கோடீஸ்வர யோகம்

ஒருவர் உலகப் புகழ் பெறக் கூடிய கோடீஸ்வரர் ஆகிப் பலருக்கு உதவி புரியும் ஒரு பிரமுகராக ஆக வேண்டுமானால் அவருடைய ஜனன ஜாதகத்தில் வலிமை பெற்றவர் என்று சொல்லபடுகின்ற ராகு கேந்திரத்தில் தனித்து நின்றிறுக்க அந்த ராகுவுக்கு 7 -ஆம் இடத்தில் மறையவன் என்று சொல்லபடுகின்ற குருவுடன் இசை ஞானி என்று சொல்லபடுகின்ற கேதுவும் கூடி இருக்க வேண்டும் .

இவ்வித அமைப்பில் ராகுவுக்கோ, அல்லது கேதுவுக்கோ , 9- ஆம் ராசியில் புந்தி என்று அழைக்கப்படும் ,புதன் அல்லது
சுங்கன் என்று சொல்லக்கூடிய சுக்கீரனோ இடம் பெற்று இருக்க வேண்டும்
.
ஒருவருக்கு இத்தகைய கிரக அமைப்பு மட்டும் இயற்கையாக ஏற்பட்டு விட்டால் அந்த ஜாதகர் உண்மையில் ஒரு கோடீஸ்வரர் ஆகி விடுவார் .

வல்லரவு கேந்திரத்தில் தனித்து நின்று
மறையவனோடு இசை ஞாணி மருவக்கரனின்
எல்லைஇல்லா நிதிக்கு இறைவான் இவனா என்று
இயம்பு தற்கு ஏதுவாய் இருப்பான் மற்றும்
நல்லவரன்று உரைப்போரில் சுங்கன் புந்தி
நவ கோணத்தில் இருப்பரேல் நிரப்புவீய
இல்லை யென்று உரைப் போர்க்கும் மேலவர்க்கும்
இரு நிதியம் உதவுகின்ற இறைவனாவான் .

கேந்திரம் என்பது ஜனன இலக்கினதிக்கு 1-4-7-10- என்றும் காலப் புருஷ தத்துவம் படி , மேஷம் , கடகம் ,துலாம் , மகரம் என்றும் பொருள் கொள்ளலாம் ,

ஒரு ஜாதகத்தில் குருவும் ,கேதுவும் ,கூடி இருந்தாலும் அல்லது கேதுவை குரு பார்வை செய்தாலும் ,அந்த ஜாதகர் எப்படியும் பெருமை பெரும் வாழ்க்கை கிடைக்கும் என்பது உறுதி
 
Top