விதுர நீதி - 1

ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏

*இன்று முதல் விதுர நீதி தொடர் ஆரம்பம்*

*விதுர நீதி - 1*

மகாபாரதம் நமக்கு கிடைத்த மிகவும் அறிய பொக்கிஷங்களில் ஒன்றாகும் நான்கு வேதங்களுக்கு பின் ஐந்தாவது வேதமாக மகாபாரதம் கருதப்படுகிறது. மகாபாரதத்தில் ஒன்றே கால் லட்சம் ஸ்லோகங்கள் உள்ளன மொத்தம் உள்ள பதினெட்டு பருவத்தில் ஐந்தாவது பர்வமான உத்யோக பருவத்தில் விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு கூறப்பட்டுள்ளது

சஞ்சயன் ஆண்டவரிடத்தில் தூது போய் வந்த பிறகு காலையில் திருதராஷ்ட்ரனை சந்தித்து விவரம் கூறுவதாக சென்றுவிடுகிறான். திருதராஷ்டிரன் தனது ராஜ்யத்தை பாண்டவர்களுக்கு பிரித்துக் கொடுக்க முடியாமல் எண்ணி மிகவும் துன்புறுகிறான். எனவே தூக்கம் வராமல் வாயில் காப்போனை அழைத்து விதுரரை அழைத்து வர ஆணை இடுகிறான். தூக்கம் வராமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கு உபதேசிப்பதே விதுர நீதி ஆகும்.

விதுர நீதியில் மிக நுட்பமான விஷயங்கள் பல சொல்லப்பட்டுள்ளன எவ்வளவு கஷ்டப் படும் மனிதனாக இருந்தாலும் நம்பிக்கையுடன் விதுர நீதி கேட்டால் கவலை நிச்சயமாக நீங்கும் விதுர நீதியை ஆரம்பிக்கும் முன் விதுரர் என்பவர் யார் அவர் ஏன் பூமியில் அவதரித்தார் என்று காண்போம்.

முந்தைய காலத்தில் ஆணி மாண்டவ்யர் என்ற ரிஷி ஒருவர் இருந்தார் அவர் இது சிறு பிராயத்தில் எறும்புகளைப் பிடித்து துன்புறுத்தி விளையாடி வந்தார். பிறகு யோகங்கள் பல செய்து ஆழ்ந்த தியான மார்க்கத்தில் ஈடுபட்டார். ஒரு நாள் அவர் மீது சில குற்றங்கள் சுமத்தப் பட்டு ராஜாவிடம் அழைத்துச் செல்லப்பட்டார் ராஜா அவரை விசாரித்தார் ஆனால் ரிஷி தியானத்தில் ஈடுபட்டிருந்ததால் எதுவும் சொல்லாமல் தியானத்திலேயே ஈடுபட்டிருந்தார்

ராஜா அவரை கழுவில் ஏற்றுமாறு தண்டனை இட்டான் அவருக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது பாதி கழு உடம்பில் ஏறிய பிறகுதான் அவருக்கு பிரக்ஞை வந்தது அக்கம்பக்கத்தில் விசாரிக்கவே அவர் செய்ததாக சொல்லப்பட்ட குற்றம் சொல்லப்பட்டது தான் அந்த குற்றம் செய்யவில்லை என்று எண்ணம் அவருக்கு அப்போது தான் வந்தது

இருப்பினும் தான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை கிடைத்திருக்கிறது என்றால் அதற்க்கு வேறு காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணி தனது சக்தியால் தருமராஜனை அழைத்தார் தருமராஜன் தோன்றவே தனக்கு தண்டளை தரப்பட்டதற்கான காரணத்தை கேட்டார்

அதற்கு தருமராஜன் சிறுபிராயத்தில் எறும்புகளை துன்புருதியதற்காக இந்த தண்டனை தற்போது மன்னனால் தரப்பட்டது என்று கூறினார் அருகில் இருந்தவர்கள் மன்னன் வேறு எதோ தவறு செய்ததிற்காக அல்லவா தண்டனை கொடுத்தான் ஆனால் இங்கு எறும்பை துன்புறுத்தியதை பற்றி கேள்வி படவில்லையே என்று ஆச்சரியப் பட்டார்கள்

ரிஷி தனது சிறுபிராயத்தில் அறியாமல் செய்த தவற்றிற்கு கொடுத்த
தண்டனை சரியானது இல்லை ஆதலால், தர்ம ராஜனை நூறு ஆண்டு காலம் பூலோகத்தில் பிறந்து சுக துக்கங்களை அனுபவிக்க வேண்டும் என்று சாபமிட்டார் அந்த சாபத்தினால் தான் தர்ம ராஜனே விதுரராக அவதரித்தார். விதூர் சொல்லும் அனைத்து வார்த்தைகளும் தர்ம நீதிகள் ஆகும். அவர் எப்போதுமே தர்மத்தை தவிர வேறு எதையுமே கூறியதில்லை

யாரெல்லாம் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் அதுபற்றி நாளை பார்க்கலாம்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏

ஓம் நமோ நாராயணாய 🙏
 
Top