ஒரு திசை எந்த பகுதியில் பலன் தரும் என்பதை சொல்லும் ஜோதிட விதி

*ஓம் சரவண பவ!!*
ஒரு திசை எந்த *பகுதியில்* பலன் தரும் என்பதை சொல்லும் ஜோதிட விதி.

1. லக்னம்,சூரியன்,சந்திரன் இவர்களில் யாருக்கு அதிக பலம் உள்ளதோ அவர்களுக்கு கேந்திரத்தில் (1,4,7,10) இருந்து ஒரு கிரக தசை நடந்தினால், தசை *ஆரம்பத்திலியே* பலன் தரும்.பணபர (2,5,8,11) ஸ்தானங்களில் ஒரு கிரகம் இருந்து, தசை நடத்தினால் *மத்திய* பகுதியில் பலன் தரும். ஆபோக்லிய (3,6,9,12) ஸ்தானத்தில் இருந்து ஒரு கிரகம் தசை நடத்தினால் தசையின் *முடிவு* பகுதியில் பலன் தரும்.

2. லக்னத்திற்கு கேந்திரத்தில் நிற்கும் கிரகம், தசை *ஆரம்பத்தில்* பலன் கொடுக்கும்.சூரியனுக்கு கேந்திரத்தில் ஒரு கிரகம் இருந்து தசை நடத்தினால் *மத்திமத்தில்* பலன் கொடுக்கும், சந்திரனுக்கு கேந்திரத்தில் ஒரு கிரகம் இருந்து தசை நடத்தால் *கடைசி* பகுதியில் பலன் கொடுக்கும்.

3. கேந்திரத்தில் நின்ற கிரகம் உச்சம் ஆட்சி பெற்றால் தசை *ஆரம்பத்திலும், கடைசியிலும்* பலன் தரும்..நட்பு, சமம் பெற்றால் *மத்திய* பகுதியில் பலன் தரும். பகை நீசம் பெற்றால் *கடைசி* பகுதியில் பலன் தரும்.
என்றும் ஜோதிடப்பணியில்
Astro Sadaiyappa
8122156377
 
Top