விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் 10

ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏

*விதுரநீதி 10*

*விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்*

தெரிந்து கொள்ளவேண்டிய ஆறு - விதுர நீதி தொடர்ச்சி

விதுரர் தொடர்ந்து, உறங்காமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கு மேலும் உபதேசிக்கிறார். இந்த உபதேசம் இப்போதும் நமக்கு உபயோகமுள்ளதாக உள்ளது.

1. உயர்நிலைக்கும் செல்வத்திற்கும் ஆசைபடுவர்கள் இதை ஆறையும் விட்டுவிட வேண்டும்.
அதிக நித்திரை
மயக்கம் அல்லது மந்தம்
பயம்
கோபம்
சோம்பல்
எந்த காரியத்தையும் முடிக்காமல் நீட்டிக்கொண்டே செல்லுதல்.

2. இந்த ஆறு பேரின் நட்பை எப்படி ஓட்டை உள்ள படகிலிருந்து உடனே தப்பித்துக் கொள்ள நினைப்போமோ அவ்வாறு உடனடியாக விட்டு விட வேண்டும்.

எல்லாம் தெரிந்திருந்தும் எதையும் கற்றுக் கொடுக்காத ஆச்சார்யன்/ குரு
வேதத்தை கற்றுக்கொள்ளாமல் யக்கியம் செய்ய வருபவர்
இன்சொல் பேசாத மனைவி
ரட்சிக்க வேண்டிய ஆட்கள் இருந்தும், நம்மை காக்காமல் தூங்கிகொண்டிருக்கும் ராஜா
வீட்டை விட்டு வெளியே செய்யும் தொழிலை, வீட்டுக்குள்ளேயே செய்ய நினைக்கும் சோம்பேறி.
காட்டுக்குச் சென்று தவம் செய்ய நினைக்கும் நாவிதன்.

3. இந்த ஆறை எப்போதும் விட்டு விடக்கூடாது

சத்யம்
தானம்
சோம்பலின்மை
பொறாமை படாமல் இருத்தல்
பொறுமை
தைரியம்

4. இந்த ஆறும் ஜீவ லோகத்தில் எப்போதும் சுகமே தரும்.

தின பண வரவு
எப்போதும் ஆரோக்கியம்
பிரியமான மனைவி
பிரியமாக பேசும் மனைவி
நம் சொல் கேட்கும், நமது வசத்தில் உள்ள பிள்ளை
நாம் படித்திருப்பதற்கு தகுந்தாற்போல் நல்ல சம்பாத்தியம் கொடுக்கும் வேலை.

5. இந்த ஆறையும் ஜெயித்தே தீர வேண்டும்.

காமம்
கோபம்
பேராசை
கர்வம்
பொறாமை
மயக்கம்

6. இந்த ஆறு வகைபட்டவரும் பிறரை நம்பி வாழ்பவர்கள்

திருடர்கள் (முட்டாளை நம்பி)
வைத்தியர்கள் (வியாதி பிடித்தவர்களை நம்பி)
வேசிகள் (காம வசப்பட்ட ஆண்களை நம்பி)
யக்கியம் செய்யும் பிராமணர்கள் (எஜமானரை நம்பி)
ராஜா (சண்டை செய்யும் வீரர்களை நம்பி)
பண்டிதர்கள் (புத்தி இல்லாதவர்களை நம்பி)

7. கீழ்க் கண்டவற்றை முகூர்த்தம் தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பசு
மனைவி (எப்போதும் பரிவுடன் நடத்த வேண்டும்)
சேவகன் (சேவகன் எஜமானரின் இசைவுக்கு ஏற்ப எப்போதுமே நடந்து கொள்ள வேண்டும்)
நெற்பயிர்
கல்வி (தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும்)
நம்மை விட தாழ்ந்தவர்கள் (இவர்கள் எப்போது காலை வாரி விடுவார்கள் என்று தெரியாது)

8. இந்த ஆறு பேருக்கும் நன்றி காட்ட மாட்டார்கள்

கற்ற பின் ஆசார்யன், குரு
திருமணம் ஆனவுடன் தாய்
காம இச்சைக்குப் பிறகு பெண்
வேலையை செய்து முடித்துவிட்ட வேலை ஆள்
ஆற்றை கடந்த பின் ஓடம்
வைத்தியம் முடிந்தவுடன் வைத்தியர்.

இவ்வாறு விதுரர் நீதியில் திருதராஷ்டிரனுக்கு நீதி உபதேசிக்கப் பட்டுள்ளது. அடுத்து விதுரர் என்ன சொன்னார் என்று அடுத்த அத்தியாத்தில் காண்போம்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏

ஓம் நமோ நாராயணாய 🙏
 
Top