வேல் வைத்தால் வினை தீர்க்கும் முருகன்

வேல் வைத்தால்
வினை தீர்க்கும் முருகன்

கரூரில் இருந்து சுமார் 16 கி.மீ. தூரத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் என்ற ஊரில் 315 படிகளைக் கொண்ட ஒரு சிறிய குன்றின்மேல் (புகழி மலை) பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமானின் மயில் வாகனம் பொதுவாக மற்ற கோயில்களில் அமைந்திருப்பதைப் போல் இல்லாமல், முருகனுக்கு வலப்புறம் தோகையும் இடப்புறம் தலையும் கொண்டிருப்பதாக அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் முருகப் பெருமானுக்கு வேல் வைத்து வழிபடுவது சிறப்பான பிரார்த்தனை. அதனால், சகலவிதமான பாவங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை யாக உள்ளது. ஊரில் மழைப் பற்றாக்குறை, மக்களிடையே ஒற்றுமை இன்மை என்பது போன்ற பொதுவான பிரச்னை ஏற்பட்டால், இங்குள்ள 315 படிகளில் தீபம் ஏற்றி படிபூஜை செய்தால் நல்ல பலன் கிடைப்பதாக ஊர்மக்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
 
Top