அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில்

🔔🔔🔔🔔✡️🔔🔔🔔🔔

********************************


*🛕 இன்றைய திருத்தலம்.. இடது தொடையில் மகாலட்சுமி.. வலது கையில் அபயஹஸ்தம்..!!*

*🌹அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில்...!!*


********************************

*பகிர்வு.....✍🏻*

*மகிழ்ச்சி குரூப்ஸ்..📿*


☄️☄️🌹🌹🌹🌹☄️☄️


🛕 திருத்தலம் பகுதியில் நாம் இன்று அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

🛕இந்த கோயில் எங்கு உள்ளது?

🛕திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் என்னும் ஊரில் அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது.

🛕இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

🌹திருச்சியிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் ஸ்ரீரங்கம் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இத்திருக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

🌹இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

🌹பொதுவாக கிழக்கு திசையை நோக்கி அமைந்திருக்கும் பெருமாள், இத்திருக்கோயிலில் மேற்கு திசையை நோக்கி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

🛕அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் சுமார் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர், மகாலட்சுமியை தன் இடது தொடையில் உட்கார வைத்து ஆலிங்கன நிலையிலும், வலது கையில் அபயஹஸ்தம் காட்டியும் அருள்பாலிக்கிறார்.


🛕அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயிலின் தல விருட்சமானது வன்னி மரம் ஆகும்.


🌹வேறென்ன சிறப்பு?

🛕முன்காலத்தில் இப்பகுதி காடாக இருந்த போது, யானைகளின் தொந்தரவை சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாடினர்.

🌹அப்போது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, நரசிம்மருக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்தனர். பின், யானைகளின் தொந்தரவு குறைந்தது. எனவே இங்குள்ள பெருமாள் காட்டழகிய சிங்கர் என அழைக்கப்பட்டார்.

🛕என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

🛕வைகாசி மாதம் நரசிம்ம ஜெயந்தி, ஆனி மாதம் வருஷத் திருநட்சத்திரம், ஆடி மாதம் ஜேஷ்டாபிஷேகம் போன்ற திருவிழாக்கள் நடைபெறும்.

🛕பிரதோஷ தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.


🛕எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

🛕இத்திருக்கோயிலில் பிரதோஷ காலங்களில் வழிபாடு செய்தால் உத்தியோகம் கிடைக்கும், மகப்பேறு உண்டாகும், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

🛕இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

🛕அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.


🔷🔆🔷🔆🔷🔆🔷🔆🔷
 
Top