும் பொழுது கங்கை நீரினால் நீராட்டும் சடங்கு ஒன்று அங்கே உள்ளது. இதனைச் செய்பவர்கள் உச்சிக்குடும்பி வைத்துள்ள ஆத்திக மக்கள். இவர்களது முன்னோர்கள் ராமேசுவரத்தில் இருந்து சென்று தாய்லாந்தில் நிலைத்தவர்கள். 7. பாரத நாட்டின் மிகுந்த புனிதத் தலங்களாக நான்கு தலங்கள் மட்டும் கருதப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ராம்நாத் என்ற ராமேசுவரம் எஞ்சிய மூன்று தலங்களும் வட நாட்டில் அமைந்து இருப்பன. இவை துவாரகநாத், பத்ரிநாத், கேதாரிநாத் என்ற வைணவத் தலங்கள். 8. ராமேசுவரம் கோவிலுக்கு திருப்பணிகள் செய்து சேதுபதி மன்னர்களை கவுரவிக்கும் வகையில் சேதுபதி ஈஸ்வரர் என்ற பெயரில் சிறு கோவில் ஒன்று ராமேசுவரம் கோவிலில் உள்ளது. அணுக்க மண்டபத்திற்கு வடமேற்கு மூலையில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. 9. ராமேசுவரம் கோவிலின் வழிபாடுகள், விழாக்கள், ஆகியவற்றைக் காலமெல்லாம் சிறப்பாக நடைபெற சேதுபதி மன்னர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 10. விழாக்காலங்களில் இரவு நேரங்களில் கோவிலினை அடுத்த பரந்த வெளிகளில் ராமாயணக் கதையை எளிதாக மக்களுக்கு உணர்த்தும் வகையில் எளிய இனிய ஒயில் ஆட்டக்காரர்களின் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் முன்பு நடைபெற்று வந்தன. இப்போது அந்த வழக்கம் இல்லை. 11. ராமேசுவரம் கோவிலின் மண்டபங்கள், சன்னநிதிகள் முதலியவை பாண்டிய நாட்டு முறையில் காணப்படுகின்றன. 40 அடிகள் நீளமுள்ள பெருங்கற்களினால் செய்யப்பட்ட உத்திரங்கள் முதலியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. 12.செதுக்கி மெருகிடப்பட்ட ஒருவகைக் கருப்புக் கல்லால் கருவறை கட்டப்பட்டுள்ளது. 13. இக்கோவிலுள்ள நந்தி வேலைபாடுமிக்க சுதையினாலான பெரிய உருவமுடையதாகும். இந்நந்தி 23 அடி நீளம், 12 அடி அகலம், 17 அடி உயரம் உடையதாக விளங்குகின்றது. 14.மூன்றாம் பிரகாரத்திலிருக்கும் ராமலிங்கப் பிரதிஷ்டை உருவங்கள் தத்ரூபமாக காட்சியளிக்கின்றன. அவ்வுருவங்கள் உயிருள்ளவை போன்றே விளங்குகின்றன. 15.அனுப்புமண்டபம், சுக்கிர வார மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை விசாலமாகவும் காற்றோட்டம் மிக்கவையாகவும் அமைக்கப்பட்டுள்ளமை தனிச்சிறப்புடையது. 16.கோவிலில் உள்ள உலோகத்தினால் செய்யப் பட்ட குதிரைச்சொக்கர் உருவம் மிகவும் கம்பீரமாக கலைத்திறன் மிக்கதாக காணப்படுகிறது. 17.ராமநாதர் கோவிலிலிருந்து 1903,1905,1915 -ம் ஆண்டுகளில் அரசாங்கத்தார் பல கல்வெட்டுக்களை படியெடுத்து பதிவு செய்துள்ளனர். 18.அம்பிகை சன்னதியில் உள்ள தூண் ஒன்றின்மீது ``இரணிய கர்ப்பயாஜிவிஜயரகுநாத சேதுபதி கட்டத்தேவர்'' என்ற பொறிக்கப்பட்டுள்ளது. 19.முதல் பிரகாரத்திலிருந்து வெளிவரும் வாயிலில் உள்ள கதவுக்கு மேல்புறமுள்ள ஒருகல்வெட்டில் சைவ ஆகமங்களில் வல்லவரான ராமநாதர் என்ற பெருந்துறவி அழிந்து போன பிரகாரத்தை கட்டினார் என்ற கூறப்படுகின்றது. 20.