Astrology Discussions

சந்திரனுக்கு இரண்டாம் இடத்தில சூரியன் ராகு கேது தவிர மற்ற கிரஹங்கள் இருப்பது நிறைந்த அறிவு பெற்றவர், தன் சுய முயற்சியால் முன்னுக்கு வருபவர் , நிறைந்த புகழ் உடையவர் , பெரும் செல்வந்தராக இருப்பார்.
துர்ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 6,8,12 அதிபதிகள் ஒன்று கூடியோ அல்லது தனித்தனியாகவோ 6,8,12 வீடுகளில் இருப்பது. இந்த ஜாதகத்தில் பிறந்தவர்கள் ஏழையாய் இருந்தாலும் ஒருசமயத்தில் திடீரென நினைக்க இயலாதராஜயோகத்தை அடைந்து பணக்காரர் ஆகிவிடுவார்கள்.
கிரகங்கள் தம் நீச ராசியில் இருந்தால் நீசராவார். ஆயினும் இவர்கள் நின்ற ராசிநாதன் ஆட்சியோ உச்சமோ பெற்றாலும், அல்லது லக்னத்திற்கோ சந்திரனுக்கோகேந்திரத்தில் இருந்தாலும் நீசம் பங்கமாகி, 'ராஜயோகம்' வருகிறது. இவர்களுக்கும் திடீர் சம்பத்துகளும் பெயரும் புகழும் உண்டாகும்.
எந்த ராசி எந்த லக்னம் என்றாலும் குரு முற்றிலும் வலு விழந்தால் அந்த ஜாதகர் புண்ணிய பலனை சேர்க்கவில்லை என்றே பொருள், குரு ஜாதகத்தில் 2/5/9 போன்ற அதி முக்கியமான வீடுகளுக்கு காரகாதிபதி, கரகாதிபதி என்றால் அந்த வீட்டின் காரக பலனை வழங்கும் பொறுப்பை கொண்டவர், 2/5/9 காரகங்கள் சில: தனம்/குடும்பம், பூர்வீகம்/மந்திர சித்தி, சேமிப்பு ஆன்மீக பயணங்கள் மற்றும் வழிபாடுகள், இப்படி இந்த மூன்று வீடுகளும் அதி முக்கியமான காரகங்களை கொண்ட வீடுகள், குரு வலுவிழந்து அந்த வீட்டின் அதிபதி வலுபெற்றால் குருவால் ஏற்படும் இன்னல்களை அந்த ஜாதகர் எதிர்கொள்ள இயலும், வீட்டின் அதிபதியும் வலு விழந்தால் ஜாதகர் இந்த வீட்டின் பலன்களை பெற வாழ்க்கை முழுதும் போராட வேண்டும், இதில் வலு பெறுவது/வலு விழப்பது என்ன நிலையில், அதன் தாக்கம் என்ன, எவ்வாறு எதிர்கொள்ளலாம் தொடந்து படியுங்கள் பார்க்கலாம்..! குரு ஜனன ஜாதகத்தில் சனி/ராகு/கேது தொடர்பை பெற்றால் வலுவிழந்தவராவார், இதில் இந்த மூவரும் குருவுடன் ஒரே ராசியில் இணையும் போதே குரு தன் வலுவை முழுதாக இழப்பார், குரு ஜாதகத்தில் 3/6/8/12 ல் ஆட்சி நிலையை பெறாமல் நின்றால் வலு விழப்பார், இதிலும் குருவுக்கு அந்த வீடு பகை/நீச்ச வீடுகளாக இருக்கும் போது தான் முழு வலுவை இழப்பார், இதுவே சமம்/நட்பு வீடு என்றால் முழு வலுவை இழக்க மாட்டார், மேலும் மறைவில் ஆட்சி/உச்சம் பெற்ற குரு வழுவிழந்தவராக மாட்டார்..! குரு ஒருவரது ஜாதகத்தில் வலு விழந்தால் மேலே கூறிய மூன்று பாவத்தில் தாக்கம் அதிகம் ஏற்படுத்துவார் என்றேன் அல்லவா, இந்த தாக்கம் எவ்வாறு இருக்கும் என்றால் ஜாதகருக்கு ஆன்மீகம்/சாஸ்திரம்/சம்பிரதாயம் இவைகளை நோக்கி ஈர்க்கபடுவார், அதே நேரத்தில் அதனை அவர் பின்பற்றும் போது கடுமையான சோதனைகளை 2/5/9 ம் பாவங்களில் எதிர்கொள்வார் (விதிவிலக்கு: இந்த வீடுகளின் அதிபதி வலு பெற்று இருந்தால் தாக்கம் குறையும், அதாவது எதிர்கொள்ளும் வலிமையை பெருவார்), இவர்களால் ஆன்மீகம்/சாஸ்திரம்/சம்பிரதாயம் இவைகளை விடவும் முடியாமல் முழுதாக ஏற்று