குல தெய்வத்தை வசியம் செய்யும் முறை

குல தெய்வம் வசியம் செய்ய ஒரு பௌர்ணமி நாளில் கரு மஞ்சள் செடிக்கு காப்பு கட்டி அந்த மஞ்சளை எடுத்து அரைத்து அதனுடன் ...

ஜவ்வாது
அத்தர்
அரகஜா
புனுகு
ஜாதிக்காய்
ஜாதி பத்திரி
வெட்டிவேர்
பச்சை கற்பூரம்

அதனுடன் சித்தாமணக்கு எண்ணெய் விட்டு பதம் வரும் வரைக்கும் நன்றாக 2 ஜாமம் வரைக்கும் அரைக்க வேண்டும்

இந்த மையை காந்தம் ஒட்டாத டப்பியில் பதனம் செய்து வைக்க வேண்டும் பூஜையின் போது குல தெய்வத்திற்கு ஒரு வாழை இலை போட்டு அதன் மேல் ஒரு செப்பு தகடு வைத்து அதன் மேல் கருப்பு மஞ்சள் மூன்று எடுத்து வைத்து அதில் மேற்கண்ட அஞ்சனத்தை மஞ்சள் மேல் தடவி பூஜைக்கு தேவையான படையலை படைத்து கொண்டு மந்திரம் ஜெபிக்க ஆரம்பிக்க வேண்டும் .

குல தெய்வ வசிய மந்திரம்

ஓம் ஸ்ரீம் அம் உம் வம் லம் சிங்

ஐயும் கிலியும் சவ்வும் ஜம் ஜம்

பம் யம் ரம் மஹா (குலதெய்வத்தின் பெயர் )

சர்வ தனமே சர்வ ஜனமே வா வா வசி வசி ஹூம்பட் நமக .

குல தெய்வம் வசியம் செய்ய ஞாயிற்றுக்கிழமை உகந்தது இதற்கு யந்திரங்கள் எதுவும் கிடையாது இந்த கருமஞ்சள் மற்றும் மேற்கண்ட அஞ்சனம் போதுமானது இதனால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும் நெடுநாட்களாக நினைத்த காரியங்கள் நடக்காமல் தடைபட்டு வந்தால் குல தெய்வத்தின் அருளால் சகலமும் தடைகள் விலகி நல்ல வாழ்க்கை அமையும்
 
Top