பள்ளியறையில் உள்ள வெள்ளி ஊஞ்சலின் முன்பக்கம் விஜயரகு நாத சேதுபதிகட்டதேவரால் அளிக்கப்பட்டது என்றும் வெள்ளியின் நிறையும் மதிப்பும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. 21.முதற்பிரகாரத்தின் வடசுவரில் உள்ள கல்வெட்டில் சகம்1545 (கி.பி.1623) ஆம் ஆண்டில் நடமாளிகை மண்டபம்,அர்த்த மண்டபம் இவற்றை உடையான் சேதுபதி கட்டத்தேவர் மகன் கூத்தன் சேதுபதிகட்டத்தேவர் கட்டியதாக கூறப்பட்டுள்ளது. 22. அம்பிகை சந்நிதியிலுள்ள கொடிமரத்தில் கோபதிப்பர் சகம் 1390 (கி.பி.1468) ஆம் ஆண்டில் அதை நிலைநிறுத்தியதாகக் கூறும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. 23.ராமநாதர் கருவறை நுழைவாயிலில்உள்ள கன்னடக் கல்வெட்டு ஒன்று ராமநாதருக்கு கவசம் அளிக்கப்பட்டதை கூறுகின்றது. 24.தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற முப்பெரும் சிறப்புக்களை உடையது ராமேஸ்வரம். 25. ராமேஸ்வரம் கோவிலின் கருவறையில் ராமநாத சுவாமிக்கும் ஏனைய இறைமேனிகளுக்கும் பூஜை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகிய தெய்வ கைங்கரியங்களில் பல நூற்றாண்டுகளாக ஈடுபட்டு இருப்பவர்கள் மராட்டிய பிராமணர்கள் ஆவர். இது தமிழக திருக்கோவில்களில் வழிபாட்டு நடை முறைகளுக்கு வேறுபட்ட ஒன்று ஆகும். 26. ராமேசுவரத்தில் பூஜை செய்யும் மராட்டிய பிராமணர்கள் மொத்தம் 512 பேர் என்பதும் அவர்கள் கி.பி. 14-ம் நூற்றாண்டு முதல் ராமேஸ்வரத்தில் இருந்து வருவதும் தெரிய வருகிறது. இவர்களைப் பண்டாக்கள் என்று மக்கள் குறிப்பிடுகின்றனர். 27.ராமேஸ்வரம் ராமநாதர் கோவில் ராமபிரானால் எழுப்பப்பட்ட பெருமையுடையது. 28. காசி யாத்திரை சென்றவர்கள், ராமேஸ்வரத்திற்கு சென்று தனுஷ்கோடியில் தீர்த்தமாடி ராமேஸ்வர லிங்கத்தை வழிபட்டால் தான் அக்காசியாத்திரை முழுமை பெறும் என்பது இந்து சமயத்தவரின் கொள்கை- நம்பிக்கை. 29. இத்தலத்து கோவிலில் எழுந்தருளியுள்ள ராமநாதப் பெருமானுக்கு நாள்தோறும் கங்கையிலிருந்து கொண்டுவரப்படும் தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படுவது தனிச்சிறப்புடையது. 30. பாடல் பெற்ற சிவதலங்களுள் இத்தலமும் ஒன்று. இத்தலத்தை திருஞான சம்பந்த சுவாமிகள் இரண்டு திருப்பதிகங்களாலும், திருநாவுக்கரசு சுவாமிகள் ஒரு திருப்பதிகத்தாலும் போற்றிப்பாடியுள்ளனர். 31. இத்தலத்திற்கு தமிழிலும், வடமொழியிலும் நூல்கள் உண்டு. மிகப்பழைய நூல்களிலெல்லாம் இத்தலம் குறிக்கப்பெற்றுள்ளதால் இதன் பழமைச் சிறப்பு நன்கு விளங்குகின்றது. 32.திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இதுவாகும். 33.ராமேஸ்வரத்திற்கு `கந்தமானதனபர்வதம்' என்ற புராணப்பெயரும் உண்டு. 34. ராமேசுவரம் கோவில் பிரகாரங்களின் மொத்த நீளம் 3850 அடி. இக்காலத்தை போல போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில் இத்துணை கற்களை கொண்டு ராமேசுவரம் தீவில் இத்திருக்கோவிலை நம் முன்னோர்கள் எவ்வாறு எழுப்பினார்கள் என்பது வியப்பாக உள்ளது. 