மீனம் ராசியின் பொதுப் பலன்கள்

மனிதன் ஆரம்பம் ஆவதும் பெண்ண்னு க்குள்ளே ‘
அவன் ஆவி அடங்குவதும் மண்ணு க்குள்ளே
ஆரரய்ந்து பார் மனக்கன் னுகுலே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குகுள்ளே ‘

அருமையான பாடல் வரிகள் ஒரு ஜாதகத்தில் இலக்கினதுக்கு 12 ஆம் பாவத்தில் அயன ,சுக ,போகமும், இந்த உயிர் எப்படி , எங்கு , உயிர் , செல்லும் , மறு பிறவி உண்டா , இல்லையா என்பதையும் ,இந்த ஜாதகருடைய விரயங்கள் ,சுபமா ,அல்லது அசுபமா ,என்பதை இன்னும் பல்வேறு காரகத்துவங்கள் அடங்கி உள்ளன. .

ஊடல் உணர்தல் புணர்தல் இவை
காமம் கூடியார் பெற்ற பயன்

திருவள்ளுவர் குறள் 1009 படி ஊடல் ,உணர்வு ,பெறுதல் ,பின் கூடி மகிழ்தல் , ஆகியவை தலைவனுக்கும் , தலைவிக்குக்கும் ,இன்பம் தரும் செயல்கள் ஆகும் ..

மீன ராசியில் பூரட்டாதி 4, பாதங்களும் உத்திரட்டாதி 1-2-3-4- பாதங்களும் , ரேவதி 1-2-3-4- பாதங்களும் உள்ளன .மேலும் மீனா ராசி என்பது காள ப்ருஷ தத்துவப்படி பாகை ௦ மேஷம் தொடங்கி மீனம்330 TO 360 பாகை வரை உள்ள 12 வது ராசியாகும்
இனி 12 ஆம் ராசி மீன ராசியின் குணங்கள் ;.

மீனம் உபய நீர் ராசி , பெண்ண ராசி , ,ஜீவன் ராசி ,இரட்டை ராசி ,புண்ணிய நதிகள் , நடுத்தர உயரம் ,அழகான முகம் , பொறுமை ,புத்திக் கூர்மை ,சுறுசுறுப்பு , தற்புகழ்ச்சியில் விருப்பம் , ஈரல் வியாதி, பித்த சுபாவம் சிறந்த எழுத்தாளர் ,பேச்சாளர் , ஜோதிடத்தில் நல அறிவு ஆகிய குணங்கள் கொண்டவர்

இனி 12 ஆம் பாவமாகியிய மீன ராசியின் கரரகத்துவங்கள்,
அரசாங்க பதவி , மறைமுகப் பகைவர்கள் ,அவர்களால் ஏற்படும் தொல்லைகள் ,உள் நாடு , வெளி நாடு , கடல் கடந்த பயணம் ,தூக்கம் இல்லாமை ,தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் இடம் ஆகும்

இனி 12 ஆம் பாவம் எந்த ராசி & எந்த லக்னம் ஆனாலும் பொதுப் பலன்கள்
* முதலில் தந்தையின் ஸ்தானமாகிய 9 – க்கு 4 ஆம் 12 ஆம் ஆகும் இதன் மூலம் தந்தையின் சுகம் வீடு ,வண்டி, வீடு ,வாகனம் ,தாயார் நிலை கற்பு ,ஓழுக்கம் ,மனைவியின் தொழில் ,வருமானம் முதலியவைகளை 12 ஆம் பாவம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
* தாயின் 4 ஆம் பாவத்திற்கு 9- ஆம் பாவம் 12 – ஆகும் , இதன் தாயின் பாக்கியம் , கடவுள் நம்பிக்கை , தொழில் செய்து ,பணம் சம்பாதிப்பரா , அல்லது வீடடு தலைவியா முதலியவைகளை 12 ஆம் பாவம் மூலம் தெரிந்து கொள்ளலாம் .
* இனி மூத்த சகோதர , சகோதரி ஸ்தானமாகிய 11 – க்கு 2 - ஆம் பாவம் ஆகும் இதன் மூலம் கண் ,தனம் ,குடும்பம் , நிலைகளை வாக்கு ,குடும்ப தெரிந்து கொள்ளலாம் .
* இனி இளைய சகோதர , சகோதரி ஸ்தானமாகிய 3 –க்கு-10- ஆம் 12- ஆம் இடம் ஆகும் , இதன் மூலம் வருமானம் ,தொழில் ,ஜீவன் ,கர்மா ,மனைவியின் ,சுகம் , வீடு ,கற்பு , நிலைகளை தெரிந்து கொள்ளலாம் .
* இனி தாய் மாமன் ஸ்தானம் ஆகிய 5 ஆம் 8 – ஆம் இடம் 12 ஆகும் ,இதன் மூலம் ஆயுள் ,விபத்து , கண்டம் திடீர் இராஜயோகம் , தாய் மாமனின் மனைவியின் படிப்பு , கண் ,குடும்ப நிலை தனம் , தெரிந்து கொள்ளலாம் ஏன் எனில் 5 –க்கு 7 –ஆம் 11 –என்பது அத்தை க்கு 2- ஆம் பாவம் 12 – ஆகும்
* இனி இறுதியாக மனைவிககு வரும் நோய் ,கடன் செய்வினை கோளாறுகள் உழைப்பு நிலைகளை தெரிந்து கொள்ளலாம் . ஏன் எனில் 7 –க்கு -6 – ஆம் இடம் 12 ஆகும் .

