சில ஆன்மிக சாஸ்திர குறிப்புகள்!

(1) செவ்வாய் கிழமை எவரிடமும் கடன் வாங்குவதும், பத்திரத்தில் கையாழுத்திடவும் கூடாது.
-காலப் பிரகாசிகா

(2) முதல் திருமணம் செய்வதற்கு கார்த்திகை மாதம் கூடாது. மறுமணம் செய்வதற்கு கார்த்திகை மாதம் சிறந்தது.
-விதான மாலை

(3) சந்திரன் ரோகினியில் சஞ்சாரம் செய்யும் காலத்தில், அந்த நட்சத்திர நாழிகையில் பாதியை நீக்கி, மீதியிருப்பதில் முதல் பாதியில் எந்த காரியம் செய்தாலும், தடை, தாமதம் இல்லாமல் வெற்றி கிடைக்கும்.
- மணி கண்ட கேரளம்

(4) கனவில் சுடுகாட்டைக் கண்டால் விரைவில் திருமணம் உண்டாகும்.
- கனவு பலன்கள்

(5) வீட்டின் இடது புறத்தில் இருக்கும் மரங்களை விட, வலதுபுறத்தில் இருக்கும் மரங்கள் உயர்வாக இருக்க வேண்டும்.
- வாஸ்து சாஸ்திரம்.

(6) ஜீவன் தந்தையிடமிருந்து விந்து வடிவாய் தாயிடம் செல்வது முதல் பிறப்பு. தாயிடமிருந்து இந்த பூமியில் பிறப்பது இரண்டாவது பிறப்பு. பூமியிலிருந்து வின்னுலகம் செல்வது மூன்றாவது பிறப்பு. ஆக மரணமும் ஒரு பிறப்பே!
- ஐதரேயோப நிஷத்து

(7) பெண்கள் ஓம் என்பதை கூறக் கூடாது, ஹ்ரீம் என்று கூற வேண்டும்.
- பூஜா கல்ப பஞ்சகம்

(8) இரவில் பால் சாதம் ஆயுள் விருத்தி, இரவில் தயிர் சாதம் ஆயுள் குறையும்.
-சிவமகா புராண சாஸ்திரம்

(9) அரளி பூக்களில் மஞ்சள் நிறம் அல்லது பொன் நிறப்பூக்கள் கொண்டு தெய்வத்திற்கு அர்ச்சனை செய்ய முதிர் கன்னி திருமணமும், கடன்களும் தீரும்.
-மஹாபாரதம்.......
 
Top