35. பெர்கூசன் என்னும் அறிஞர், "திராவிடக் கட்டிடக் கலையமைப்பின் சிறப்பை ராமேசுவரம் கோவிலில் முழுமையாக காண முடியும். அதே நேரத்தில் கட்டிடக் கலையின் குறைபாடுகள் உள்ள ஒரு கோவிலை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் அதற்கும் ராமேசுவரம் கோவிலைத்தான் காட்ட முடியும்'' என கூறியுள்ளார். 36. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட பராக்கிரமபாகு என்ற மன்னன் இக்கோவிலை புதுப்பித்ததாக தெரிய வருகின்றது. 37. சுவாமி விவேகானந்தர் 1897-ம் ஆண்டு ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தந்து "உண்மை வழிபாடு'' என்னும் பொருள் பற்றி ஓர் அரிய சொற்பொழிவாற்றினார். 38. ஆனி மாதம் நடைபெறும் பிரதிஷ்டை விழாவும், ஆடிமாதம் நடைபெறும் திருக்கல்யாண விழாவும், மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி விழாவும், ராமேசுவரம் கோவிலில் நடக்கும் மிகவும் சிறப்பான திருவிழாக்களாகும். 39. தென்பாண்டி நாட்டிலே தேவாரப் பாடல் பெற்ற பதினான்கு திருத்தலங்களுள் ஒன்றாகிய ராமேசுவரத்திற்கு இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை வழிபடுகின்றனர். 40. ராமநாதபுரம் மாவட்டத்தின் தென்கிழக்கு கோடியில் உள்ள ராமேசுவரம் என்னும் தீவின் வடபாகத்தில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவிலும், ராமநாதபுரத்திலிருந்து 33 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. 41. இத்தலத்திற்கு `தேவநகரம்' `தேவை' என்னும் திருப்பெயர்களும் உண்டு. 42. கந்தமாதனம், தனுஷ்கோடி, தர்ப்பசயனம் ஆகிய மூன்றும் உள்ளதால் "முக்தி தரும் சக்தி உடைய தலம்'' என்ற சிறப்பை ராமேசுவரம் பெற்றுள்ளது. 43. ராமபிரான் ராமேசுவரத்தில் மட்டுமல்ல வேதாரண்யம், பட்டீசுவரத்திலும் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். 44. ராமேஸ்வர சேதுக்கடல் தீர்த்தம் 2 லட்சம் மைல் சுற்றி, சுழன்று வருவதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 45. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடலின் கீழ் உள்ள மூலிகைகள் கடல் மேல் மட்டத்துக்கு வந்து சேது கரையில் மட்டுமே ஒதுங்குவதையும் விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர். 46. கயிலாய மலையில் உள்ள மானசரோவர் தீர்த்தமும், சேது தீர்த்தமும் தனுஷ் கோடியில் சங்கமம் ஆவதாக நம் முன்னோர்கள் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனர். 47. ராமேசுவரத்துக்கு தீர்த்தமாட வருபவர்கள் அந்த காலத்தில் 36 நாட்கள் தங்கி இருந்து தீர்த்தமாடி செல்வார்கள். அது மெல்ல, மெல்ல குறைந்து தற்போது ராமேசுவரத்துக்கு ஒரே நாளில் சென்று விட்டு வந்து விடுகிறார்கள். 48. ராமேஸ்வரம் தல யாத்திரையில் முக்கிய அங்கம் வகிக்கும் தேவிபட்டினம். சூரியனாக கருதப்படுகிறது. பாம்பன் பைரவராகவும், ராமேசுவரம் அம்பாளாகவும், தனுஷ்கோடி சேதுவாகவும், திரும்புல்லாணி மகா விஷ்ணுவாகவும், உத்தரகோடி மங்கை நடராசர் ஆகவும் கருதப்படுகிறது. 49. ராமேசுவரம் கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களிலும் நீராடும் போது நிதானமாக நீராட வேண்டும். சில வழிகாட்டிகள் பக்தர்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் நீராட வைத்து விடுகிறார்கள். 