ஒரு வருடத்தில் வரும் 24/25 ஏகாதசிகளும் அதில் விரதம் இருப்பதால் கிட்டும் பலன்களும்

1. உற்பத்தி (ஏகாதசி) - மார்கழி - க்ருஷ்ண (பக்‌ஷம்) - சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

2. மோட்ச - மார்கழி - சுக்ல பக்ஷ- வைகுண்டம் கிடைக்கும்.

3. ஸபலா - தை - க்ருஷ்ண பக்ஷ- பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்).

4. புத்ரதா - தை - சுக்ல பக்ஷ- புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்).

5. ஷட்திலா - மாசி - க்ருஷ்ண பக்ஷ- அன்ன தானத்திற்கு ஏற்றது.

6. ஜயா - மாசி - சுக்ல பக்ஷ- பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்).

7. விஜயா - பங்குனி - க்ருஷ்ண பக்ஷ- ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள்.

8. ஆமலதீ - பங்குனி - சுக்ல பக்ஷ- கோதானம் செய்ய ஏற்றது.

9. பாப மோசனிகா - சித்திரை - க்ருஷ்ண பக்ஷ - பாபங்கள் அகலும்.

10. காமதா - சித்திரை - சுக்ல பக்ஷ- நினைத்த காரியம் நடக்கும்.

11. வருதிந் - வைகாசி - க்ருஷ்ண பக்ஷ- ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், பாரம்மன் தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்).

12. மோஹினி - வைகாசி - சுக்ல பக்ஷ- பாவம் நீங்கும்.

13. அபரா - ஆனி - க்ருஷ்ண பக்ஷ- குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்.

14. நிர்ஜலா (பீம) - ஆனி - சுக்ல பக்ஷ - எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது - பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்).

15. யோகினீ - ஆடி - க்ருஷ்ண பக்ஷ- நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்).

16. சயிநீ - ஆடி - சுக்ல பக்ஷ - தெய்வ சிந்தனை அதிகமாகும் - திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்).

17. சாமிகா - ஆவணி - க்ருஷ்ண பக்ஷ - விருப்பங்கள் நிறைவேறும்.

18. புத்ரஜா - ஆவணி - சுக்ல பக்ஷ- புத்ர பாக்கியம் கிடைக்கும்.

19. அஜா - புரட்டாசி - க்ருஷ்ண பக்ஷ - இழந்ததைப் பெறலாம் - அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்.

20. பத்மநாபா - புரட்டாசி - சுக்ல பக்ஷ- பஞ்சம் நீங்கும்.

21. இந்திரா - ஐப்பசி - க்ருஷ்ண பக்ஷ - பித்ருக்கள் நற்கதி பெறுவர்.

22. பாபாங்குசா-ஐப்பசி- சுக்ல பக்ஷ - கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் பாபங்கள் அகலும்.

23. ரமா - கார்த்திகை - க்ருஷ்ண பக்ஷ - உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்.

24. ப்ரபோதினி - கார்த்திகை - சுக்ல பக்ஷ - பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்.

25. கமலா - (சில வருடங்களில் மட்டும்) - மகாலட்சுமி அருள் கிடைக்கும்

"துவாதசிக்கு சமமான திதி இல்லை"

எங்கும் நிறைந்த விஷ்ணுவே சகல ஜனங்களையும் , ரக்ஷிக்க வேண்டி துவாதசி எனும் திதியாக மாறி கருணை செய்கிறான் என்கிறது வராஹ புராணம்.
" விஷ்ணுவுக்குச் சமமான தெய்வமில்லை. துவாதசிக்கு சமமான திதியும் இல்லை " என்பார்கள். எனவே " துவாதசி அன்று தானம் செய்தாலும், போஜனம் செய்வித்தாலும், பூஜை செய்தாலும் பத்து மடங்கு பலன் தரும்" எனக் கூறுகிறது பத்ம புராணம். தெரிந்தோ தெரியாமலோ செய்த " நம்முடைய ஏழு ஜென்மத்து பாபங்கள் துவாதசியில் ஹரியைப் பூஜித்த அடுத்த க்ஷணம் போய்விடும்" என்கிறது பத்ம புராணம்.
" ஏகாதசி விரதமிருந்து துவாதசியில் துளஸியுடன் கூடிய விஷ்ணு பிரசாதத்தைச் சாப்பிட்டவருக்கு கோடி ஜென்ம பாபம் போய் விடும்" என்கிறது ஸ்காந்தம்.
" ஏகாதசி விரதமே மோக்ஷ ஸாதனம்"
" துவாதசியில் விஷ்ணுவைப் பூஜிப்பவர்கள் சுகமாய் வாழ்வார்கள், முக்தியும் பெறுவார்கள்" எனகிறார் சௌனகர்.
" தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய இந்த மூன்று தினங்களிலும் சந்தன, தாம்பூல, புஷ்ப, ஸ்த்ரீ சங்கமம் ஆகிய நான்கையும் விலக்க வேண்டும் " என்கிறது நாரதீய புராணம்.
 
Top