ருது தோஷம் நீங்க….பரிகாரம்

பெண்ணாகப் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் மகிழ்ச்சி உண்டு வீட்டில் பெண்குழந்தை இருந்தால் அந்த வீடு மகாலட்சுமி குடியிருக்கும் வீடாகும் குழந்தை பருவம் முடிந்து பூப்பெய்தியவுடன் குடும்பத்தில் மகிழ்ச்சி இருமடங்காகும் இந்த மகிழ்ச்சி பெண் குழந்தை உள்ள அனைத்து வீடுகளிலும் கொண்டாடப்படுகின்ற ஒரு நிகழ்ச்சி ஆகும்
-
ஒருசில பெண்கள் மட்டும் ருதுவாகமல் அப்படியே இருந்துவிடுவார்கள் இப்படிப்பட்ட மகளைப் பார்க்கும் தாய் வடிக்கும் கண்ணீர் பார்ப்பவர்களையும் சோகத்திற்கு அழைத்தி சென்றுவிடும் வயதுக்கு வராத பெண்ணும் வெறுப்புடன் வாழ்வாள் இது போன்ற நிலை ஏற்படும் என்பதை குழந்தை பிறந்தவுடனேயே தெரிந்து கொள்ளலாம்
-
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5 ஆம் வீட்டிற்குரிய கிரகம் சூரியன் செவ்வாய் ஆகிய மூன்றில் ஒன்று 7ஆம் வீட்டிலிருந்து 7ஆம் வீட்டிற்குரிய கிரகம் பாவியாகி 5ஆம் வீட்டில் அமர்ந்தால் அந்த பெண் ருதுவாக கிரகங்கள் தடையாக இருக்கும் 16 வயதுக்குள் ருதுவாகாத பெண்களையும் பெற்றதாய் தந்தையையும் பயம் தொற்றிக்கொள்ளும் ருதுவாவதில் தாமதம் ஏற்பட்டால் கீழ்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்வதன் வாயிலாக தாமதமின்றி ருதுவாகி வீட்டில் மங்கள நிகழ்ச்சி நடக்கும்
பரிகாரம் -1
==========
16 வயதுக்குமேல் பெண்கள் ருதுவாகாமல் இருந்தால் அந்த நிலையை அகற்ற கருணை காட்டும் தெய்வங்கள் அன்னை,துர்க்கை அம்மன் அங்காளபரமேசுவரி ஆவார்கள் வளர்பிறை ஏகாதசி திதியில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் அல்லது அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு குரு ஹோரையில் சென்று இலுப்பை எண்ணெய்யும் நெய்யும் சேர்த்து ஒன்பது விளக்குகள் போட வேண்டும் இதேபோல் ஒன்பது வளர்பிறை ஏகாதசி திதிகளில் விளக்குப் போட்டு வர ருதுதடையை தெய்வம் நீக்கி அருளும்
பரிகாரம் -2
==========
ஆலயம் சென்று வேண்டுதல் செய்ய முடியாதவர்கள் அவர்கள் பகுதியில் உள்ள ஒரு திரு நங்கைக்கு வெற்றிலைப் பாக்குடன் 101 ரூபாய் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றால் 90 நாட்களுக்குள் பூப்பெய்தி விடுவார்கள் பெற்றோர்கள் சோகமும் தீர்ந்துவிடும்
 
Top