50. ராமேசுவரம் கோவிலில் உள்ள ஒவ்வொரு தீர்த்தத்திலும் ஜீவ சத்துக்கள், மின் காந்த அலைகள் உள்ளன. தீர்த்தம் உங்கள் தலையில் நன்கு பட்டால்தான் அந்த சக்திகளை நீங்கள் முழுமையாக பெற முடியும். 51. ராமேசுவரம் கோவிலில் ஒரே சங்கினுள் அடுத்தடுத்து இரு சங்குகளை கொண்ட தெய்வீக திரிசங்கு உள்ளது. 52. ராமநாதருக்கு அபிஷேகம் செய்வதற்காகவே இத்தலத்தில் பிரத்யேகமாக 1008 அபிஷேகச் சங்குகள் உள்ளன. 53. ராமேசுவரம் கோவிலில் முழுக்க, முழுக்க மூலிகைகளால் உருவாக்கப்பட்ட புதுமையான ஒரு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்துக்கு வைணலிங்கம் என்றுபெயர். 54. ராமேசுவரம் மூலவரை தொட்டு பூஜை செய்யும் உரிமை காஞ்சி பெரியவர், சிருங்கேரி மகா சன்னிதானம்,நேபாள நாட்டு மன்னர் ஆகிய 3 பேருக்கும் மட்டுமே உண்டு. 55. ராமபிரான் சூரிய குலத்தை சேர்ந்தவர். அந்த குலத்தின் நேரடி வாரிசாக நேபாள மன்னர் குடும்பம் கருதப்படுகிறது. எனவே நேபாள மன்னர்களின் குல தெய்வமாக ராமேசுவரம் தலம் திகழ்கிறது. 56. ராமேஸ்வரம் ஆலயத்துக்குள் பூஜை செய்யும் ஒவ்வொருவரும் சிருங்கேரி மகா சன்னிதானத்திடம் சிவாச்சாரிய தீட்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 57. ராமேசுவரம் தலத்தில் மனம் உருகி வழிபட்டால் புத்திரபேறு, நாகதோஷம் நிவர்த்தி இரண்டையும் உறுதியாகப் பெறலாம். 58. ராமேசுவரம் தலம் தோன்றி 10 சதுர்யுகம் ஆகிறது என்கிறது ஒரு குறிப்பு. அதன்படி கணக்கிட்டால் ராமேஸ்வரம் கோவில் தோன்றி சுமார் 4கோடி ஆண்டுகள் ஆகிறது. 59. ராமனுக்கு உதவிய குகன் பற்றி உங்களுக்குத் தெரிந்து இருக்கும். அந்த குகனின் வழித் தோன்றல்கள் தான் சேதுபதி மன்னர்கள் என்று கருதப்படுகிறது. 60. ராமேஸ்வரம் கோவில் கட்டுமானத்துக்கு இலங்கை திரிகோண மலையில் இருந்து பிரமாண்டமான கருங்கற்கள் வெட்டி எடுத்து வரப்பட்டது. 61. 1693-ல் ராமேஸ்வரம் கோவிலை தகர்க்க முயன்றனர். சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் வெகுண்டு எழுந்து ராமேசுவரம் கோவிலை காப்பாற்றினார்கள். 62. ராமேசுவரம் கோவிலுக்கு அள்ளி, அள்ளி கொடுத்த சேதுபதி மன்னர்களுக்கு ஆண் வாரிசு இல்லாமல் போகும் என்று தாயுமானவர் சாபம்விட்டாராம். எனவே தான் அந்த அரச குடும்பம் பலதடவை வாரிசு இன்றி போனதாக சொல்கிறார்கள். 63. 1803-ல் சேதுபதிகளின் வாரிசு பலவீனத்தால் ராமேஸ்வரம் ஆலய உரிமையை மன்னர் குடும்பம் இழந்தது. 1853-ல் ஆங்கிலேயர்கள் நிர்வாகத்துக்காக ஒரு குழுவை ஏற்படுத்தினார்கள். பாஸ்கர சேதுபதி மன்னர் லண்டன் பிரிவியூ கவுன்சில் வரை சென்று போராடி 1893-ல் ஆலய உரிமையை மீட்டார். 64. 1901-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ஆலய நிர்வாகத்தை ஏ.எல்.ஆர். அருணாச்சலம் செட்டியார் ஏற்றார். 65. ராமேசுவரம் கோவிலுக்கு ஏராளமான மண்டபங்கள் உள்ளிட்ட திருப்பணிகளை செய்ய வட மாநில கோடீசுவரர்கள் பலர் முன் வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை செயல் வடிவம் பெறாமல் போய்விட்டது. 