சிகப்பு அரிசி வகைகள்

சிகப்பு அரிசி வகைகள்
1.மூங்கில் அரிசி : மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும். மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

2. கருப்பு கவுனி அரிசி : மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். புது மாப்பிள்ளைகான விருந்துணவு அரிசி. இதன் கஞ்சி குடித்தால் குதிங்கால் வலி நீங்கும் .

3.சிவப்பு கவுனி அரிசி : இது ஒரு பலகார அரிசி. இட்லி,ஆப்பம், பணியாரம் செய்ய ஏதுவானது . குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும் .கருவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும் .

4. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடலை பலபடுத்தும் மாமருந்து . திருமணத்திற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.

5. பூங்கார் அரிசி : மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி . சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

6. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல் சரியாகும். புற்று நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டும் என ஆய்வுகள் நடைபெற்று வருகிறது .

7. கருங்குறுவை அரிசி : சித்தர்கள் அருளியது. இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

8.நவரா அரிசி : நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவாக கருதப்படுகிறது. நரம்பு தசைக் கோளாறுகளை குணப்படுத்தப் கேரள பாரம்பரிய மருத்துவத்தின் சிறப்பு சிகிச்சையான (Navarakizhi) பயன்படுத்தப்படுக்கிறது. மூட்டுகளின் விறைப்பை நீக்குகிறது, உடற்கழிவுகளை சுத்தம் செய்கிறது மற்றும் இரத்த ஓட்டம் சீராக உதவுகிறது.

9. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்ட அரிசி . மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
10. குள்ளகார் அரிசி : இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்.
11. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும்.
12. குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும். சிறுநீரகத்தின் செயல்பாட்டைச் சரிப்படுத்தும்.
13. குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும்.
14. பிசினி அரிசி : மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். பூப்பெய்தும் வயதினருக்கு ஏற்ற அரிசி.
15. சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் .
16.கைவரை சம்பா/கைவாரி : உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். இதில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்.

17. நீலம் சம்பா அரிசி : இரத்த சோகை நீங்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அரிசி.

18. சிவப்பு கார் அரிசி : இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. தோல் நோய் சரியாகும். வாதம் சம்பந்தமான நோய்க்கும், கரப்பான் களுக்கும் மருந்தாகும்.

19. கருத்தக்கார் அரிசி : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

20. வாலான் / வாடன் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும்.

21.கல்லுண்டைச்சம்பா : இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்.

22. கொத்தமல்லி சம்பா அரிசி : இரத்தம் உறைதலைக் கட்டுப்படுத்தும்


வெள்ளை அரிசி வகைகள்
1. சீரகச் சம்பா அரிசி : அழகு தரும். நோய் எதிர்ப்பு சத்தி கூடும். சிறுவாத நோய்களைக் குணமாக்கும், இனிப்பு சுவையுள்ளது. சாப்பிட தூண்டும்.

2. தூய மல்லி அரிசி : உடல் உள் உறுப்புகள் வலுவாகும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் அரிசி . பெண்களுக்கு ஏற்ற அரிசி.

3. கிச்சிலி சம்பா அரிசி : இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும். தினசரி உணவிற்கு ஏற்ற அரிசி .

4. இலுப்பைப்பூ சம்பா அரிசி : சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். மூட்டு வலி, பக்க வாதம் நரம்பு பிரச்சனை போன்ற நோய்க்களுக்கான மருந்து.

5. தங்கச்சம்பா அரிசி : பல், இதயம் வலுவாகும். இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன் ஜொலிக்கும். நோய் எதிர்ப்பு திறனும் கொடுக்கும்.

6. சேலம் சன்னா அரிசி : தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

7. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். கண்பார்வை தெளிவிற்கு ஏற்றது. நோய் எதிர்ப்பு சக்தி தரும்.

8. கைக்குத்தல் நாட்டு பொன்னி: உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது. புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது. உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

9. ராஜமுடி அரிசி : உடல் வலிமை பெருகும் . மைசூர் மன்னர்கள் சாப்பிட்ட அரிசி.

சிறுதானிய வகைகள்

1. திணை : உடலுக்கு வன்மையை கொடுக்கும். வலிமையை பெருக்கும்.

2. வரகு : உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்.

3. சாமை : காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும். வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும்.

4. குதிரைவாலி : தசைகள் எலும்புகள் வலுவாகும். ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பைப் போக்கும்.


இந்த பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்கள் அனைத்தும் எந்தவித உரமோ, பூச்சி கொல்லி மருந்துகளோ இல்லாமலேயே தானாக வளரக்கூடியது . தானே எதிர்ப்பு திறனுடன் வளர்வதால் இவற்றை உண்பவர்களுக்கும் அதே எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது .

பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்களை உண்போம் . ஆரோக்கியத்தைப் பேணி, ஆயுளை அதிகரிப்போம். பாரம்பரிய இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்போம்.
 
Top