சௌபாக்கியவதி யோகம்

இதில் சொல்லப்பட்டுள்ள விதிகள், பொதுவானவை அல்ல ,, அனைத்தும் விஷேச விதிகள் ஆகும் .
1. பெண் ஜாதகத்தில் இலக்கின்துக்கு 7 , 8 , மிடங்களில் ,பாவ கிரகங்கள் நிற்க ,9 ஆம் ராசியில் சுபர்கள் நிற்க ,மேற்படி தோஷங்கள் ,பலன் அற்றது, மாறாக, நன்மையான பலன்கள் நடக்கும் . பெண்ணும் செஸபாக்கியவதியாக இருப்பாள் .
2. 7 இக்கு உடையவன் ,6 ,இல் நிற்க ,அல்லது 6,7 ,ஆம் மிடத்து அதிபதிகள் ,12- இல் நிற்க , அல்லது 6,7, மிட அதிபதிகள் ஒரே நட்ச்சத்திர சாரத்திலோ , அல்லது இருவரும் ஒரே அம்சத்தில் சேரின் , அந்த பெண் கற்பு ம் ,ஒழுக்கமும் ,அடக்கமும் , பண்பும் ,சேர்ந்த பெண்ணாக இருப்பாள் ,
3 .ஏழுக்கு உடையவன் இலக்கினதிலும் ,ஆறாம் அதிபதி 7 அல்லது 12 இல் இருக்க , 7,12, ஆம் இட அதிபதிகள் ஒரே நவாம்சத்தில் இருக்க ,அல்லது ஒருவரையொருவர் பார்வை செய்ய , இதே பலன் உண்டுபண்ணும் .
4 .மகர இலக்கின ஜாதகருக்கு சந்திரன் தான் நின்ற ராசியில் கடைசி நவாம்சத்தில் ,அதாவது ராசியின் 9- வது பாதத்தில் நிற்க 6 இக்கு உடையவன் பார்வை செய்ய கற்புக்கரசியாகவும் , தர்ம சிந்தனை உடையவர்களாகவும் ,இருப்பாள் .
5 . யவனரின், ஸ்திரி ஜாதகப்படி 7 இக்கு உடையவர் கேந்திரத்தில் ,,நவாம்ச ரீதியாக, 6 இக்கு உடையவன் அம்சத்திலும் ,, 6 இக்கு உடையவன்னுடன் சேர , 12 இக்கு உடையவன் பார்வை பெற ,இந்த கிரக விதிகளில் ,ஏதானும் ஒன்றில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டிக்கு பெருமை
சேர்த்து கற்புக் கரசியாகவும் , இருப்பார்கள் . இந்த மாதிரி பெண்களை தேடி மணப்பது ,ஆண்களுக்கு நன்மை தரும் .
6 .திரிகோண ஸ்தானம் எனப்படும் 1,5,9, ஆகிய ராசிகளில் சுபர் நிற்க ,அந்த பெண் புத்திர பாக்கியத்துடன், சௌக்கியமாக வாழ்வாள் ..
7. இரவில் பிறந்து ,இரட்டை ராசி லக்கினமாக ,அமைந்து அதாவது ரிஷபம், கடகம் ,கன்னி ,விருச்சிகம் ,மகரம் , மீனம் ஏதானும் ஒன்று லகினமாகி அதில் சூரியன் ,சந்திரன் , அமர அந்த பெண் மஹா பாக்கிய யோகம் உண்டாகி ,தனம் , கற்பு , புத்திர ,பௌதிர ,ராஜ யோகத்துடன் வாழ்க்கை நடத்துவார் .
8 . லக்கினம் , ராசி , இரண்டும் இரட்டை ப்படை ராசியில் அமர ,அந்த பெண் சீரும் சிறப்பும் கொண்டு வாழ்வார்கள்
 
Top