66. ராமேஸ்வரம் கோவில் ராஜ கோபுரத்தில் பல தடவை பழுது ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது. 67. ராமேசுவரம் கோவிலுக்கு 1975-ம் ஆண்டுக்கு பிறகு 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் கும்பாபிஷேகம் சீராக நடத்தப்படவில்லை. 68. ராமேசுவரம் கோவிலில் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவதால் கோவிலின் பெரும் பகுதி எப்போதும் ஈரமாக மாறி விடுகிறது. சிலர் அதில் வழுக்கி விழுகிறார்கள். இதை தடுக்க மாற்று ஏற்பாடுகள் செய்தால் நல்லது. 69. ராமேசுவரம் ராமநாதரை நேபாள மன்னர்கள் மட்டுமின்றி தாய்லாந்து, மைசூர், திருவிதாங்கூர் மன்னர்களும் வழிபட்டு பலன் பெற்றுள்ளனர். 70. 1925-ல் ராமேசுவரம் கோவிலில் கடல் அரிப்பு ஏற்பட்டது. அம்பா சமுத்திரத்தில் இருந்து ரூ.25 லட்சம் செலவில் கருங்கற்கள் கொண்டு வந்து கடல் அரிப்பை தடுத்து ஆலயத்தை விரிவுபடுத்தினார்கள். 71. ஆங்கிலேயர்களில் பெரும்பாலானவர்கள், இந்தியாவிலே மிகச் சிறந்த ஆலயம் என்று ராமேசுவரம் கோவிலை கூறினார்கள். 72. மத்திய அரசு 1951-ல் இனாம் ஒழிப்பு சட்டம் கொண்டு வந்ததால் ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி சொத்துக்கள் பறி போனது. 74. ராமேஸ்வரம் கோவில் ஆலய நிர்வாகத்தை 1959-ம் ஆண்டு தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை ஏற்றது. 75. ராமேசுவரம் கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் உண்டியல் வசூல் மிகவும் குறைவாகவே வருகிறது. 76. ராமேசுவரம் கோவிலில் சுமார் 300 பேர் நிரந்தர ஆலய ஊழியர்களாக உள்ளனர். 77. ராமேசுவரம் கோவிலுக்கு சேதுபதி மன்னர்கள் செய்த சேவையை கவுரவிக்கும் வகையில் அவர்களது பெயர், நட்சத்திரங்கள் இன்றும் மூலவர் முன்பு சங்கல்பத்தில் ஓதப்படுகிறது. 78. ராமேசுவரத்தில் உள்ள ஜோதிலிங்கம், இந்தியாவில் உள்ள ஜோதிலிங்கங்களில் 7-வது லிங்கமாக கருதப்படுகிறது. 79. ராமேசுவரம் தலத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் இன்னும் பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதியில் நெய் ஊற்றி விளக்கை எரிய வைத்தால் ராகு-கேது தோஷம் நீங்கும். 80. ராமேசுவரம் கோவிலில் வைணவ ஆலயங்களில் கொடுப்பது போல தீர்த்தம் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. 81. நேபாள நாட்டு பக்தர் ஒருவர் ஒரு லட்சம் ருத்ரங்களால் ஆன ருத்ராட்ச பந்தல் ஒன்றை இத்தலத்தில் அனைத்து கொடுத்துள்ளார். 82. ஐதீகப்படி ராமேசுவரத்தில் வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும். 83.1935-ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவின் வெள்ளி விழா ஆண்டாகும். அப்போது ராமேசுவரம் கோவில் இந்திய அஞ்சல் தலைகளில் பொறிக்கப் பெற்றது. 84. இதிகாச புராண காலத்திலிருந்தே ராமேசுவரம் புனித பூமி என்று இந்தியா முழுவதும் பேசப்பட்டது. 85. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காலம் தெரியாத காலத்தில் பாடியவற்றைச் சங்க இலக்கியம் என்று தொகுத்தார்கள். அதில் அகநானூறு தனுஷ்கோடி பற்றிப் பேசுகிறது. 86. சேது என்ற சொல்லுக்கே பாலம் என்பதுதான் பொருள். அந்தப் பாலத்தையே ஒரு பாலத்தின் மூலமாக நாம் கடக்கிறோம். 87. தமிழ்நாட்டில் பிறந்து வாழ்பவர்களை விட வடநாட்டுக்காரர்களே மிகுதியாக ராமேசுவரத்தைத் தரிசிக்கிறார்கள். ஆண்டு தோறும் இங்கு வருவதை ஓர் ஆன்மீகப் பயணமாகவே வடமாநிலத்தவர்கள் எண்ணியுள்ளார்கள். 88. முத்துப்பேட்டைக்கு அருகில் திருவான்மியூரிலும் ராமன் இலங்கை போகும்போது இறைவனை வணங்கி வழி கேட்டிருக்கிறான். அந்த இடம் திருஉசாத்தானம் என்று அழைக்கப்படுகிறது. 89. காசியிலும், சிதம்பரத்திலும் பத்து மாதம் தங்கிய பலனையும், நைமிசாரண்யம், திருப்பதி, ஸ்ரீபர்வதம், மதுரை, ஸ்ரீரங்கம், திருவானைக்கா, குடந்தை, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருவாரூர், திருவெண்காடு, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருமுதுகுன்றம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருக்காளத்தி ஆகிய பகுதிகளில் ஓராண்டு தங்கிய பலனையும் தனுஷ்கோடியில் நீராடி ராமநாதரை வணங்கி மூன்றே நாளில் பெறலாம். 90.காசியில் இறப்பது முக்தி தரும், பாணலிங்கம் பல திரளும், நர்மதையில் விரதம் இருப்பது முக்தி தரும், பொறாமையால் போர்க்களமாகிய குருசேத்திரத்தில் பிறருக்குத் தானம் செய்வதே முக்தி தரும் அந்த மூன்று பலனையும் ஒன்றாக்கித் தரும் பெருமை ராமேசுவரத்திற்கே உண்டு. 91. இந்திய நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் சி.வி.மாவ்லங்கர் ராமேசுவரம் கோவில் இந்திய தேசியச் சொத்து எனவும் ஒருமைப்பாட்டுக்கு உதவும் சாதனம் என கூறியதைக் கோவில் குறிப்பேடுகளில் காணலாம். 92. மண்ணினால் லிங்கம் செய்தாள், சீதை. அதனால் ராமேசுவரத்தில் யாரும் மண்ணை உழுது பயிர் செய்வதே இல்லை. 93. ஆவுடையாராக நிலமே இருக்க பாணலிங்கமாக மட்டுமே இருக்கும். ராமலிங்கத்தைப் போல் இருப்பதால், செக்கை ஆட்டி எண்ணை எடுப்பதும் இவ்வூரில் இல்லை. 94. 1925-ல் முதல் குடமுழுக்கும், 27.2.1948-ல் இரண்டாவது குடமுழுக்கும், 5.2.1975-ல் மூன்றாவது குடமுழுக்கும் நடந்தன. 95. ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடியவுடன் உடம்பில் மின்சக்தி பாய்ந்தது போல் ஒரு சுறுசுறுப்பு உணர்வைப் பெற முடிகிறது. 96. புத்திரகாரகனாகிய குருவுக்குப் பகையான கிரகம் சுக்கிரன். புத்திரஸ்தானத்தில் விரோதமானதாகக் கருதப்படுபவர் சூரியனும் செவ்வாயும் ஆவர். எனவே மகப்பேறு விரும்பியவர்கள் மேற்கூறிய கிரகங்களுக்குரிய ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் நீராடுவது கூடாது என்று விலக்கினார்கள். என்றாலும் சேதுவில் இக்காரணத்திற்காக இந்த நாட்களில் நீராடினால் தவறில்லை என்று கூறப்பட்டுள்ளது. 97. பிரேதத்திற்கு நீர்க்கடன் செய்யாதவன், கருவுற்ற மனைவியை உடையவன் வேறு தீர்த்தங்களில் நீராடுவதற்கு உரிமை இல்லை. ஆனால் சேதுவில் நீராடுவதற்கு இவர்களுக்கு தடையுமில்லை. காரணம் நீர்க்கடனுக்குரிய காசியின் பலனை சேது தரும். மேலும் மகப்பேறு தருவதில் இத்தலம் சிறந்திருக்கிறது. 