மாற்றம் இல்லாமல் வளர்ச்சி இல்லை

மனமாற்றம் செய்ய முடியாதவனால்,. எதையும் மாற்ற முடியாமல் போய்விடும்

எனவே சில பண்புகளையும் ,
பழக்க வழக்கங்களையும், மாற்றி முயற்சித்துப்பார்.,

வாழ்க்கையில் மாற்றங்கள் அதுவாய் நிகழும்.,

அதுவும் சிறப்பாய் அமையும்.,

சிலவற்றை இழந்தால் தான் ,சிலவற்றை பெற முடியும்..,

அதிகாலை எழுந்து பார், தூக்கத்தை இழப்பாய்., சுறுசுறுப்பை பெறுவாய்.

தனிமையில் சிந்தித்துப்பார்., தவறுகள் குறையும்., நிறைகள் அதிகரிக்கும்.

பசியில் இருந்து பார், சோம்பேறித்தனம் குறையும் .,
உழைப்பு கூடும்.

தோல்வியை சந்தித்து பார்,
அலட்சியம் குறையும்,
உத்வேகம் கூடும்.

அவமானத்தை ஏற்றுப்பார்,
ஆணவம் குறையும்,
வெறித்தனம் வேலையில் கூடும்.

மன்னித்து பார்,
பகைமை குறையும்.,
உற்றமும் ,சுற்றமும் கூடும்.

ஆடம்பரத்தை கைவிட்டுப்பார்,
செலவுகள் குறையும்.,
சேமிப்பு கூடும்.

தான் என்ற அகந்தையை
விட்டுப் பார்.,
தனிஒருவன் என்பது மறைந்து,
தலைவன் என்று ஆகலாம்.,

இனிய நற்காலை வணக்கம்..!!

மகிழ்வித்து ஆனந்தமாய் இரு..!!
 
Top