சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் உள்ள வித்தியாசம்

*சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் உள்ள
வித்தியாசம்..?*
-
சிற்றின்பம் – இது நிலையற்றது
பேரின்பம் – இது நிலையானது
இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றிப் பார்ப்போம்
01. படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.
*படைத்தவனால் ஈர்க்கப் பட்டால் பேரின்பம்.*
02. படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.
*படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.*
03. படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.
*படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.*
04. என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.
*இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.*
05. நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.
*நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.*
06. அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.
*அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.*
07. செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.
*செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.*
08. செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.
*செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.*
09. புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.
*அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.*
10. இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி
அடையாதது சிற்றின்பம்.
*வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.*
11. நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.
*நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.*
12. உடலோடு மனதை தொடர்புப் படுத்துவது சிற்றின்பம்.
*உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.*
13. இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.
*துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.*
14. எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.
*எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.*
15. பலவீனம்., நோய்., துன்பம்., மரணம் தருவது சிற்றின்பம்.
*மரணமில்லாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.*
16. பயம்., சஞ்சலம்., சந்தேகம்., குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.
*பயமறியாதது., ஸ்திரமானது , தூய்மையானது பேரின்பம்.*
17. சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.
*எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.*
18. பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.
*தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.*
19. அளவுடையது., முடிவுடையது சிற்றின்பம்.
*அளவற்றது., முடிவிலாதது பேரின்பம்.*
20. அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.
*அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.*
21. அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.
*அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.*
22. பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.
*பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.*
23. முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.
*முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.*
24. இரக்கமற்றது., ஒழுக்கமற்றது சிற்றின்பம்.
*கருணையுடையது., தர்மமானது பேரின்பம்.*
25. உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.
*உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.*
26. புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.
*புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.*
27. மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.
*மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.*
28. மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.
*மரணத்தையும் வெல்வது பேரின்பம்.*
29. மனமாய் இருந்தால் சிற்றின்பம்.
*மனதைக் கடந்தால் பேரின்பம்.*
30. வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.
*எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.*
31. பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.
*மொத்தமாய் கண்டால் பேரின்பம்.*
32. அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.
*அகங்காரம் துறந்தால் பேரின்பம்.*
33. தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.
*அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.*
34. ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.
*ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.*
35. துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.
*துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.*
36. ஜீவராசிகளால் தர முடிந்தது சிற்றின்பம்.
*இறைவனால் தரப் படுவது பேரின்பம்.*
37. உலகைப் பற்றினால் சிற்றின்பம்.
*இறைவனைப் பற்றினால் பேரின்பம்.*
38. பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.
*தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.*
39. இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.
*இன்பமான இன்பமே பேரின்பம்.*
40. அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.
*ஞானம் விரும்புவது பேரின்பம்.*
41. பெற்று மகிழ்வது சிற்றின்பம்.
*கொடுத்து மகிழ்வது பேரின்பம்.*
42. சக்தியை இழப்பது சிற்றின்பம்.
*சக்தியாய் மாறுவது பேரின்பம்.*
43. பற்றுக் கொள்வது சிற்றின்பம்.
*பற்றற்று இருப்பது பேரின்பம்.*
44. மாறுவது, தாவுவது சிற்றின்பம்.
*மாறாதது நிலைத்தது பேரின்பம்.*
45. நிலையற்றது சிற்றின்பம்.
*நிரந்தரமானது பேரின்பம்.*
46. உலக வாழ்க்கை வாழ்வது நிலையற்ற சிற்றின்பம்.
*இறைவன் திருவடியை அடைவது நிலையான பேரின்பம்.*
47. இல்லற வாழ்க்கை வாழ்வது சிற்றின்பம்
*இல்லறத்தில் இருந்து கொண்டு பரம் பொருளை நினைத்து வாழ்வது பேரின்பம்
 
Top