மரணத்திற்கு பின் உயிர் சென்று அடையும் இடங்கள் ;
* 12 க்கு உடையவன் குரு,சுக்கிரன் ,என்றால் – தான் வணங்கும் தேவதை யின் உலகம் – சூரி – இராஜயோகம் , சந் – பிதுர் லோகம் , செவ்வாய் – வீர சொர்க்கம் ,12 – புதன் – பரி பூரணமாக சுதந்திரம்தான் பெற்று எங்கு நினைததாளும் செல்லும் , சனி ,ராகு ,கேது இருந்தால் எமனூர் என்னும் ‘பிரம்மலோகம் ‘ செல்லும் வானு உலகில் ‘மறவியூர் ‘என்னும் விண்ணுலகம் செல்வர்
புல் தரையில் சயனிக்க ;
* 12 க்கு உடையவன் 6 அல்லது 8 – இல் அமர ராகு 12 இல் இருந்து சுபர் பார்வை செய்யாவிடில் மெலும் புல் தரை சயனம் ஆகும் .
தேடிய பொருளை புதைத்து வைப்பான் ;
* 12 ஆம் வீட்டுக்கு உடையவன் பாவிகளுடன் சேர்ந்து,சுபர் வீட்டில் இருந்தாலும் ,கூடினாலும் , பார்த்தாலும் ,12 க்கு உடையவர் 12 இல் அமர பொருள் அதிகம் தேடி , ஒருவருக்கும் கொடுக்காமல் புதைத்து வைப்பான்.
பொருளை வைத்த இடம் தெரியாமல் விழித்தல் ;
* 12 இல் செவ்வாய் தனித்து நிற்க அல்லது 12 ஆம் வீட்டை பார்க்க ,தேடி புதைத்து வைத்த பொருளை ,வைத்த இடம் தெரியாமல்மறந்து இழப்பான் என்பதாம்
 