98. தீர்த்தமே தெய்வமாயிருப்பதால் கடல் நீராட்டிற்கு விதிக்கப்பட்ட திதி, கிழமை, நட்சத்திரம் முதலிய நியமங்களை மீறியும் இங்கே என்றும் எப்போதும் ஆடலாம். பாதி உதயம், முழு உதயம் என்றெல்லாம் பார்க்காமல் நீராடலாம். 99. பலதீபிகை என்னும் சோதிட நூல் கர்ம நாசத்துக்கு நாகப்பிரதிட்டை செய்வதற்குச் சேது உரியது என்று கூறுகிறது. 100. புத்திரதோஷம் எதுவாயினும் சேதுவில் நீராடினால், மறையும். 101. காசிக்கு மட்டும் போய் வந்தால் போதாதாம். முதலில் ராமேசுவரம் சென்று நீராடி வணங்கிக் கடலில் மண் எடுத்துக் காசிக்குப் போய், கங்கையில் அதனைக் கொட்டி காசியிலிருந்து மீண்டும் வந்து மறுமுறையும் ராமேசுவரம் போய், காசியிலிருந்து கொண்டு வந்த கங்கை நீரால் ராமநாதருக்கு அபிஷேகம் செய்தால்தான் காசியின் பலன் பூர்த்தியாகக் கிடைக்கும். இந்த மரபு தவறி காசிக்கு மட்டும் போய் வந்தால் பயனில்லை. இதைத்தான் காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது என்ற பழமொழி கூறுகிறது. 102. காசி முக்திக்குச் சிறப்புடையது. அதனால்தான் உயிரை உடனே விட விரும்பாமல் வேறு எதையாவது விட்டுவிட்டு வருகிறார்கள். ராமேசுவரமோ உரிய காலத்தில் முக்தியும் பிற்காலத்தில் போகமும் அருளும் பாக்கியமுடையதாகும். 103. மிகுந்த சிறப்புடையது ராமேசுவரம் என்றாலும் தனுஷ்கோடிக்குப் போய் விட்டுத்தான் பிறகு ராமேசுவரம் வர வேண்டும். 104. பாம்பன் நீர் இணைப்பை வில் நாணாகவும் சுற்றிலும் வளைந்த கடல்நீரை வளைந்த வில்லாகவும் கற்பனை செய்தால் அந்த வில்லில் நாண்பூட்டி நிற்கும் அம்புபோலவே ராமேசுவரமும் தனுஷ்கோடியும் நமக்கு ஆகாயத்தில் நின்று பார்க்கும்போது தெரியும். 105. 1964-ல் அடித்த புயலில் ஓர் ரெயில் தனுஷ்கோடியில் தடம் புரண்டது. ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். இருப்புப் பாதை மண் மூடிப்போனது. ராமேசுவரம் கோவில் அகதிகள் புகலிடமானது. மீனவர்களை தவிர வேறு யாரும் தனுஷ்கோடிக்குப் போய் மீண்டும் வாழ்வதற்கு இன்று வரை துணியவில்லை. 106. நம்பு நாயகியம்மன் என்னும் மாரியம்மன் கோவிலும் முன்பு தனுஷ்கோடியில்தான் இருந்தது. புயல் அழிவுக்குப் பின் நடராஜபுரத்தில் இருக்கிறது. ராமேசுவரத் தில் காவல் தெய்வங்களில் இதுவும் ஒன்று. 107. சித்தப்பிரமை கொண்டோர் சேதுவால் குணம் பெறுவர். 108.ராமேசுவரத்திற்கு பழைய பெயர் கந்தமாதனப் பர்வதம் என்பதே ஆகும். ராமனுக்குப் பின்தான் பெயர் மாறியது. 109. சிவனும் உமாதேவியும் ராமேசுவரத்தில் தினமும் வெளிப்படத் தோன்றியபடியுள்ளனர் என்று சேது தல புராணம் சொல்கிறது. 110. தனுஷ்கோடிக்குப் போனாலும் போகாவிட்டாலும் ராமேசுவரத்தில் உறுதியாக அக்னி தீர்த்திற்க்குப் போய் நீராடாமல் எந்த யாத்திரிகரும் திரும்ப மாட்டார். இன்றைய நிலையில் அக்னி தீர்த்தத்தில் நீராடுவதே நடைமுறையில் அதிகமாகி உள்ளது. 111. 