கொண்டு செயல்படவும் இயலாமல் போகும், இவ்வாறான எதிர்மறை ஆற்றலை எதிரக்கொள்பவர் குருவின் செயல்பாட்டில் விழிப்புணர்வு பெற வேண்டும், குருவின் காரகங்களில் 'தாமரை இலை நீர்' போல செயல்பட அல்லது செயல்படுத்த வேண்டும்..! உதாரணமாக: குரு 8 ல் மறைந்து மேஷ லக்னம் விருச்சிக ராசி என்றாகி 8 ம் 6 ம் பரிவர்தனை பெற்று அங்கே சுக்கிரனும் மறைந்து நின்றால், மேலே நான் கூறிய எதிர்மறை பலன்களை ஜாதகர் முழுதாக அனுபவிப்பார், இவர் அதிகமாக குருவின் காரகங்களை செயல்படுத்தினால் 2/5/9 ல் அதிக பாதிப்புகள் ஏற்படும், அதனை எதிர்கொள்ள இயலாமல் ஜாதகர் குருவை வெறுப்பார் (குருவின் காரகங்களில் ஆன்மீகம்/சாஸ்திரம் போன்ற காரகங்களில் விரக்தி/வெறுப்பு ஏற்படும்) இதனால் அதில் இருந்து விலகி போக எத்தனிக்கும் போது, குரு மீண்டும் தனம்/சேமிப்பு போன்ற காரகங்களில் தன் எதிர்மறை காரகங்களை வழங்க ஆரம்பிப்பார், இதனால் திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பதை போல ஜாதகர் மீண்டும் ஆன்மீகம் வழிபாடு போன்றவற்றை செயல்படுத்துவார் இதனால் அதில் இருந்து மீளுவார், மீண்ட ஜாதகர் அதில் தீவிரமாக இறங்கும் போது மீண்டும் குரு தன் எதிர்மறை பலன்களை வழங்க ஆரம்பிப்பார், திரும்பவும் முதலில் ஆரம்பித்த இடத்தில் ஜாதகர் வந்து நிர்ப்பார், இதனை எதிர்கொள்ள ஜாதகர் குருவின் காரகங்களில் 'தாமரை இலை நீர்' போல முழுதாக ஒதுக்காமல் அதர்க்காக முழுதாக முழுகாமல் செயல்பட வேண்டும், அப்போது தான் குரு தரும் கர்ம பலனை எதிர்கொள்ள இயலும், ஆனால் இந்த புரிதல் ஏற்படுவதற்க்கே ஒரு கொடுப்பனை வேண்டும் என்பதே நிதர்சனம், பெரும்பாலும் குரு வலு குறைந்து 2/5/9 ம் அதிபதி அல்லது லகினாதிபதி/ராசியாதிபதி வலுத்தவர்கள் இதனை புரிந்து கொண்டு செயல்பட முயற்சிப்பார்கள்..! குரு தரும் எதிர்மறை பலன் முழு வாழ்க்கைக்கு உண்டானது எந்த தசை என்றாலும் இது செயல்படவே செய்யும், ஏனெனில் இவர் பூர்வபுண்ணியம்/பாகியாதிபதி ஆவார், ஆனால் லக்ன/ராசிக்கு சுபர் என்றாகி வலு பெற்று தசை நடக்கும் போது தாக்கம் குறைவாக இருக்கும், அதே போல லக்ன/ராசிக்கு சுபர் வலுத்து 2/5/9 ம் வீட்டில் தொடர்பு பெற்றால் தாக்கத்தை எதிர்கொள்ளும் வலிமையை பெருவார், முக்கியமாக சனி/ராகு/கேது தசைகளில் குருவின் ஆஸி மிக அவசியம் இல்லை என்றால் ஜாதகரின் பாடு திண்டாட்டமே, மீண்டும் சந்திப்போம்..!
சுபக்கிரகங்கள் உபசய வீடுகளில் (3,6,10,11) இருப்பது. நல்ல பணவசதி பேரும், புகழும் பெரும் உத்யோகம்.
பிரஹஸ்பதிக்கு ராகு, கேது அல்லது சனியின் சேர்க்கை ஜாதகன் மதப்பற்று இல்லாதவன். கடவுள் பேரில் நம்பிக்கை இல்லாதவன்.
2,9 அல்லது 11க்குடையவன் ஆட்சி உச்சம் பெற்று பலமாகி நின்று, குரு ஐந்துக்கோ அல்லது பத்துக்கோ அதிபதியாகிகேந்திரங்களில் இருந்தால் இந்த யோகமாகும். தீர்க்க ஆயுள், நல்ல பணவசதி, பேரும் புகழும் உண்டாகும்.
இராகு 6ல் நின்று குரு கேந்திரத்தில் இருப்பானாகில் இந்த யோகமாகும் எல்லாவித சுகங்களும் சந்தோஷங்களும் உண்டு.
