இரண்டாம் அதிபதி குருவாகி, 11ஆம் இடத்தில் கேதுவுடன் குரு

இரண்டாம் அதிபதி குரு ஆகி, 11ஆம் இடத்தில் கேது உடன் குரு அமர்ந்திருக்க, இவர்களில் யாரேனும் ஒருவர் ஆட்சி உச்சம் பெறும் போது, மிகுந்த பண வரவை அடைவார்.
ஏனென்றால் குரு கேது இணைவு என்பது விரக்தியைத் தரும். இதனால் மன விரக்தியில் அந்த ஜதகர் இருப்பார். ஏனென்றால் கேது ஞானக்காரகர், குரு என்பவர் ஜாதகர் ஆண் என்றால் அந்த ஜாதகரின் குணத்தை சொல்லக் கூடியது.
இதனால் அந்த ஜாதகர் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லமால் எவ்வளவு செல்வம் அடைந்தாலும், வாழ்க்கை முழுவதும் ஒரு விரக்தியிலேயே இருப்பார். என்ன தான் பணம் இருந்தாலும் அதனால் முழு மன நிறைவு, மகிழ்ச்சி இல்லாமல் இருப்பார்.
 
Top