78 அடி உயரமான மேற்குக் கோபுரத்தை சேதுபதிகள் முழுவதும் கருங்கல்லாகவே கட்டி விட்டார்கள். பெரும்பாலும் நிலையும் மேல் தளமும் வரைதான் கருங்கல்லாக இருப்பது வழக்கம். இவர்களோ கலசம் வரை அப்படியே கருங்கல்லாக கட்டியது ஒரு சிறப்பே ஆகும். 112. கீழ்க் கோபுரம் கட்டிய தேவகோட்டை ஜமீன்தார் ஏ.எல்.ஏ.ஆர். செட்டியார் குடும்பத்தினரும் 128 அடி உயரமாக அதே போல் கருங்கல்லாய்க் கட்டி விட்டார்கள். இக்கீழ்க்கோபுரம் 1649-ல் சேதுபதியால் தொடங்கப்பட்டுக் கைவிடப்பட்டதால், 1879 முதல் 1904-க்குள் ஜமீன்தார் இதைக் கட்டியிருக்கிறார். இலங்கை வடகரையில் நெடுந்தீவில் நின்று பார்த்தால் இக்கோபுரம் தெரியும். 113. ராமன் நிறுவிய லிங்கம், அனுமன் லிங்கம், விசாலாட்சி, பருவதவர்த்தினி, நடராசர் ஆகிய ஐவர்க்கும் தனி விமானங்கள் உள்ளன. கோவில் பதினைந்து ஏக்கர் பரப்புள்ளது. நீளம் 865 அடியும் அகலம் 657 அடியும் உள்ள கோவில் இதுவாகும். சில உத்திரங்கள் 49 அடி நீளம் உடையவை ஒரே கல்லால் ஆகியவை. 114. வைணவத்தில் கருடசேவையும் சைவத்தில் ரிஷபவாகன காட்சியும் முக்தி தரும் என்பார்கள். அதுவும் கோபுர தரிசனமாகும்போது தான் இக்காட்சிகள் மிகவும் சிறப்புக்குரியதாகக் கருதப்படும். அதற்கு ஏற்ப மண்டப உச்சியில் ரிஷபவாகனக் காட்சியும் பின்புறம் கீழைக் கோபுரம் இருப்பதும் முக்திதரும் தலத்தில் சிறந்த ராமேசுவரத்திற்கு மிகவும் உரியதாய் விளங்குகின்றன. 115. விஜயரகுநாத சேதுபதி (கி.பி. 1711 - 1725) நாள் தோறும் குதிரையில் வந்து ராமேசுவரத்தை வழிபட்ட பிறகே இரவு உணவு உண்பதை வழக்கத்தில் வைத்திருந்தார். 116.ராமேஸ்வரம் பகுதி பாண்டியர். சோழர்கள், சிங்களவர், விஜய நகரமன்னர், மதுரை நாயக்கர்கள், மறவர் சீமை அதிபதிகளான சேதுபதிகள் ஆகிய பல்வேறு அரசுகளின் ஆட்சிப் பகுதியாக இருந்தது. 117.ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவு முதலில் மதுரை பாண்டிய மன்னர்களது ஆட்சிப் பகுதிகளாக இருந்தது. 118.கி.பி.பத்தாவது நூற்றாண்டில் பாண்டிய மண்டலத்தைக் கைப்பற்றிய பராந்தக சோழன் ராமேஸ்வரம் திருக்கோவிலில் துலாபாரம் நிகழ்த்தி அவனது நிறைக்குரிய பொன்னைக் கோவிலுக்கு அளித்தான் என்று கி.பி.932-ம் ஆண்டு வேளஞ்சேரி செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 119.மூன்றாம் பிரகாரக் கட்டுமானப் பணியைத் தொடங்கிய வரும் மிகச் சிறந்த சிவத் தொண்டராகவும் விளங்கிய முத்து விசய ரெகுநாத சேதுபதி (கி.பி.1713-1725) திருவாரூர் தச்சர்களைக் கொண்டு அழகிய தேர் ஒன்றை செய்து கோவிலுக்கு வழங்கினார். அதோடு அந்தத்தேர் ஓட்டத்திற்கு வடம் பிடித்து அவரே தொடக்கி வைத்தார். 120. வைணவரான ராமர் சைவக் கடவுளான ஈஸ்வரனை சிவலிங்க வடிவத்தில் வழிபட்டதால் சைவர்களும் வைணவர்களும் நாடு முழுவதிலும் இருந்து வந்து வழிபடும் முக்கியத் தலமாக உள்ளது ராமேஸ்வரம்.* *🙏நமசிவாய வாழ்க🙏* சிவமே ஜெயம் சிவமே தவம். *🙏சிவனே சரணாகதி🙏* *அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் ஆத்ம நமஸ்காரம் ஈசனே* 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Top