காலப் புருஷ தத்துவப்படி பன்னிரண்டாம் பாவம்
மீன ராசியின் பொதுப் பலன்கள் -------தொகுதி ---2
பதிவு எண் ; 32 தேதி ---17—2—2015
சாதக அலங்காரம் ----843-----வது பாடல் ----போன் , பொருள் , அன்னியர் வசம் ;
கண்ட பன்னிரண்டாமிடக் காவலன் ,
கொண்ட ஏலீர்குடி குடிகொள்ள ,
மண்டு பொன்னணி தானிய மாறிடும்,
கெண்டை போல் விழிக்குஞ் சுக வஞ்சியே,
பாடல் விளக்கம் ;
லக்கினத்துக்கு 12---இக்கு உடையவன் 7 –இல் நிற்க , பொண் , பொருள் , பொக்கிஷம் , தானியம் , ஆபரணங்கள் , முதலியவற்றை அன்னியர் எடுத்து கொள்வார் என்பதாம்
புலிப்பாணி பாடல் ; 67 --- பரதேசம் செல்லுதல் ;
பாரப்பா ஈராரோன் இரு நான் கோனும்
பகரு கின்ற செவ்வாயும் மூவர் சேர்ந்து
கூறப்பா எவ் இடத்தில் கூடினாலும்
கொற்ற்வனே , பரதேசம் போவான் காளை
சீரே நீ சுந்திரனும் கன்னுருற்றலும்
சில காலம் தங்கி இருந்து பொன் பொருள் தேடி
ஆரப்பா அவன் பதியில் வந்து வாழ்வான்
அப்பனே புலிபாணி அறைநதிடானே
பாடல் விளக்கம் ;
12- இக்கு உடையானும் 8 --- இக்கு உடையானும் , செவ்வாயும் மூவர் சேர்ந்து , எந்த இடத்தில் கூடினாலும் இவன்தான் வெளிநாடு செல்வான்
இவர்களை குரு பார்த்தல் சில காலம் அங்கேயே தங்கி இருந்து பொன் , பொருள் , தேடி மீண்டும் தான் சொந்த ஊர திரும்பி வருவான் என்பதாம்.
திரவிய நாசம் ;
சூரியன் மதி தான் பன்னிரண்டில் தோன்றி நிற்க
சீரிய ராஜ யோகம் சேருமே, திரவிய நாசம்
காரிகை செவ்வாய் திங்கள் , கலந்து உடன் இருக்க
பார்க்க வீரியத்தாலும் நாலா விதத்தாலும் திரவிய நாசம்
பாடல் விளக்கம் ;
சூரியனும் சந்திரனும் 12 இல் நிற்க , நல்ல ராஜயோகம் தான் ஆனால்
சுக்கிரன் , செவ்வாய் , மதி கலந்து இருக்க அல்லது பார்க்க எல்லா வகையில் திரவிய நாசம் ஆகி விடும் என்பதாம்.
வெளிநாடு சென்று வாழ்வார் ;
உற்றதோர் சயனத்தில் உச்சமாய் ஒரு கிரகம் நிற்க
பற்றியே அப்பீடத்தை சுற்றி மண்டன் பலப்பட இலக்கினதோணும்
சுற்றியே சூழ்ந்திட உதித்தூர் எல்லாம்
வற்றிய குளத்துக் கொக்காய் சுற்றியே பிற நாடு வாழ்வான்
பாடல் விளக்கம் ;
12-- ஆம் வீட்டில் ஏதேனும் ஒரு கிரகம் உச்சமாய் இருக்க ,அங்கே சனி பலப்பட லக்கினதிபதியும் உடன் இருக்க , ஜாதகன் சொந்த ஊரை விட்டு
வெளிநாடு செல்வான் என்பதாம் .
கௌசி-----402---வது பாடல் ;களத்ர் மரணம் ;
மேவிய ஏளு எட்டில் விளங்கிய பனிரண்டில்
தாவிய உதய நான்கில் சனி குஜன் கன்றோ நின்றால்
ஆவலாய் முடித்த தாரம் , அவர் திசை போசிப்பில் மாண்டு
பாவி போல் அலைவான் கண்டாய் பண்பிரு தவத்தோன் மண்ணா !
பாடல் விளக்கம் ;
7,8,12, 4 இல் சனி , செவ்வாய், சேர அல்லது பார்க்க ஆசையாய் முடித்த திருமணம் மனைவி இல்லாமல் இருப்பார் என்பதாம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
12 ஆம் வீட்டின் அதிபதி இருக்கும் இடத்தின் பலன் ;
லக்கினத்தில் இருந்தால் செல்வ நஷ்டம் ஏற்படும் , எப்போதும் ஏதோவொரு வியாதியால் துன்பம் ஏற்படும் ,மெலிந்த தேகம் , எடுத்த காரியத்தில் தோல்வி ஏற்படும் .
2 ஆம் வீட்டில் இருந்தால் இனிமையாகவும் பேசுவார்கள் அல்லது அமைதியாக பேசாமல் இருப்பார். ஆனாலும் மகிழ்ச்சி உடையவர் ,தெய்வ நம்பிக்கை , தெய்வ காரியங்களில் செலவு செய்வார்.
3--- ஆம் வீட்டில் இருந்தால் சுயநலக்காரன் , உடன் பிறப்பால் நன்மை
பெறுவார்கள். பூர்விகம் சொத்து இழப்புகள் ஏற்படும் .
4--- ஆம் வீட்டில் இருந்தால் தாய் நலம் பாதிப்பு ஏற்படும் , வீடு , நிலம் ,செல்வம் , வாகனம் , இவர்றால் செல்வ இழப்பு ஏற்படும் .
5--- ஆம் வீட்டில் இருந்தால் குழந்தை நலம் இல்லாதவர் , படிப்பு குறைவு ,குழந்தை பெற தவம் இருப்பார்கள்.
6-- ஆம் வீட்டில் இருந்தால் தனது சொந்தமே பகை ஆகும் . கெட்ட
நடத்தை நடக்கும் , பல பெண்கள் தொடர்பு உள்ளவர் .
7-- ஆம் வீட்டில் இருந்தால் மனைவிக்கு செலவு செய்ய நேரிடும்
கல்வி அறிவு குறைப்பாடு உண்டு , இல்லற சுகம் பெற இயலதவர்
8--- ஆம் வீட்டில் இருந்தால் லாபம் , நல ஒழுக்கம் உள்ளவர் , அன்பாக
பேசுவார் ஆனாலும் மத்திம ஆயுள் தான் உண்டு
9--- ஆம் வீட்டில் இருந்தால் மூத்தோர் சொல் கேளாதவர்கள் , சுயநலவாதி , நண்பர்களை மதிக்க மாட்டார்கள் ,
10-- ஆம் வீட்டில் இருந்தால் தந்தையின் தனம் சேதம் ஆகும் , அடிக்கடி தொழில் மாறுதல் ஏற்படும் நிறைய செலவு ஏற்படும்
11-- ஆம் வீட்டில் இருந்தால் குழந்தை பாக்கியம் குறைவு , தத்து புத்ர யோகம் உண்டுபண்ணும் இலாபம் குறைவுதான் பிறரால் இலாபம்
பெரும் யோகம் உண்டு .
12-- ஆம் வீட்டில் இருந்தால் அதிக செலவுகள் ஏற்படும் , தன் மேலேயே
வெறுப்பு , கோபம்தான் ஏற்படும் . சுப விரயம் உண்டு
உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
.கட்டணம் உண்டு
.
ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547
எடப்பாடி சங்க ஆண்டு விழாவில் சிங்காரம் பேட்டை வாஸ்து சக்கரவர்த்தி ஜுபிடர் ஷேகர் M.A.LLB மதுரை அஸ்ட்ரோ பாரதி , பெரம்பலூர் ஓம் சக்தி பாலா மீனம் பச்சமுத்து உள்ளார்
MEMORIES YOU MAY
 
Top