9க்கும் 10க்கும் அதிபதிகள் ஒன்று கூடுவதோ அல்லது பார்ப்பதோ அல்லது பரிவர்த்தனமோ உண்டெனில், இந்த யோகமாகும். நல்ல புத்திமான், பெரும் பதவி, பண வசதி பேரும் புகழும் உண்டாகும்
திருமணப்பொருத்ததிற்கு மட்டுமல்ல கூட்டு_தொழில் செய்வதற்கும், தெரியாத நாட்டில் புதிய நண்பர்களின் நட்பை வளர்த்து கொள்வதற்கும் மிக பயன்படக்கூடியவைதான் இந்த கணங்கள். கணங்கள் மூன்று வகை அவை தேவகணம்மானுஷகணம்_ராஷசகணம் போன்றவை ஆகும். தேவ_கணம் இவர்கள் அமைதியாகவும், பொருமையாகவும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் கொண்டவர்கள். மனுச_கணம் இவர்கள் ஒரளவு விட்டுக்கொடுத்து, தேவையான நேரத்தில் தனது கோபதாபங்களை காட்டுவார்கள். ராஸச_கணம் இவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவராயும்,சிந்திப்பதில் தாமதம் உடையவராகவும் இருப்பார்கள். தேவகண_நட்சத்திரங்கள் அஸ்வினி,மிருகசீரிடம்,புனர்பூசம்,பூசம்,ஹஸ்தம்,சுவாதி,அனுசம்,திருவோணம்,ரேவதி போன்றவை. மனுசகணம்நட்சத்திரங்கள் பரணி,ரோகிணி,திருவாதிரை,பூரம்,உத்ரம்,பூராடம்,உத்ராடம்,பூரட்டாதி,உத்திரட்டாதி போன்றவை. ராஸசகணநட்சதிரங்கள் கார்திகை,ஆயில்யம்,மகம்,சித்திரை,விசாகம்,கேட்டை,மூலம்,அவிட்டம்,சதயம் போன்றவை. குறிப்பு : பெண்,ஆண் ஒரே கணமானால் சிறப்பு.(இருவரும் ராஸச கணமாக இருக்க கூடாது) பெண் மனுசகணமும்,ஆண் தேவ கணமும் நல்லதே. (இவை மாறி இருந்தாலும் பிரச்சனை இல்லை).என்கிறது பொருத்த சாஸ்திரம். இவற்றை நட்புகளை தேர்தெடு பதற்கும், கூட்டு தொழில் செய்வதற்கும் கூட பயன்படுத்தலாம்.
இதில் சொல்லப்பட்டுள்ள விதிகள், பொதுவானவை அல்ல ,, அனைத்தும் விஷேச விதிகள் ஆகும் . 1. பெண் ஜாதகத்தில் இலக்கின்துக்கு 7 , 8 , மிடங்களில் ,பாவ கிரகங்கள் நிற்க ,9 ஆம் ராசியில் சுபர்கள் நிற்க ,மேற்படி தோஷங்கள் ,பலன் அற்றது, மாறாக, நன்மையான பலன்கள் நடக்கும் . பெண்ணும் செஸபாக்கியவதியாக இருப்பாள் . 2. 7 இக்கு உடையவன் ,6 ,இல் நிற்க ,அல்லது 6,7 ,ஆம் மிடத்து அதிபதிகள் ,12- இல் நிற்க , அல்லது 6,7, மிட அதிபதிகள் ஒரே நட்ச்சத்திர சாரத்திலோ , அல்லது இருவரும் ஒரே அம்சத்தில் சேரின் , அந்த பெண் கற்பு ம் ,ஒழுக்கமும் ,அடக்கமும் , பண்பும் ,சேர்ந்த பெண்ணாக இருப்பாள் , 3 .ஏழுக்கு உடையவன் இலக்கினதிலும் ,ஆறாம் அதிபதி 7 அல்லது 12 இல் இருக்க , 7,12, ஆம் இட அதிபதிகள் ஒரே நவாம்சத்தில் இருக்க ,அல்லது ஒருவரையொருவர் பார்வை செய்ய , இதே பலன் உண்டுபண்ணும் . 4 .மகர இலக்கின ஜாதகருக்கு சந்திரன் தான் நின்ற ராசியில் கடைசி நவாம்சத்தில் ,அதாவது ராசியின் 9- வது பாதத்தில் நிற்க 6 இக்கு உடையவன் பார்வை செய்ய கற்புக்கரசியாகவும் , தர்ம சிந்தனை உடையவர்களாகவும் ,இருப்பாள் . 5 . யவனரின், ஸ்திரி ஜாதகப்படி 7 இக்கு உடையவர் கேந்திரத்தில் ,,நவாம்ச ரீதியாக, 6 இக்கு உடையவன் அம்சத்திலும் ,, 6 இக்கு உடையவன்னுடன் சேர , 12 இக்கு உடையவன் பார்வை பெற ,இந்த கிரக விதிகளில் ,ஏதானும் ஒன்றில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டிக்கு பெருமை சேர்த்து கற்புக் கரசியாகவும் , இருப்பார்கள் . இந்த மாதிரி பெண்களை தேடி மணப்பது ,ஆண்களுக்கு நன்மை தரும் . 6 .திரிகோண ஸ்தானம் எனப்படும் 1,5,9, ஆகிய ராசிகளில் சுபர் நிற்க ,அந்த பெண் புத்திர பாக்கியத்துடன், சௌக்கியமாக வாழ்வாள் .. 7. இரவில் பிறந்து ,இரட்டை ராசி லக்கினமாக ,அமைந்து அதாவது ரிஷபம், கடகம் ,கன்னி ,விருச்சிகம் ,மகரம் , மீனம் ஏதானும் ஒன்று லகினமாகி அதில் சூரியன் ,சந்திரன் , அமர அந்த பெண் மஹா பாக்கிய யோகம் உண்டாகி ,தனம் , கற்பு , புத்திர ,பௌதிர ,ராஜ யோகத்துடன் வாழ்க்கை நடத்துவார் . 8 . லக்கினம் , ராசி , இரண்டும் இரட்டை ப்படை ராசியில் அமர ,அந்த பெண் சீரும் சிறப்பும் கொண்டு வாழ்வார்கள்
