கருட புராணம் பகுதி~09

சொர்க்கத்தை அடையக்கூடியவர்கள் யார்?

மனிதர்களாகப் பிறந்தவர்கள் கொண்ட ஆசைகளின் மூலம் அவர்களின் அறிவு எதற்காக பிறந்தோம்? என்பதை அறிந்து கொள்ளாமல், ஒருவிதமான குழப்பத்தில் அவர்களை உட்படுத்தி, அவர்கள் கொண்ட ஆசைக்கான காரியங்களை செய்ய வைக்கின்றது. மண்ணின் மீதும், பொருட்களின் மீதும், பெண்ணின் மீதும் இச்சைகள் கொண்டவர்கள், அந்த இச்சைகளுக்காக எந்தவிதமான காரியங்களையும் செய்ய துணிகிறார்கள்.

மண்ணின் மீதும், பொருட்களின் மீதும், பெண்ணின் மீதும் இச்சைகள் கொண்டவர்கள் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் தன்னுடைய இச்சையை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டுமே ஈடுபாடு கொண்டு இருக்கின்றார்கள். அந்த ஈடுபாடு அவர்களுக்கு பலவிதமான பாதகங்களையும் உருவாக்க தயக்கம் கொள்வதில்லை. அந்த ஆசை அவர்களுக்கு பலவிதமான துரோகங்களை செய்ய தூண்டுகோளாக இருக்கின்றது. அவர்களுக்கு அந்த துரோகமும் இயல்பான ஒன்றாக மாறிவிடுகின்றது. அவர்களிடம் அதிகாரம் நிறைந்த போலியான பதவிகள் இருக்கின்ற மாதிரி இருப்பார்கள். இழிவான செயல்களை தைரியத்துடன் செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

அவர்களின் வாழ்க்கையில் மதிப்புமிக்க எந்தவொரு செயலும் இருக்காது. இவர்கள் யாவரும் மரணத்திற்கு பின்பு செல்லக்கூடிய இடம் என்பது சொர்க்கம் அல்லாத நரகமாக இருக்கும். ஆசையே அழிவிற்கு வழிவகுக்கும் என்னும் உண்மையை எவர் உலகத்திற்கு எடுத்துரைத்து, வணங்க தக்கவர்களாக வாழ்கின்றார்களோ... அவர்களே இறுதியில் சொர்க்கத்தையும் அடைகின்றார்கள். ஐம்புலன்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மனம் போன போக்கில் வாழாமல், நன்மை மற்றும் தீமை எது? என பகுத்தறிந்து வாழ்கின்றவர் எவரோ, அவரே சகல சௌபாக்கியங்களையும் பெற்று, தன்னுடைய பிறவி பலன்கள் முழுவதையும் அனுபவித்து முழுமை அடைந்து சொர்க்கத்தை அடைகின்றார்.
 
Top