கோபம் மற்றும் ஈகோவை விடுவோம் இன்பாமாய் வாழ்வோம்

😠 *கோபம்* 😠

ஒரு பாம்பு அடுப்பாங்கறைகுள் தெரியாம வந்திடுச்சு... உள்ளே உள்ள
பாத்திரங்கள் மேல் மெல்ல ஊர்ந்து போகும்போது எதோ ஒரு கூர்மையான பொருளால் அதோட உடலில் சிறு காயம் ஏற்பட்டிடுச்சு...
உடனே சட்டுன்னு கோபத்தோட அங்க இருந்த ஒரு கூரான பொருளை கடிக்க ட்ரை பண்ணிச்சு...
அது #கத்தி
இப்போ கத்தி அறுத்ததால் அதன் வாய் பகுதியில் கிழிச்சு ரத்தம் வர ஆரம்பிச்சது. பாம்புக்கு கோபம் தலைக்கேறி.... அந்த கத்தியை சுற்றி வளைத்து #கொல்லும் நோக்கத்தோட சுத்தி இறுக்க ஆரம்பிச்சது...

தன் பலம் முழுவதையும் சேர்த்து.....
என்ன ஆச்சு...
முழு உடலும் கத்தியால் வெட்டப்பட்டு, காயம் ஆகி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது... என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கிறதுக்கு முன்னால அந்த பாம்பு தனது செயலாலேயே உடல் துண்டாக்கப்பட்டு இறந்து போச்சு...!!!.

இதே போல தான் நாம் நமது வாழ்க்கையிலும் மத்தவங்க கிட்ட தேவையில்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்திட்டு அதன் வீரியம்

நம்மையே தாக்கும் போது நாம பண்ணின தவறு என்னங்கிறதை உணர்ந்து அதிலிருந்து விலகி போகாமல், மேலும் மேலும் கடினமான வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பிச்சு அதன் எதிர்விளைவால்

நமது மன நிம்மதியை இழந்து.... தேவையற்ற கோபம், பதட்டம், மன அழுத்தம் இவற்றால் நமது உள்ளம் மற்றும் உடல் நலத்தையும் கெடுத்துக்கொண்டு நம்மையே இழந்து விடுகிறோம்....

#கோபம்_மற்றும்_ஈகோவை_விடுவோம்_இன்பாமாய்_வாழ்வோம்

இந்த நாளும் இனிய நாளே....
 
Top