ஒருமுறை ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தை கற்பதற்கு வேண்டி சந்திரன் சென்றான். அவர் தனக்கு தெரிந்ததை எல்லாம் அவ னுக்கு கற்று கொடுத்தார். சந்திரன் அத னைக் கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறி ந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் திளைத்தான். சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான், பூமி யில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜா தகத்தைக் சரியாக கணிக்குமாறு சந்திர னை பணித்தார். சந்திரனும் அந்தச் சிசுவின் ஜாதகத்தை கணி த்தான். அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியா கும் சமயம் பாம்பு கடித்து மரண ம் சம்பவிக்கும் என்றும் சொன்னான். ப்ரஹஸ்பதி சந்திரனை சிலமாதங்கள் கழித்து வரவழைத்தார். அச்சமயம் சந்திர ன் ஜாதகம் குறித்த குழந்தைக்கு ஓராண் டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிக ளே இருந்தன. சந்திரனும், குருவும் வானவெளியில் சஞ்சரி த்தபடியே குழந்தையை பார்த்துக் கொண்டு இருந்தனர். தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. குழந்தைக்கும் பாம்புக் குமிடையே ஒரு அடி தூரமே இடைவெளி இருந்தது. தன்னுடைய கணிப்பு சரிதான் இன்னும் கொ ஞ்ச நேரத்தில் பலிக்க போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன் குருபகவா னை இறுமாந்து நோக்க, குரு தன் புன்ன கை மாறாமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த எதிர்பாராத அதிசய ம் நடந்தது. திடீரென கண்விழித்த குழந் தை வழவழவென்று மின்னிக் கொண்டு இறங்கி வரும் பாம்பை ஏதோ புதுமாதிரி விளையாட்டு சாமான் என்று கருதி, மகிழ் ச்சியால் கையை யும் காலையும் உதைத் துக் கொண்டு துள்ள, தொட்டில் மேலே கீழே பக்கவாட்டில் என்று திசைமாறிக் குலுங்க, பாம்பின் தலை சங்கிலியின் ஒரு வளைய த்தி ற்குள் எக்கச்சக்கமாக சிக்கிக் கொண் டது. தன் தலையை விடுவித்துக் கொள் ளும் முயற்சியி ல் பாம்பு தன் உடலால் சங்கிலியைச் சுழற்றிக் கொண்டு நெளிய, குழந்தை மேலும் துள்ள, இப்போது பாம்பி ன் வாலும் வேறொரு வளை யத்தினிடை யே சிக்கிக் கொண்டது. குழந்தை மேலும் மேலும் துள்ளி விளை யாட எவ்வளவு நேரம்தான் பாம்பு தாங்கும் சில வினாடிகளில் பாம்பு இறந்து விட்டது. அடுத்த வினாடி குழந்தை தன்னுடைய இரண்டாவது வயதில் அடி எடுத்து வைத் தும் விட்டது. சந்திரன் தன் ஓலைச் சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக் கணக்கை சரிபா ர்த்துக் கொண்டிருந்தான். தன் கணக்கு சரியாகவே இருந்தது போலப் பட்டது. பின் னர் குருவைப் பார்த்துக் கேட்டான். ஜாதகத்தில் இப்போது குருபார்வை கூட இல் லையே இது எப்படி நடந்தது? குழந் தை எப்படிப் பிழைத்தது? தோற்றுவிட்ட ஆத்திரம் அவன் குரலில் பீறிட்டது. புன்ன கை மாறாத குரு, அப்போதுதான் வாயைத் திறந்தார் ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன? அதுதான் இப்போது நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தேனே அப்புறம் எப்படி மரண ம் சம்பவிக்கும்? சந்திரன் தன் கர்வம் அழி ந்து, குருவை வணங்கி விடைபெற்றான். ஜாதகத்தில் கிரகநிலை எப்படி இருந்தா லும் கிரகங்களின் கோசார நிலைகளை யும் ஆரா ய்ந்த பின்னரே உறுதியாகப் பலன்களை உணர முடியும். குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம். அதனால்தான் குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள். சில நேரங்களில் நமது குரு (ஆசாரியன் பார் வை ஆசி பூரணமாக நம்மிடம் இருந் தாலும்) கடாச்சம் கூட கோடி நன்மை தரும். எனவே எப்பொழுது ஏல்லாம் முடியுமோ அப்போது ல்லாம் ஆசாரியனை சேவிக்க சென்று வருவோம்- காரணமே இல்லாவிட்டால் கூட.
1 இல் ராகு 7 இல் கேது , 2 இல் ராகு 8 இல் கேது , 6 இல் ராகு 12 இல் கேது , சந்திரனோடு ராகு கேது சேர்ந்து உள்ளவர்கள் , ராகு , திசா , புக்தி , அந்திரம் , நடப்பவர்கள் , சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் -- தினசரி காலை , மாலை , 9 , 5 முக மண்விளக்கு தீபம் போட்டு , 12 நாட்கள் கீழே காயத்ரி மந்திரத்தை சொல்ல தோஷம் விலகும் – 12 வது நாள் சர்க்கரை பொங்கல் , தேங்காய் , பழம் , வைத்து படைக்கவும் - ஓம் சாலுவேசாய வித்மஹே பட்ஷி ராஜாய தீமஹி தன்னோ சரப ப்ரசோதயாத் ஓம் சாலுவேசாய வித்மஹே பட்ஷி ராஜாய தீமஹி தன்னோ சரப ப்ரசோதயாத் ஓம் சாலுவேசாய வித்மஹே பட்ஷி ராஜாய தீமஹி தன்னோ சரப ப்ரசோதயாத் ஓம் சாலுவேசாய வித்மஹே பட்ஷி ராஜாய தீமஹி தன்னோ சரப ப்ரசோதயாத் மாரியம்மன் OR காளியம்மன் OR துர்க்கை OR பாம்பு புற்று உள்ள கோவிலில், ஏதேனும் ஒரு கோவிலில் தினசரி ராகு காலத்தில் , 2 மணி நேரம் கோவிலில் அமர்ந்து இருக்க வேண்டும் 5 முக மண் விளக்கில் , நெய் , OR நல்லஎண்ணை ஊற்றி , 12 விளக்கு தீபம் போடவும், 5 வது நாளில் 5 லி பசும்பால் நன்கு காய்ச்சி , முந்தரி , ஏலக்காய் , போட்டு , சாமிக்கு படைத்து , பின் ஒரு பெண் குழந்தைக்குக்கு கொடுத்து , பின் அனைவருக்கும் கொடுக்கவும் – 10 வது நாளில் சர்க்கரை பொங்கல் , சாமிக்குஅபிஷேகம் செய்து , ஆடையுடன் , அர்ச்சனை செய்யவும் தினசரி ராகு காலம் நேரங்கள் திங்கள்கிழமை காலை மணி – -------7-30 TO 9-00 A.M. செவ்வாய்க்கிழமை மதியம் மணி – 3-00 TO 4-30 P.M. புதன்கிழமை மதியம் மணி –------- 12-00 TO 1-30 P.M. வியாழக்கிழமை மதியம் மணி – 1-30 TO 3-00 P.M. வெள்ளிக்கிழமைகாலை மணி – 10-30 TO 12-00 P.M. சனிக்கிழமை காலை மணி –------- 9-00 TO 10-30 A.M. ஞாயிறு கிழமை மாலை மணி – 4-30 TO 6-00 P.M.
🌠 கேதுவின் அருள் பெற விநாயகர், சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். 🌠 ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். 🌠 காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அங்கு கேது பரிகார பூஜை செய்யலாம். 🌠 புற்று இருக்கும் அனைத்து அம்மன், காளி கோவில்களிலும் ராகு பரிகார பூஜைகள் செய்யலாம். 🌠 நவகிரகத்தில் உள்ள ராகு கேதுவுக்கும் விளக்கேற்றலாம். 🌠 சிவன் கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும். 🌠 பெருமாள் கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை புதன்கிழமை ராகுகாலத்திலும் வணங்குவது நல்லது. 🌠 சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள், அர்ச்சனை செய்து வழிபடவும். 🌠 தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபாடு செய்யலாம். 🌠 ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபடவும். 🌠 ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடவும். 🌠 பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வழிபடலாம். 🌠 பாம்பு புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம். 🌠 ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை காலை ஒருபொழுது மட்டும் விரதம் இருக்கலாம். 🌠 வாரந்தோறும் துர்க்கை அல்லது காளிக்கு எலுமிச்சம் பழம் மாலை சாத்தி வழிபடவும். எலுமிச்சம் பழம் மாலையில் 16 அல்லது 32 என்ற எண்ணிக்கையில் பழம் இருக்க வேண்டும். 🌠 அரசு வேம்பு மரம் உள்ள விநாயகரை சனிக்கிழமை காலை ராகு காலத்தில் சுற்றி வந்து வழிபடவும். ராகு கேது பரிகார ஸ்தலங்கள் : 🌠 கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும். 🌠 நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்களம் பரிகார ஸ்தலமாகும். 🌠 சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் ராகுவுக்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. 🌠 கும்பகோணம் அருகே கீழப் பெரும்பள்ளம் கேது ஸ்தலமாகும்
1. அசுவினி - சுகந்த தைலம் 2. பரணி - மாவுப்பொடி 3. கார்த்திகை - நெல்லிப்பொடி 4. ரோகிணி - மஞ்சள்பொடி 5. மிருகசீரிடம் - திரவியப்பொடி 6. திருவாதிரை - பஞ்சகவ்யம் 7. புனர்பூசம் - பஞ்சாமிர்தம் 8. பூசம் - பலாமிர்தம் (மா, பலா, வாழை) 9. ஆயில்யம் - பால் 10. மகம் - தயிர் 11. பூரம் - நெய் 12. உத்திரம் - சர்க்கரை 13. அஸ்தம் - தேன் 14. சித்திரை - கரும்புச்சாறு 15. சுவாதி - பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு) 16. விசாகம் - இளநீர் 17. அனுஷம் - அன்னம் 18. கேட்டை - விபூதி 19. மூலம் - சந்தனம் 20. பூராடம் - வில்வம் 21. உத்திராடம் - தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது) 22. திருவோணம் - கொம்பு தீர்த்தம் 23. அவிட்டம் - சங்காபிஷேகம் 24. சதயம் - பன்னீர் 25. பூரட்டாதி - சொர்ணாபிஷேகம் 26. உத்திரட்டாதி - வெள்ளி 27. ரேவதி - ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்
001#சூரியபகவான்:- சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி சூரியா போற்றி சுதந்திரா போற்றி வீரியா போற்றி வினைகள் களைவாய் - 002 #சந்திரபகவான்: எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி திருவருள் தருவாய் சந்திரா போற்றி சத்குரு போற்றி சங்கடந் தீரப்பாய் சதுரா போற்றி - 003 #செவ்வாய்பகவான்:- சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு - 004 #புதன்பகவான்:- இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி பதந் தந்தாள்வாய் பண்ணொலியானே உதவியே அருளும் உத்தமா போற்றி - 005 #குருபகவான்:- குணமிகு வியாழக் குரு பகவானே மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய் ப்ரகஸ்பதி வியாழ பர குருநேசா க்ரஹ தோஷமின்றிக் கடாக்ஷித் தருள்வாய் - 006 #சுக்கிரபகவான்: சுக்கிர மூர்த்தி சுபசுகம் ஈவாய் வக்கிரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே - 007 #சனீஸ்வரபகவான்:- சங்கடந் தீரப்பாய் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தாதா - 008 #ராகுபகவான்:- அரவெனும் ராகு ஐயனே போற்றி கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி ராகுக் கனியே ரம்மியா போற்றி - 009 #கேதுபகவான்:- கேதுத்தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி பாவம் தீரப்பாய் வாதம் வம்பு வழக்குகள் இன்றி கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி
*ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு திருமால் மந்திரம் அமையப் பெற்றிருக்கிறது. இது பலரும் அறியாத விஷயமாக இருந்து வருகிறது. அந்தந்த ராசிக்காரர்கள், அந்தந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால், திருமாலின் ஆசி பரிபூரணமாக கிட்டும். அவரின் அனுகிரகம் கிடைத்தாலே நமக்கு செல்வ வளம் அள்ள அள்ள குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும் அல்லவா? செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் மகா லக்ஷ்மியை மனைவியாக கொண்டவராய் விளங்குவதால் இந்த மந்திரம் உச்சரிப்பவர்களுக்கு சகல செல்வ சம்பத்துகளும் விரைவில் உண்டாகும் என்பது ஐதீகம். இதில் குறிப்பாக எந்தெந்த ராசிக்காரர்கள்? எந்த மந்திரத்தை உச்சரித்து பயனடையலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்!!! மேஷ ராசி: செல்வ வளம் பெருகவும், தொழில் மற்றும் வியாபாரம் செழித்து ஓங்கவும், திருமாலின் குறிப்பிட்ட இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வருவதால் பயனடையலாம். இதோ உங்களுக்கான மந்திரம்: ஓம் கேசவாய நம: ரிஷப ராசி: வீட்டில் இருக்கும் வறுமை ஒழியவும், செல்வ யோகம் கிட்டவும், வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையவும் வேண்டி திருமாலின் இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து பயனடையலாம். இதோ உங்களுக்கான மந்திரம்: ஓம் நாராயணாய நம: மிதுன ராசி: வாழ்கையில் இருக்கும் கஷ்டங்கள் யாவும் குறையவும், செல்வ வளம் பெருகவும், நீடித்த வருமானம் கிடைக்கப் பெறவும் இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து பயனடையலாம். இதோ உங்களுக்கான மந்திரம்: ஓம் மாதவாய நம: கடக ராசி: பொருளாதார ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும், பண நெருக்கடி காரணமாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வருவதன் மூலம் பயனடையலாம். இதோ உங்களுக்கான மந்திரம்: ஓம் கோவிந்தாய நம: சிம்ம ராசி: மன பயம் நீங்கவும், வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரவும், தொழில் விருத்தி அடையவும் இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து பயன் பெறலாம். இதோ உங்களுக்கான மந்திரம்: ஓம் விஷ்ணவே நம: கன்னி ராசி: மிகவும் பயனுள்ள மந்திரமாக இந்த மந்திரம் இருக்கும். குடும்பத்தில் இருக்கும் எந்த விதமான பிரச்சனைகளுக்கும் தினமும் இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நிவாரணம் கிடைக்கும். இதோ உங்களுக்கான மந்திரம்: ஓம் மதுசூதனாய நம: துலாம் ராசி: வேலை, தொழில், வியாபாரம் என்று எல்லாவிதமான வருமானம் தரும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு தினமும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது சிறப்பான பலனை தரும். இதோ உங்களுக்கான மந்திரம்: ஓம் த்ரிவிக்ரமாய நம: விருச்சிக ராசி: உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளுக்கும், குடும்பத்தில் செல்வ வளம் நிறைந்திருக்கவும் வேண்டி தினமும் இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நன்மை உண்டாகும். இதோ உங்களுக்கான மந்திரம்: ஓம் வாமநாய நம: தனுசு ராசி: இருப்பதை அனுபவிப்பதே பெரிய போராட்டமாக இருந்திருக்கும். உங்களுடைய வாழ்க்கை நீங்கள் எதிர்பார்த்த மாறி அமைத்துக் கொள்ள இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து பலனடையலாம். இதோ உங்களுக்கான மந்திரம்: ஓம் ஸ்ரீதராய நம: மகர ராசி: இதுவரை இருந்து வந்த குழப்பமான மனநிலை மாறுவதற்கும், செல்வவளம் செழித்து ஓங்கவும் இந்த மந்திரத்தை தினமும் உச்சரிப்பது நலம் தரும். இதோ உங்களுக்கான மந்திரம்: ஓம் ஹ்ருஷிகேசாய நம: கும்ப ராசி: இந்த மந்திரம் வாழ்வில் பெரிய மாற்றத்தை நிச்சயம் உண்டாக்கும். நீங்கள் வாழ்க்கையில் மேன்மை அடையவும், செல்வ வளம் பெருகும் வேண்டி இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வரலாம். இதோ உங்களுக்கான மந்திரம்: ஓம் பத்மநாபாய நம: மீன ராசி: பணப்பிரச்சினை ஏற்பட்டாலும், மன சங்கடமான சூழ்நிலை உண்டானாலும், வளமான வாழ்வு அமையவும் வேண்டி இந்த மந்திரத்தை தினமும் உச்சரிக்கலாம். இதோ உங்களுக்கான மந்திரம்: ஓம் தாமோதராய நம:
(1) பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-) தானியங்கள் வைத்தால் = 5 % (-) (2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-) (3)மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-) (4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-) (5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-) (6)யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-) (8)ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-) (9)தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு கொடுக்க= 86% (10)சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)(11)கர்பஸ்திரிகளுக்கு = 78% (-) (12)ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும் = 70% (-) (13)கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-) (14)அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-) (15)நோயளிகளுக்கு = 93% (-) (16)மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-) (17)திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல். (1)கோயில் மயில்களுக்கு (2)கோயில் காகத்திற்கு (3)கோயில் சேவல்களுக்கு (4)கோயில் யானைகளுக்கு (5)கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு (6)கோயில் பூசாரி (7)பிராமனர்களுக்கு உணவு (8)விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு (9)கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல் (10)அன்னதானத்திற்கு உதவுதல் (11)கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல் (12)கோயில் விளக்கிற்கு எண்ணெய் கொடுத்தல் (13)கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு (14)இறைவனுக்கு பூ மாலை (15)முன்னோர்கள் வழிபாடு (16)மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி (17)ஏழை மாணவர்கள் படிக்க (18)தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல், மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தையும் உணர்ந்து செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம்.
பெண்ணாகப் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் மகிழ்ச்சி உண்டு வீட்டில் பெண்குழந்தை இருந்தால் அந்த வீடு மகாலட்சுமி குடியிருக்கும் வீடாகும் குழந்தை பருவம் முடிந்து பூப்பெய்தியவுடன் குடும்பத்தில் மகிழ்ச்சி இருமடங்காகும் இந்த மகிழ்ச்சி பெண் குழந்தை உள்ள அனைத்து வீடுகளிலும் கொண்டாடப்படுகின்ற ஒரு நிகழ்ச்சி ஆகும் - ஒருசில பெண்கள் மட்டும் ருதுவாகமல் அப்படியே இருந்துவிடுவார்கள் இப்படிப்பட்ட மகளைப் பார்க்கும் தாய் வடிக்கும் கண்ணீர் பார்ப்பவர்களையும் சோகத்திற்கு அழைத்தி சென்றுவிடும் வயதுக்கு வராத பெண்ணும் வெறுப்புடன் வாழ்வாள் இது போன்ற நிலை ஏற்படும் என்பதை குழந்தை பிறந்தவுடனேயே தெரிந்து கொள்ளலாம் - ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5 ஆம் வீட்டிற்குரிய கிரகம் சூரியன் செவ்வாய் ஆகிய மூன்றில் ஒன்று 7ஆம் வீட்டிலிருந்து 7ஆம் வீட்டிற்குரிய கிரகம் பாவியாகி 5ஆம் வீட்டில் அமர்ந்தால் அந்த பெண் ருதுவாக கிரகங்கள் தடையாக இருக்கும் 16 வயதுக்குள் ருதுவாகாத பெண்களையும் பெற்றதாய் தந்தையையும் பயம் தொற்றிக்கொள்ளும் ருதுவாவதில் தாமதம் ஏற்பட்டால் கீழ்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்வதன் வாயிலாக தாமதமின்றி ருதுவாகி வீட்டில் மங்கள நிகழ்ச்சி நடக்கும் பரிகாரம் -1 ========== 16 வயதுக்குமேல் பெண்கள் ருதுவாகாமல் இருந்தால் அந்த நிலையை அகற்ற கருணை காட்டும் தெய்வங்கள் அன்னை,துர்க்கை அம்மன் அங்காளபரமேசுவரி ஆவார்கள் வளர்பிறை ஏகாதசி திதியில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் அல்லது அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு குரு ஹோரையில் சென்று இலுப்பை எண்ணெய்யும் நெய்யும் சேர்த்து ஒன்பது விளக்குகள் போட வேண்டும் இதேபோல் ஒன்பது வளர்பிறை ஏகாதசி திதிகளில் விளக்குப் போட்டு வர ருதுதடையை தெய்வம் நீக்கி அருளும் பரிகாரம் -2 ========== ஆலயம் சென்று வேண்டுதல் செய்ய முடியாதவர்கள் அவர்கள் பகுதியில் உள்ள ஒரு திரு நங்கைக்கு வெற்றிலைப் பாக்குடன் 101 ரூபாய் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றால் 90 நாட்களுக்குள் பூப்பெய்தி விடுவார்கள் பெற்றோர்கள் சோகமும் தீர்ந்துவிடும்
1,7ம் அதிபதிகள் ஏழாம் அதிபதின் ஆட்சிவீட்டில் கூட ஒரே திருமணம். 2, 7, சுக்கிரன் கூடி 6, 8, 12ல் இருப்பதும்; 2, 7, சுக்கிரன் பாவியருடன் கூடி மேற்சொன்ன இடங்களுடன் 1, 3ல் இருப்பினும் தாரதோசம். -. ஏழு சுத்தமாகி சுக்கிரனும் ஏழாம் அதிபதியும் ராகுகேது தவிர்ந்த ஏனையவொருவருடன் கூட ஒரே திருமணம். - 7ல் பாவிகள் இருந்தால் மனைவிக்கு உடல்நலகேட்டினை கொடுத்து விடும். ராகு இருக்கும் பட்சத்தில் மனைவிக்கு சிசு கலையலாம். சூரிய ராகு சேர்க்கை 2ல் இருந்தாலும் மனைவிக்கு தீராத பிரச்சனை. - ராகு, செவ்வாய் 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம். ராகு, சனி 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம். ராகு, சூரியன் 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம். ராகு, சுக்கிரன் 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம். கேது, செவ்வாய் 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம். - கேது, சனி 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம். கேது, சூரியன் 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம். கேது, சுக்கிரன் 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம். சனி, சூரியன் 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம். செவ்வாய், சூரியன் 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம். செவ்வாய், சனி 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம் -. புதன், சனி 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம். கிரகணமடைந்த கிரகங்கள் ஏழில் இருந்தால் திருமணம் ரீதியான பொதுவாழ்க்கை சிறக்காது அல்லது புத்திர சோகம் இருக்கும். - 11ம் வீடு சரமாகி அங்கு களத்திராதிபதி இருந்தால் தீமையும்; 11ம் வீடு ஸ்திர, உபயமாகி அங்கு களத்திராதிபதி இருந்தால் நன்மையும் உண்டாம். - 7, 11ம் அதிபதிகள் பலம்பெற்று திரிகோணத்தில் தொடர்புற்ற சுபர்நோக்க முதல் மனைவி இருக்கும் நிலையில் இன்னொரு திருமணம் செய்வார் (அ) நாடுவார். இவை களத்திர பொதுவிதிகளாகும்
Top